செய்திகள் :

அதிமுக விவகாரம் தேர்தல் ஆணையம் விசாரிப்பதில் மகிழ்ச்சி: கேபி முனுசாமி

post image

கிருஷ்ணகிரி:அதிமுக விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விசாரிப்பதில் மகிழ்ச்சியே என்று அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் அதிமுகவின் உள் அமைப்பான ஜெயலலிதா பேரவையின் சார்பில், திண்ணைப் பிரச்சாரத்தை அதிமுக துணை பொதுச்செயலாளரும் வேப்பனப்பள்ளி சட்டப்பேரவை உறுப்பினரான எம்.எல்.ஏ. கே.பி. முனுசாமி தொடக்கி வைத்து, செய்தியாளர்களுடன் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:

மிகப்பெரிய அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையன், ஏற்றத்தாழ்வுகளையும் சந்தித்தவர். ஜெயலலிதா, செங்கோட்டையனை மதிப்பும் மரியாதையுடன் நடத்தினார்.

அதே மதிப்புடன் எடப்பாடி பழனிச்சாமி செங்கோட்டையனை அழைத்துச் செல்கிறார். செங்கோட்டையன் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துசாமி, அதிமுகவை காட்டிக் கொடுத்துவிட்டு எதிரணியில் சேர்ந்து, தற்போது அமைச்சராக இருக்கிறார்

இதையும் படிக்க: திருப்பரங்குன்றம் மலையைக் காக்க சென்னையில் பேரணி ஏன்?- உயர் நீதிமன்றம் கண்டனம்!

அதேபோல் எவ்வளவு சோதனைகள் வந்தாலும் செங்கோட்டையன், அதிமுகவிற்கு உறுதுணையாக இருப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. எந்த நிபந்தனையும் இல்லாமல் இணையத் தயார் என ஓபிஎஸ் கூறிவிட்டு, அடுத்த கணம் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்கிறார்.

ஓபிஎஸ் அதிமுகவை எதிர்த்து தேர்தல் களத்தில் நிற்கிறார், எதிரிகளுடன் சேர்ந்து எங்களை எதிர்க்கிறார். எம்ஜிஆர் மறைவுக்குப் பின் ஜானகி அம்மாள் பெருந்தன்மையுடன் விலகிக்கொண்டார். தனக்கு உரிமை உள்ள தலைமைக் கழகத்தையே வழங்கிவிட்டுச் சென்றார்.

ஆனால், கட்சியில் அதிகாரத்தை அனுபவித்துவிட்டு வசதிகளை பெருக்கி கொண்ட சிலர், இந்தக் கட்சியை சிதைக்க நினைக்கிறார்கள்.

அதிமுக விவகாரம் குறித்து, தேர்தல் ஆணையம் விசாரிப்பது மகிழ்ச்சியே. எங்களிடம் அதிக எண்ணிக்கையில் தொண்டர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளனர்.

தினகரன், ஜெயலலிதாவால் வெளியேற்றப்பட்டவர். தற்போது, தனிக் கட்சி நடத்தி வருகிறார். இவர், அதிமுக குறித்த கருத்து தெரிவிக்க என்ன உரிமை உள்ளது. எம்ஜிஆரால் அடையாளம் காணப்பட்ட இரட்டை இலை சின்னத்தை முடக்க யாராலும் முடியாது. அதிமுகவில் துரோகிகள் இருப்பதாக செங்கோட்டையன் கூறியிருப்பதை அவரைதான் கேட்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

பனிச் சரிவில் சிக்கிய வீரர் பலி! ஒரே வாரத்தில் 4வது மரணம்!

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் விளையாட்டின் போது பனிச் சரிவில் சிக்கிய பனிச்சறுக்கு வீரர் பலியாகியுள்ளார்.கொலராடோவின் க்ரெஸ்டடு பட்டே பகுதியைச் சேர்ந்த சாரா ஸ்டெயின்வாண்ட் (வயது 41) என்ற பனிச்சறுக்... மேலும் பார்க்க

திரிணாமுல் காங். நிர்வாகி அடித்துக் கொலை!

மேற்கு வங்கத்தின் பிர்பூம் மாவட்டத்தில் திரிணாமுல் காங். நிர்வாகி ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டுள்ளார்.பிர்பூம் மாவட்டத்தின் கன்கராத்தாலா பகுதியிலுள்ள பேருந்து நிறுத்ததின் அருகில் திரிணாமுல் காங். நிர்வ... மேலும் பார்க்க

வழக்கறிஞர் வேடமிட்டு நீதிமன்றத்தில் கும்பல் தலைவனை சுட்டுக்கொன்றவர் கைது!

இலங்கையில் பிரபல கொலைகார கும்பலின் தலைவனை வழக்கறிஞர் வேடமிட்டு நீதிமன்றத்தினுள் நுழைந்து துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி மற்... மேலும் பார்க்க

மகாகும்பமேளா: புனித நீராடிய ஆளுநர் ஆர்.என்.ரவி

பிரயாக்ராஜில் நடைபெறும் மகாகும்பமேளாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று(சனிக்கிழமை) புனித நீராடினார்.இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், பாரதம் மற்றும் உலகம் முழுவதிலும் இர... மேலும் பார்க்க

கண்ணிவெடி விபத்தில் இந்திய வீரர் படுகாயம்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் எதிர்பாராத விதமாக நிகழ்ந்த கண்ணிவெடி விபத்தில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய எல்லைக் கோடு உள்ள நாங்கி-தகேரி பக... மேலும் பார்க்க

ஊரக வேலைத் திட்ட மோசடி குறித்து விசாரணை நடத்த வேண்டும்: ராமதாஸ்

தமிழ்நாட்டில் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து தமிழக அரசு உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் 2024-25 ஆம் ஆண்டில் ... மேலும் பார்க்க