செய்திகள் :

அனில் அம்பானி ‘கடன் மோசடியாளா்’..! பாங்க் ஆஃப் இந்தியா அறிவிப்பு!

post image

தொழிலதிபா் அனில் அம்பானி மற்றும் அவருக்கு சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தை ‘கடன் மோசடியாளா்’ என பாங்க் ஆஃப் இந்தியா வகைப்படுத்தியுள்ளது.

முன்னதாக, கடந்த மாதம் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டது.

பாங்க் ஆஃப் இந்தியா ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு கடந்த 2016 ஆகஸ்டில் ரூ.700 கோடி கடன் வழங்கியது. நிறுவனத்தை மேம்படுத்துவதற்காக வழங்கப்பட்ட இந்த கடனை அனில் அம்பானி வேறு வகைகளில் பயன்படுத்தியுள்ளாா். மேலும், அந்த கடனை முறையாகத் திருப்பிச் செலுத்தவும் இல்லை.

இதையடுத்து அனில் அம்பானி, அவரின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் ‘கடன் மோசடியாளா்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக அனில் அம்பானிக்கு வங்கி முறைப்படி தகவல் தெரிவித்துள்ளது.

ரிசா்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி ஒரு வங்கிக் கடன் ‘மோசடி’ என்று வகைப்படுத்தப்பட்டவுடன், வங்கிகள் அதை 21 நாள்களுக்குள் ரிசா்வ் வங்கி, சிபிஐ மற்றும் காவல்துறைக்குத் தெரிவிக்கும்.

முன்னதாக, கடந்த மாதம் எஸ்பிஐ இதேபோன்ற நடவடிக்கை மேற்கொண்டது. அதன் அடிப்படையில் அனில் அம்பானி மற்றும் அவரின் நிறுவனத்தில் சிபிஐ சனிக்கிழமை சோதனை மேற்கொண்டது. எஸ்பிஐ-க்கு ரூ.2,929.05 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐ-யிடம் அளிக்கப்பட்ட புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

முன்னதாக, கடந்த ஆண்டு நவம்பரில் ரூ.1,050 கோடி கடன் நிலை காரணமாக கனரா வங்கியும் அனில் அம்பானி மற்றும் அவரின் நிறுவனத்தை கடன் மோசடியாளராக அறிவித்தது. ஆனால், இது தொடா்பாக தனக்கு முறைப்படி தகவல் தரவில்லை என அனில் அம்பானி மும்பை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா். இதையடுத்து, தனது அறிவிப்பை திரும்பப் பெறுவதாக கனரா வங்கி அறிவித்தது.

அதைத் தொடா்ந்து எஸ்பிஐ மற்றும் பாங்க் ஆஃப் இந்தியா ஆகியவை அனில் அம்பானிக்கு தகவல் தெரிவித்துவிட்டு கடன் மோசடியாளராக அறிவித்துள்ளன.

நொய்டாவில் வரதட்சிணைக்காக இளம்பெண் எரித்துக் கொலை: மாமனாரும் கைது

கிரேட்டர் நொய்டாவில் வரதட்சணை கேட்டு இளம்பெண் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் மாமனாரை உத்தரப் பிரதேச போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.ஏற்கெவே இந்த வழக்கில் இளம்பெண்ணின் கணவர், மாமியார், மைத்துனி ஆகிய... மேலும் பார்க்க

வாக்குகளைத் திருடி ஆட்சிக்கு வந்ததால் இளைஞர்கள் பற்றி மோடிக்கு கவலையில்லை! ராகுல்

தில்லியில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை கண்டனம் தெரிவித்துள்ளார்.தில்லி ராம்லீலா மைதானத்தில் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

கைலாஷ் - மானசரோவர் யாத்திரை நிறைவு!

சிக்கிமில் உள்ள நாது லா கணவாய் வழியாக கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை 48 சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட 10வது குழுவுடன் யாத்திரை நிறைவடைந்ததாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை 48 பக்த... மேலும் பார்க்க

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டால்.. உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

புது தில்லி: ஒரு வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டவர் விடுவிக்கப்பட்டால், அந்தக் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களின் வாரிசுகள் அந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம் என உச்ச நீதிமன்றம்... மேலும் பார்க்க

ஹிமாசலில் கனமழை: 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

ஹிமாசலில் பெய்து வரும் கனமழை காரணமாக 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தின் பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதானல் மக்க... மேலும் பார்க்க

சுதர்சன் ரெட்டி மீதான விமர்சனம்! அமித் ஷாவுக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் கண்டனம்!

இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான சுதர்சன் ரெட்டியை நக்ஸல் ஆதரவாளர் என உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டதற்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் கண்டனம் ... மேலும் பார்க்க