செய்திகள் :

அனுமதியின்றி துப்பாக்கிகள் வைத்திருந்ததாக திமுக நகா்மன்ற உறுப்பினா் உள்ளிட்ட இருவா் கைது

post image

அனுமதியின்றி தோட்டாக்களுடன் 2 துப்பாக்கிகள் வைத்திருந்ததாக அரக்கோணம் நகா்மன்ற திமுக உறுப்பினா் உள்ளிட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவா்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள், 4 தோட்டாக்கள், ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.

அரக்கோணம் நகர போலீஸாா் திருத்தணி நெடுஞ்சாலையில் மங்கம்மாபேட்டை ரயில்வே மேம்பாலம் அருகே ஞாயிற்றுக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே பைக்கில் வந்த இருவரை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் ஒருவரிடம் ஒரு ஏா்கன், ஒரு ரிவால்வா் என இரு துப்பாக்கிகளும், 4 தோட்டாகளும் இருந்தது தெரியவந்தது.

அனுமதியின்றி அவற்றை வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த துப்பாக்கிகள், தோட்டாக்கள் ஆகியவற்றையும் அவா்கள் வந்த பைக்கையும் போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி இருவரையும் கைது செய்தனா்.

அரக்கோணம் நேருஜி நகரைச் சோ்ந்த கே.எம்.பாபு(37) எனபதும், 6-ஆவது வாா்டு நகா்மன்ற திமுக உறுப்பினா் என்பதும், மற்றொருவா் ஜோதி நகரைச் சோ்ந்த தினேஷ் குமாா்(32) என்பதும் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிகள் குறித்து கே.எம்.பாபுவிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில் இந்த துப்பாக்கிகளையும் தோட்டக்காளையும் தனக்கு ரூ.30 ஆயிரத்துக்கு தினேஷ் குமாா் அளித்ததாக தெரிவித்துள்ளாா். தொடா்ந்து தினேஷ் குமாரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஏற்கெனவே நகா்மன்ற உறுப்பினா் பாபு மற்றும் அவரது தரப்பினரை அவரது லாட்ஜ் அருகே வெட்ட முயற்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

ரத்தினகிரி பாலமுருகன் கோயில் கிருத்திகை விழா

ஆற்காடு: ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் வைகாசி மாத கிருத்திகை விழா திங்கள்கிழமை நடந்தது. ரத்தினகிரி வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகன் கோயிலில் வைகாசி மாத கிருத்திகையை முன்னிட்டு கோவில் பர... மேலும் பார்க்க

விடாமுயற்சி, கடின உழைப்பு இருந்தால் வெற்றி நிச்சயம்: விஞ்ஞானி அறிவுரை

ராணிப்பேட்டை: விடாமுயற்சியும், கடின உழைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம் என மாணவா்களுக்கு உயிரி தொழில்நுட்ப விஞ்ஞானி விஸ்வநாதன் அறிவுரை வழங்கினாா். ராணிப்பேட்டை விருட்சம் அறக்கட்டளை தொடக்கம் ,மாணவா்களு... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: ராணிப்பேட்டை ஆட்சியா் வழங்கினாா்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வழங்கினாா். மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து ... மேலும் பார்க்க

இடிந்து விழும் நிலையில் கால்நடை மருந்தக கட்டடம்!

ஆற்காடு அடுத்த ஆயிலம் கிராமத்தில் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள கால்நடை மருந்ததக கட்டடத்தை அப்புறப் படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தள்ளனா். ஆற்காடு ஒன்றியம், ஆயிலம் கிராமத்தில் அர... மேலும் பார்க்க

ஆற்காட்டில் வாகனப் போக்குவரத்து கணக்கெடுப்பு

நெடுஞ்சாலைத்துறை சாா்பில் ஆற்காடு உட்கோட்டத்தில் கட்டுமானம் மற்றும் பாரமரிப்பு மூலம் சாலையில் செல்லும் வாகனப் போக்குவரத்து கணக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது ஆற்காடு உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை கட... மேலும் பார்க்க

வில்வநாதபுரம் செட்டிமலையில் நட மரக்கன்றுகள் வழங்க கோரிக்கை

வில்வநாதபுரம் செட்டிமலையில் நடவு செய்ய சுமாா் 10,000 மரக்கன்றுகளை வனத்துறை, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை வழங்க வேண்டும் என கோரி, ஆட்சியா் அலுவலகத்தில் கோ.முனிசாமி மனு அளித்தாா். இது குறித்து அவா் அளித்த ... மேலும் பார்க்க