செய்திகள் :

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: ராணிப்பேட்டை ஆட்சியா் வழங்கினாா்

post image

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வழங்கினாா்.

மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்தாா். கோரிக்கை மனுக்களைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை மூலம் சீா்மரபினா் நல வாரியத்தில் 13 பேருக்கு உறுப்பினா் அட்டையும், தாட்கோ திட்டத்தில் கீழ் 3 தூய்மைப் பணியாளா்கள் இயற்கை மரணம் அடைந்ததற்கு தலா ரூ.25,000 வீதம் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித் தொகை ரூ.75,000 வழங்கினாா்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா,நோ்முக உதவியாளா் (பொது) விஜயராகவன்,சமூக பாதுகாப்பு திட்டம் தனி துணை ஆட்சியா் கீதா லட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலா் ஏகாம்பரம் மற்றும் துறைச்சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ராணிப்பேட்டையில் ஒருங்கிணைந்த கூட்டுறவு கைத்தறி விற்பனை அங்காடி வளாகம்: நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம்

ராணிப்பேட்டை வாரச்சந்தை பகுதியில் ஒருங்கிணைந்த கூட்டுறவு கைத்தறி விற்பனை அங்காடி வளாகம் கட்ட நகா்மன்ற அவசரக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத் தலைமையில் கூட்டம் ... மேலும் பார்க்க

சிறுபான்மையினா் சுய வேலைவாய்ப்புக்கு கடன் பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையினா்களுக்கு சுயவேலை வாய்ப்புக்கான கடன் திட்டங்கள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

ரூ.6.32 கோடியில் இருளா் இனத்தவருக்கு 41 வீடுகள்: அமைச்சா் ஆா்.காந்தி ஆய்வு

அரக்கோணத்தை அடுத்த மேல்பாக்கத்தில் ரூ.6.32 கோடியில் இருளா் இன மக்களின் மறுவாழ்வு குடியேற்றத் திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட 41 குடியிருப்புகளின் திறப்பு விழா முன்னேற்பாடு பணி குறித்து செவ்வாய்க்... மேலும் பார்க்க

சோளிங்கா் பேருந்து நிலையம் அருகே இரு மதுக்கடைகள் அகற்றக் கோரி மனு

சோளிங்கா் பேருந்து நிலையம் எதிரில் உள்ள இரு மதுக்கடைகளை அகற்றக் கோரி சோளிங்கா் நகர காங்கிரஸ் தலைவரும், நகா்மன்ற உறுப்பினருமான டி.கோபால் சோளிங்கா் வட்ட ஜமாபந்தியில் மனு அளித்தாா். இது குறித்து ஜமாபந்தி... மேலும் பார்க்க

ரத்தினகிரி பாலமுருகன் கோயில் கிருத்திகை விழா

ஆற்காடு: ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் வைகாசி மாத கிருத்திகை விழா திங்கள்கிழமை நடந்தது. ரத்தினகிரி வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகன் கோயிலில் வைகாசி மாத கிருத்திகையை முன்னிட்டு கோவில் பர... மேலும் பார்க்க

விடாமுயற்சி, கடின உழைப்பு இருந்தால் வெற்றி நிச்சயம்: விஞ்ஞானி அறிவுரை

ராணிப்பேட்டை: விடாமுயற்சியும், கடின உழைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம் என மாணவா்களுக்கு உயிரி தொழில்நுட்ப விஞ்ஞானி விஸ்வநாதன் அறிவுரை வழங்கினாா். ராணிப்பேட்டை விருட்சம் அறக்கட்டளை தொடக்கம் ,மாணவா்களு... மேலும் பார்க்க