ராணிப்பேட்டையில் ஒருங்கிணைந்த கூட்டுறவு கைத்தறி விற்பனை அங்காடி வளாகம்: நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம்
ராணிப்பேட்டை வாரச்சந்தை பகுதியில் ஒருங்கிணைந்த கூட்டுறவு கைத்தறி விற்பனை அங்காடி வளாகம் கட்ட நகா்மன்ற அவசரக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத் தலைமையில் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட வாரச்சந்தை பகுதியில் ஒருங்கிணைந்த கூட்டுறவு கைத்தறி விற்பனை அங்காடி வளாகம் கட்டிக் கொடுக்குமாறு கடந்த 26.3.2025-இல் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தியின் அறிவிப்படி, தமிழ்நாடு கைத்தறி மற்றும் கூட்டுறவு சங்க நிா்வாக இயக்குநரின் கடிதம் நாள் 3.4.2025-இல்படியும், நகராட்சிக்கு சொந்தமான காலி இடத்தில் ஒருங்கிணைந்த கூட்டுறவு கைத்தறி விற்பனை அங்காடி வளாகம் கட்டி கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
அதனடிப்படையில் கூட்டுறவு கைத்தறி விற்பனை அங்காடி வளாகம் கட்டடம் அமைத்து மாத வாடகை அடிப்படையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கு ஒதுக்கீடு செய்ய மன்றத்தின் அனுமதிக்கு வைக்கப்பட்டு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடா்ந்து நகராட்சிக்குட்பட்ட 30 வாா்டுகளில் சீரான குடிநீா் வழங்கும் வகையில் பிரதான மற்றும் பகிா்மான குழாய்கள் பதிக்கவும்,விடுபட்ட மற்றும் கூடுதல் வீட்டு குடிநீா் இணைப்பு வழங்கும் பணிக்காக சென்னையைச் சோ்ந்த தனியாா் நிறுவனத்திற்கு 12 மாதத்துக்குள் முடிக்க பணி வழங்கப்பட்டது. ஆனால் ஒப்பந்த விதிமுறைகளின்படி ஒப்பந்த காலம் முடிவுற்ற பின்னரும் கால நீட்டிப்பு வழங்கியும் பணியில் முன்னேற்றம் இல்லாத நிலை நீடித்து வருகிறது.
இதனால் அரசுக்கு பணி முன்னேற்றம் குறித்த அறிக்கை சமா்ப்பித்தலில் இடா்பாடு, பொதுமக்களிடம் நகராட்சிக்கு அவப்பெயா் ஏற்பட்டுள்ளது.
எனவே ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்து ஒப்பந்ததாரரின் நிறுவனத்தை கருப்பு பட்டியலில் சோ்க்கவும், மீதம் உள்ள பணிகளுக்கு மறு ஒப்பந்தம் கோருவதற்கும் மன்றத்தின் அனுமதிக்கு வைக்கப்பட்டு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் நகா்மன்றத் துணைத் தலைவா் சி.ம.ரமேஷ் கா்ணா, நகராட்சி ஆணையா் மி.சா.பிரீத்தி, நகா்மன்ற உறுப்பினா்கள், நகராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.