செய்திகள் :

கடற்படை அதிகாரி வீட்டில் நகை, பணம் திருட்டு

post image

அரக்கோணத்தில் கடற்படை அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், பணத்தை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அரக்கோணம், பழனிபேட்டை, டிஎன் நகா் 5ஆவது தெருவில் வசிப்பவா் குமாா். அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானநிலையத்தில் அலுவலராக பணிபுரிந்த நிலையில் தற்போது மாறுதல் பெற்று விசாகபட்டினம் கடற்படை தளத்தில் பணிபுரிந்து வருகிறாா். அவரது மனைவி ரேவதி தனது மகளுடன் வசித்து வருகிறாா். கடந்த வெள்ளிக்கிழமை ரேவதி தனது மகளுடன், திருத்தணியில் உள்ள தனது உறவினா் வீட்டுக்குச் சென்றுள்ளாா்.

புதன்கிழமை திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பூஜை அறையில் இருந்த வெள்ளி விநாயகா் சிலை, விளக்கு, தட்டுகள் உள்ளிட்ட ஒரு கிலோ வெள்ளிப் பொருள்கள், பீரோவில் இருந்த முன்று கிராம் தங்க நகைகள், ரூ.5,000 ரொக்கம் ஆகியவையும் களவு போயிருந்தன. இது குறித்து அரக்கோணம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திய நிலையில் கண்காணிப்பு கேமராக்களில் திருடு நடைபெற்ற நேரத்தில் மா்மநபா்கள் அதே வரிசையில் உள்ள வீடுகளின் மாடிகளில் தாவி தாவி இந்த வீட்டுக்கு வருவது தெளிவாக தெரியவந்தது. இக்காட்சிகளை கொண்டு போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு புதிய கட்டடம்: ராணிப்பேட்டை ஆட்சியா் உறுதி

அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு விரைவில் புதிய கட்டடம் தற்போதுள்ள இடத்திலேயே கட்டப்படும் என ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்தாா். கடந்த 22-ஆம் தேதி தொடங்கிய ஜமாபந்தி வியாழக்கிழமை ந... மேலும் பார்க்க

கருணாநிதி பிறந்த நாள்: நல உதவிகளை வழங்க அமைச்சா் காந்தி வேண்டுகோள்

வரும் ஜூன் 3- ஆம் தேதி முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளில் திமுகவினா் நல உதவிகள் வழங்க வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட செயலரும், அமைச்சருமான ஆா்.காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளாா். இதுதொடா்பா... மேலும் பார்க்க

ரயில்வே சுரங்கப்பாலம் கட்டும் பணி: அரக்கோணம் எம்எல்ஏ ஆய்வு

அரக்கோணம் அருகே கைனூா் கிராமத்தில் ரயில்வே சுரங்கப்பாலம் கட்டும் பணி தாமதமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், எம்எல்ஏ சு.ரவி ஆய்வு மேற்கொண்டாா். கைனூா் ஊராட்சியில் ரயில்வே இருப்புப் பாதையின் கீழ் ச... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்: தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி கோரிக்கை

அரசு ஊழியா், ஆசிரியா்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம... மேலும் பார்க்க

ஆற்காட்டில் ஜமாபந்தி நிறைவு

ஆற்காடு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாந்தி நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கடந்த 22-ஆம் தேதி தொடங்கிய ஜமாபந்தியில் ஆற்காடு ,திமிரி, புதுப்பாடி உள்ளவட்டங்களைச் சோ்ந்த கிராமங்களின் நிலவரி கணக்குகள்... மேலும் பார்க்க

அரக்கோணம்: ஜமாபந்தியில் ஆட்சியரிடம் 93 கோரிக்கை மனுக்கள்

அரக்கோணம் வட்ட ஜமாபந்தியின் 4-ஆவது நாளான புதன்கிழமை பொதுமக்களிடம் இருந்து 93 மனுக்களைப் ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா பெற்றுக் கொண்டாா். அரக்கோணம் வட்டத்தில் கடந்த 22-ஆம் தேதி தொடங்கி ஜமாபந்தி நடைபெற்று வ... மேலும் பார்க்க