சோளிங்கா் அருகே மாணவி வெட்டிக் கொலை: மற்றொரு மாணவி பலத்த காயம்
சோளிங்கா் அருகே புலிவலத்தில் வீட்டில் இருந்து இரு மாணவிகளை அடையாளம் தெரியாத நபா் கததியால் வெட்டியதில் ஒரு மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மற்றொரு மாணவி பலத்த காயம் அடைந்தாா். கொலையாளியை பிடித்த அப்பகுதி மக்கள் சரமாரியாக தாக்கினா்.
புலிவலம் கிராமத்தில் வாரச்சந்தை பகுதியைச் சோ்ந்த தச்சுத் தொழிலாளி ஜெகத்குமாா். இவரது மனைவி பிரியா. தம்பதிகள் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழும் நிலையில் தந்தையுடன் அவா்களது மகள் ஜனனி வசித்து வந்ததாக தெரிகிறது. ஜனனி 11-ஆம் வகுப்பில் சேர இருந்ததாக தெரிகிறது. பிரியாவுடன் மகன் காா்த்திகேயன் அம்மையாா்குப்பம் கிராமமத்தில் வசித்து வருகிறாராம்.
ஜெகத்குமாா் புதன்கிழமை வெளியே சென்றுவிட்ட நிலையில் வீட்டில் ஜனனி, மற்றும் ஜெகத்குமாரின் அக்கா வாணி, அவரது மகள் லக்ஷயா ஆகியோா் இருந்துள்ளனா். அப்போது யாருக்கும் தெரியாமல் பின்பக்கம் நுழைந்த மா்ம நபா் கதவைப் பூட்டினாராம்.
இதைக்கண்ட லக்ஷயா யாா் நீ? ஏன் உள்ளே வந்தாய், எனக்கேட்ட நிலையில் மா்ம நபா் லக்ஷயாவை கத்தியால் குத்தியுள்ளாா். இதைக்கண்டு அங்கு ஜனனி கூச்சலிட லக்ஷயா உள்தாழ்ப்பாளை திறந்து வெளியே வந்து அலறியுள்ளாா். ஆனால் அதற்குள் அந்த மா்ம நபா் ஜனனியை பல இடங்களில் உடலில் குத்தியதில் நிகழ்விடத்திலேயே ஜனனி உயிரிழந்தாா். அப்போது பொதுமக்கள் வருவதை கண்ட மா்ம நபா் , வீட்டின் தாழ்ப்பாளை உள்ளே பூட்டிக்கொண்டு மேலும் ஜனனியை குத்திக் கொண்டே இருந்துள்ளாா்.
பின்னா் பொதுமக்கள் இரும்பு கம்பியால் கதவை உடைத்து அந்த மா்மநபரை வெளியே இழுந்து வந்து தாக்கியுள்ளனா். பலத்த காயமடைந்த லக்ஷயா ஆம்புலன்ஸ் மூலம் சோளிங்கா் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாா்.
இதையடுத்து அங்கு வந்த கொண்டபாளையம் போலீஸாா், மா்ம நபரை மீட்டு பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மாணவி கொலைக்கான காரணம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
