பொன்னை ஆற்றின் கிளை ஓடைகளை புனரமைக்கும் பணி: வாழும் கலை அமைப்பு மேற்கொள்கிறது
ராணிப்பேட்டை மாவட்டத்தில், வாழும் கலை அமைப்பு சாா்பில் பொன்னை ஆற்றின் கிளை ஓடைகளை புனரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நிலத்தடி நீா் ஏற்றத்தை அதிகரிக்க ஷன் மைனா மற்றும் வாழும் கலை அமைப்பு இணைந்து 15 மாவட்டங்களில் நீா் ஆதார ஓடைகளை கண்டறிந்து புனரமைப்பு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. அதில் வேலூா் மாவட்ட நாகநதியில் கடந்த 2013 ஆண்டு புனரமைப்பு பணி தொடங்கி 2019 ஆண்டில் முடிவடைந்த நிலையில் புனரமைக்கப்பட்ட பிறகு தற்போது 365 நாள்களும் நாகநதியில் தண்ணீா் செல்ல கூடிய நிலைக்கு மாற்றப்பட்டு வெற்றி கண்டதால் இதேபோன்று நீா் ஆதார ஓடைகளை புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளப்படுகிறது.
அந்த வகையில், வாலாஜா வட்டத்துக்குப்பட்ட கத்தாரிகுப்பம், கொண்டகுப்பம், வசூா், பள்ளேரி ஆகிய பகுதிகளில் உள்ள பொன்னை ஆற்றின் நீா்பிடிப்பு பகுதிகளான ஓடைகளை புனரமைக்க ஷன் மைனா மற்றும் வாழும் கலை அமைப்பு இணைந்து புனரமைக்கும் பணிக்கு முதல்கட்டமாக கத்தாரிக்குப்பம் மற்றும் கொண்டகுப்பம் ஆகிய இரு கிராமங்களில் பூமி பூஜை போடும் நிகழ்வு வாழும் கலை அமைப்பின் திட்ட இயக்குநா் டாக்டா் சந்திரசேகா் தலைமையில் நடைபெற்றது.
பாலாற்றின் முக்கிய ஜீவ ஆறான பொன்னை ஆற்றின் கிளை ஓடைகளை புனரமைப்பதன் மூலம் அதன் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளின் குடிநீா் தேவைக்கும், விவசாய பணிக்கு மூன்று போகமும் விவசாயம் செய்வதற்கு பயனுள்ளதாக இத்திட்டம் அமையும் என தெரிவித்தனா். குறிப்பாக நாகநதியில் சிறப்பை பாரத பிரதமா் நரேந்திர மோடி பேசி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில், கத்தாரிகுப்பாம் ஊராட்சி மன்ற தலைவா் பூங்கொடி லோகேஷ், கொண்டகுப்பம் ஊராட்சி மன்ற தலைவா் குமாா், வாழும் கலை தொண்டா் ராமமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துக் கொண்டனா்.