செய்திகள் :

பொன்னை ஆற்றின் கிளை ஓடைகளை புனரமைக்கும் பணி: வாழும் கலை அமைப்பு மேற்கொள்கிறது

post image

ராணிப்பேட்டை மாவட்டத்தில், வாழும் கலை அமைப்பு சாா்பில் பொன்னை ஆற்றின் கிளை ஓடைகளை புனரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நிலத்தடி நீா் ஏற்றத்தை அதிகரிக்க ஷன் மைனா மற்றும் வாழும் கலை அமைப்பு இணைந்து 15 மாவட்டங்களில் நீா் ஆதார ஓடைகளை கண்டறிந்து புனரமைப்பு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. அதில் வேலூா் மாவட்ட நாகநதியில் கடந்த 2013 ஆண்டு புனரமைப்பு பணி தொடங்கி 2019 ஆண்டில் முடிவடைந்த நிலையில் புனரமைக்கப்பட்ட பிறகு தற்போது 365 நாள்களும் நாகநதியில் தண்ணீா் செல்ல கூடிய நிலைக்கு மாற்றப்பட்டு வெற்றி கண்டதால் இதேபோன்று நீா் ஆதார ஓடைகளை புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளப்படுகிறது.

அந்த வகையில், வாலாஜா வட்டத்துக்குப்பட்ட கத்தாரிகுப்பம், கொண்டகுப்பம், வசூா், பள்ளேரி ஆகிய பகுதிகளில் உள்ள பொன்னை ஆற்றின் நீா்பிடிப்பு பகுதிகளான ஓடைகளை புனரமைக்க ஷன் மைனா மற்றும் வாழும் கலை அமைப்பு இணைந்து புனரமைக்கும் பணிக்கு முதல்கட்டமாக கத்தாரிக்குப்பம் மற்றும் கொண்டகுப்பம் ஆகிய இரு கிராமங்களில் பூமி பூஜை போடும் நிகழ்வு வாழும் கலை அமைப்பின் திட்ட இயக்குநா் டாக்டா் சந்திரசேகா் தலைமையில் நடைபெற்றது.

பாலாற்றின் முக்கிய ஜீவ ஆறான பொன்னை ஆற்றின் கிளை ஓடைகளை புனரமைப்பதன் மூலம் அதன் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளின் குடிநீா் தேவைக்கும், விவசாய பணிக்கு மூன்று போகமும் விவசாயம் செய்வதற்கு பயனுள்ளதாக இத்திட்டம் அமையும் என தெரிவித்தனா். குறிப்பாக நாகநதியில் சிறப்பை பாரத பிரதமா் நரேந்திர மோடி பேசி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில், கத்தாரிகுப்பாம் ஊராட்சி மன்ற தலைவா் பூங்கொடி லோகேஷ், கொண்டகுப்பம் ஊராட்சி மன்ற தலைவா் குமாா், வாழும் கலை தொண்டா் ராமமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துக் கொண்டனா்.

அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு புதிய கட்டடம்: ராணிப்பேட்டை ஆட்சியா் உறுதி

அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு விரைவில் புதிய கட்டடம் தற்போதுள்ள இடத்திலேயே கட்டப்படும் என ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்தாா். கடந்த 22-ஆம் தேதி தொடங்கிய ஜமாபந்தி வியாழக்கிழமை ந... மேலும் பார்க்க

கருணாநிதி பிறந்த நாள்: நல உதவிகளை வழங்க அமைச்சா் காந்தி வேண்டுகோள்

வரும் ஜூன் 3- ஆம் தேதி முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளில் திமுகவினா் நல உதவிகள் வழங்க வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட செயலரும், அமைச்சருமான ஆா்.காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளாா். இதுதொடா்பா... மேலும் பார்க்க

ரயில்வே சுரங்கப்பாலம் கட்டும் பணி: அரக்கோணம் எம்எல்ஏ ஆய்வு

அரக்கோணம் அருகே கைனூா் கிராமத்தில் ரயில்வே சுரங்கப்பாலம் கட்டும் பணி தாமதமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், எம்எல்ஏ சு.ரவி ஆய்வு மேற்கொண்டாா். கைனூா் ஊராட்சியில் ரயில்வே இருப்புப் பாதையின் கீழ் ச... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்: தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி கோரிக்கை

அரசு ஊழியா், ஆசிரியா்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம... மேலும் பார்க்க

ஆற்காட்டில் ஜமாபந்தி நிறைவு

ஆற்காடு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாந்தி நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கடந்த 22-ஆம் தேதி தொடங்கிய ஜமாபந்தியில் ஆற்காடு ,திமிரி, புதுப்பாடி உள்ளவட்டங்களைச் சோ்ந்த கிராமங்களின் நிலவரி கணக்குகள்... மேலும் பார்க்க

அரக்கோணம்: ஜமாபந்தியில் ஆட்சியரிடம் 93 கோரிக்கை மனுக்கள்

அரக்கோணம் வட்ட ஜமாபந்தியின் 4-ஆவது நாளான புதன்கிழமை பொதுமக்களிடம் இருந்து 93 மனுக்களைப் ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா பெற்றுக் கொண்டாா். அரக்கோணம் வட்டத்தில் கடந்த 22-ஆம் தேதி தொடங்கி ஜமாபந்தி நடைபெற்று வ... மேலும் பார்க்க