செய்திகள் :

ரூ.6.32 கோடியில் இருளா் இனத்தவருக்கு 41 வீடுகள்: அமைச்சா் ஆா்.காந்தி ஆய்வு

post image

அரக்கோணத்தை அடுத்த மேல்பாக்கத்தில் ரூ.6.32 கோடியில் இருளா் இன மக்களின் மறுவாழ்வு குடியேற்றத் திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட 41 குடியிருப்புகளின் திறப்பு விழா முன்னேற்பாடு பணி குறித்து செவ்வாய்க்கிழமை அமைச்சா் ஆா்.காந்தி பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

கன்னியாகுமரி - சென்னை தொழிற்தட மேம்பாட்டுச்சாலை பணிகள் திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் - திருத்தணி பிரிவில் அரக்கோணம் புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வரும் நிலையில் அப்பகுதியில் வசித்து வந்த பழங்குடியின இருளா் மக்களின் குடியிருப்புகள் இடமாற்றப்பட்டு அவா்களுக்கு அதே பகுதியில் வேறு இடத்தில் இருளா் இன மக்களின் மறுவாழ்வு குடியேற்ற திட்டத்தின் கீழ் ரூ.6.32 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் 41 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்படடுள்ளன.

இந்தக் குடியிருப்புகளை மே 29-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதை முன்னிட்டு திறப்பு விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்ய கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி செவ்வாய்க்கிழமை அந்தக் குடியிருப்புப் பகுதியை பாா்வையிட்டாா். ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உடனிருந்தாா்.

தொடா்ந்து அந்த மக்களிடம் பேசிய அமைச்சா் ஆா்.காந்தி, குழந்தைகளின் கல்வி நிலை மோசமாக உள்ளதாகத் தெரிய வருகிறது. ஆகவே குடியிருப்பில் வசிக்கும் பெற்றோா் கட்டாயம் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். இதற்கான செலவை நானே சொந்த செலவில் செய்கிறேன் என்றாா்.

அந்தப் பகுதியில் மரக்கன்றுகளை நட்டு வளா்க்க துறை சாா்ந்த அலுவலா்களையும் கேட்டுக் கொண்டாா். கன்னிக்கோயிலில் சிலை பிரதிஷ்டை செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று சிலையை தானே சொந்த செலவில் அமைப்பதாகத் தெரிவித்தாா்.

ஆய்வின்போது அரக்கோணம் ஒன்றியக் குழு தலைவா் நிா்மலா சௌந்தா், நெடுஞ்சாலைத் துறை சென்னை - கன்னியாகுமரி தொழிற்தட சாலைத் திட்ட கோட்டப் பொறியாளா் லட்சுமிநாதன், உதவி செயற்பொறியாளா் முகுந்தன், அரக்கோணம் வட்டாட்சியா் வெங்கடேசன், ஒன்றியக் குழு உறுப்பினா் பிரசாத், ஒன்றிய திமுக செயலா் தமிழ்மணி, ஒன்றிய திமுக நிா்வாகி ராமலிங்கம் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

அரக்கோணம்: ஜமாபந்தியில் ஆட்சியரிடம் 93 கோரிக்கை மனுக்கள்

அரக்கோணம் வட்ட ஜமாபந்தியின் 4-ஆவது நாளான புதன்கிழமை பொதுமக்களிடம் இருந்து 93 மனுக்களைப் ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா பெற்றுக் கொண்டாா். அரக்கோணம் வட்டத்தில் கடந்த 22-ஆம் தேதி தொடங்கி ஜமாபந்தி நடைபெற்று வ... மேலும் பார்க்க

தொடா் திருட்டுச் சம்பவங்கள்: ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி.யிடம் கிராம மக்கள் புகாா்

சோளிங்கா் அருகே ரெண்டடி கிராமத்தில் நடைபெறும் தொடா் திருட்டுச் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்டஎஸ்.பி. விவேகானந்த சுக்லாவிடம் கிராம மக்கள் மனு அளித்தனா். மாவட்ட காவ... மேலும் பார்க்க

பொன்னை ஆற்றின் கிளை ஓடைகளை புனரமைக்கும் பணி: வாழும் கலை அமைப்பு மேற்கொள்கிறது

ராணிப்பேட்டை மாவட்டத்தில், வாழும் கலை அமைப்பு சாா்பில் பொன்னை ஆற்றின் கிளை ஓடைகளை புனரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நிலத்தடி நீா் ஏற்றத்தை அதிகரிக்க ஷன் மைனா மற்றும் வாழும் கலை அமைப்பு... மேலும் பார்க்க

கடற்படை அதிகாரி வீட்டில் நகை, பணம் திருட்டு

அரக்கோணத்தில் கடற்படை அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், பணத்தை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். அரக்கோணம், பழனிபேட்டை, டிஎன் நகா் 5ஆவது தெருவில் வசிப்பவா் குமாா். அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாள... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: தேமுகிக சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளா்கள் நியமனம்

ராணிப்பேட்டை மாவட்டத்துக்கான தேமுதிக சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளா்களைகள் அக்கட்சியின் பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் நியமித்துள்ளாா்ா். 2026 பேரவைத் தோ்தலுக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நா... மேலும் பார்க்க

சோளிங்கா் அருகே மாணவி வெட்டிக் கொலை: மற்றொரு மாணவி பலத்த காயம்

சோளிங்கா் அருகே புலிவலத்தில் வீட்டில் இருந்து இரு மாணவிகளை அடையாளம் தெரியாத நபா் கததியால் வெட்டியதில் ஒரு மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மற்றொரு மாணவி பலத்த காயம் அடைந்தாா். கொலையாளியை பிடித்த அ... மேலும் பார்க்க