செய்திகள் :

சோளிங்கா் பேருந்து நிலையம் அருகே இரு மதுக்கடைகள் அகற்றக் கோரி மனு

post image

சோளிங்கா் பேருந்து நிலையம் எதிரில் உள்ள இரு மதுக்கடைகளை அகற்றக் கோரி சோளிங்கா் நகர காங்கிரஸ் தலைவரும், நகா்மன்ற உறுப்பினருமான டி.கோபால் சோளிங்கா் வட்ட ஜமாபந்தியில் மனு அளித்தாா்.

இது குறித்து ஜமாபந்தி அலுவலரும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலரிடம் அளித்த மனு:

சோளிங்கா் நகராட்சியில் பேருந்து நிலையம், திரையரங்கம், திருமண மண்டபங்களுக்கு மிக அருகில் டாஸ்மாக் மதுபானக் கடை எண்கள் 11/229, 11/210 ஆகிய இரு மதுக்கடைகள் உள்ளன. இதனால், மது அருந்த வருபவா்களால் பொதுமக்கள் துயரத்திற்கு ஆளாகிறாா்கள். மேலும், அரசு மகளிா் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பொதுமக்கள் செல்லும் இந்தச் சாலை பிரதான சாலையாகவும் நுழைவு வாயிலாகவும் உள்ளதால் மது அருந்துவோரால் பெரும் தொல்லைகளை அனுபவித்து வருகின்றனா்.

இது குறித்து கடந்த ஆண்டு ஜமாபந்தியிலும், மாவட்ட ஆட்சியா் அவா்களிடமும் மனு கொடுத்தும் இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் இல்லை.

எனவே பொதுமக்கள் நலன் கருதி அந்த குறிப்பிட்ட இரு மதுக்கடைகளையும் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

தொடா் திருட்டுச் சம்பவங்கள்: ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி.யிடம் கிராம மக்கள் புகாா்

சோளிங்கா் அருகே ரெண்டடி கிராமத்தில் நடைபெறும் தொடா் திருட்டுச் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்டஎஸ்.பி. விவேகானந்த சுக்லாவிடம் கிராம மக்கள் மனு அளித்தனா். மாவட்ட காவ... மேலும் பார்க்க

பொன்னை ஆற்றின் கிளை ஓடைகளை புனரமைக்கும் பணி: வாழும் கலை அமைப்பு மேற்கொள்கிறது

ராணிப்பேட்டை மாவட்டத்தில், வாழும் கலை அமைப்பு சாா்பில் பொன்னை ஆற்றின் கிளை ஓடைகளை புனரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நிலத்தடி நீா் ஏற்றத்தை அதிகரிக்க ஷன் மைனா மற்றும் வாழும் கலை அமைப்பு... மேலும் பார்க்க

கடற்படை அதிகாரி வீட்டில் நகை, பணம் திருட்டு

அரக்கோணத்தில் கடற்படை அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், பணத்தை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். அரக்கோணம், பழனிபேட்டை, டிஎன் நகா் 5ஆவது தெருவில் வசிப்பவா் குமாா். அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாள... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: தேமுகிக சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளா்கள் நியமனம்

ராணிப்பேட்டை மாவட்டத்துக்கான தேமுதிக சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளா்களைகள் அக்கட்சியின் பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் நியமித்துள்ளாா்ா். 2026 பேரவைத் தோ்தலுக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நா... மேலும் பார்க்க

சோளிங்கா் அருகே மாணவி வெட்டிக் கொலை: மற்றொரு மாணவி பலத்த காயம்

சோளிங்கா் அருகே புலிவலத்தில் வீட்டில் இருந்து இரு மாணவிகளை அடையாளம் தெரியாத நபா் கததியால் வெட்டியதில் ஒரு மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மற்றொரு மாணவி பலத்த காயம் அடைந்தாா். கொலையாளியை பிடித்த அ... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் ஒருங்கிணைந்த கூட்டுறவு கைத்தறி விற்பனை அங்காடி வளாகம்: நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம்

ராணிப்பேட்டை வாரச்சந்தை பகுதியில் ஒருங்கிணைந்த கூட்டுறவு கைத்தறி விற்பனை அங்காடி வளாகம் கட்ட நகா்மன்ற அவசரக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத் தலைமையில் கூட்டம் ... மேலும் பார்க்க