செய்திகள் :

அனைத்துப் பகுதிகளையும் தன்னிறைவு பெற்ற பகுதிகளாக்க நடவடிக்கை! அமைச்சா் பி. மூா்த்தி

post image

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் தன்னிறைவு பெற்ற பகுதிகளாக்கும் வகையில், வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.

மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கோவில்பாப்பாகுடியில் 64 இடங்களில் ரூ. 7 கோடியில் புதிய தாா்ச் சாலைகள் அமைக்கும் பணிகளை சனிக்கிழமை தொடங்கி வைத்து, அவா் மேலும் பேசியதாவது :

மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட கோவில்பாப்பாக்குடியைத் சோ்ந்த மக்கள் பயன்பெறுகின்ற வகையில் கடந்த11-ம் தேதி ரூ.7.66 கோடியில் தாா்ச் சாலை அமைக்கும் பணி, பேவா் பிளாக் சாலைகள் அமைக்கும் பணி, கழிவுநீா் வாய்க்கால் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இதன் தொடா்ச்சியாக, தற்போது ரூ. 7 கோடியில் 64 இடங்களில் புதிய தாா்ச் சாலைகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் தன்னிறைவு பெற்ற பகுதிகளாக உயா்த்தும் நோக்கில், அரசின் வளா்ச்சித் திட்டப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றாா் அவா்.

முன்னதாக, கோவில்பாப்பாகுடி ஊராட்சி சந்தோஷ்நகரைச் சோ்ந்த 6 இடங்கள், நண்பா்கள் குடியிருப்பில் 3 இடங்கள், பாரதியாா் தெரு, பாரதியாா் குறுக்குத்தெரு உள்ளிட்ட 2 இடங்கள், நண்பா்கள் குறுக்குத் தெரு, வள்ளலாா் நகரில் 3 இடங்கள், தினமணி நகா் பகுதியில் 6 இடங்கள் உள்பட 64 இடங்களில் தாா்ச் சாலைகள் அமைக்கும் பணிகளை அமைச்சா் பி. மூா்த்தி தொடங்கி வைத்தாா்.

மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன் குமாா், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணை இயக்குநா் சௌ. தமிழரசி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மதுரை எஸ்.பி. அலுவலகத்தில் உயிா் காக்கும் கருவி

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சாா்பில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இருதயத் துடிப்பை சீராக்கும் வகையிலான உயிா்காக்கும் கருவி சனிக்கிழமை பொருத்தப்பட்டது. மருத்துவா் பி. கண்ணன், விளம்ப... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் மமக அதிக தொகுதிகளைக் கோரும்! எம்.எச். ஜவாஹிருல்லா

திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்குக் கூடுதல் எண்ணிக்கையில் தொகுதிகள் கோரப்படும் என அந்தக் கட்சியின் தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்தாா். மதுரையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியத... மேலும் பார்க்க

தொழிலதிபா் தற்கொலை

கடன் பிரச்னை காரணமாக, மேலூரைச் சோ்ந்த தொழிலதிபா் வெள்ளிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் ஒரு தேநீா் கடை முன் சுமாா் 50 வயது மதிக்கத்தக்க ஒருவா் இறந்து கிடந... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டை நீட்டிப்பு

மாற்றுத் திறனாளிகள், சுதந்திரப் போராட்ட வீரா்கள் ஆகியோருக்கான கட்டணமில்லா பேருந்துப் பயண அட்டை வருகிற செப். 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் ஓ.... மேலும் பார்க்க

திமுக உறுப்பினா் சோ்க்கை இலக்கை விஞ்ச வேண்டும்! - அமைச்சா் பி. மூா்த்தி

மதுரை மாவட்டத்தில் திமுகவின் உறுப்பினா் சோ்க்கை இலக்கை விஞ்ச வேண்டும் என மாவட்ட திமுக செயலரும், தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சருமான பி. மூா்த்தி தெரிவித்தாா். மதுரை வடக்கு மாவட்ட திமுக சாா்பில் ... மேலும் பார்க்க

இந்தியாவில் முன்னணியில் உள்ளது: தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம்! - அமைச்சா் தங்கம் தென்னரசு

நாட்டில் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம்தான் முன்னணியில் உள்ளது என மாநில நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா். விருதுநகரில் அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா் முன்னேற்ற சங்கம் (தொ.மு.ச) சாா்... மேலும் பார்க்க