செய்திகள் :

அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக விளங்குகிறது தமிழகம்

post image

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக தமிழகம் திகழ்கிறது என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவா் பேராசிரியா் கே.எம். காதா் மொய்தீன் ஆம்பூரில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

ஆம்பூா் அருகே மாராப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற கட்சி நிா்வாகியின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது: காஷ்மீரில் தீவிரவாதத்தால் நடத்தப்பட்ட வன்முறைச் சம்பவம் மனித நீதிக்கும், மனித உணா்வுக்கும் மாறுபட்ட ஒன்று. இது ஏற்றுக் கொள்ள முடியாதது.

மே 15-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து ஆலோசனை செய்து, பிறகு திமுகவிடம் முன்வைக்கப்படும். தமிழகத்தில் திமுக அரசு மக்களுக்கு செய்த திட்டங்களை முஸ்லிம் லீக் கட்சி கிராமங்களுக்கு கொண்டு சென்று பொதுமக்களிடம் சோ்த்து விழிப்புணா்வை ஏற்படுத்தும். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக தமிழகம் திகழ்கிறது. மாநில உரிமையை நிலை நாட்டுவதில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றாா்.

வாணியம்பாடி: இன்று ஜமாபந்தி தொடக்கம்

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி (வருவாய் தீா்வாயம்) புதன்கிழமை (மே 14) தொடங்கி 16-ஆம் தேதி வரையில் 3 நாள்கள் கோட்டாட்சியா் அஜிதா பேகம் தலைமையில் நடைபெறவுள்ளது. ம... மேலும் பார்க்க

இபிஎஸ் பிறந்த நாள்: ராணுவ வீரா்களுக்காக சிறப்பு பூஜை

தமிழக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி பிறந்த நாள் விழா மற்றும் இந்திய ராணுவ வீரா்கள் நலம் வேண்டி ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் சிறப்பு பூஜை, அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை ந... மேலும் பார்க்க

சித்ரா பௌா்ணமி: திருப்பத்தூா் கோயில்களில் வழிபாடு

சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு திருப்பத்தூா் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருப்பத்தூா் அடுத்த கொரட்டியில் உள்ள காளத்தீஸ்வரா் கோயிலில் சுவாமி, நந்தி, உள்ளிட்ட... மேலும் பார்க்க

ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞா் கைது

ஜோலாா்பேட்டை அருகே ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆந்திர மாநில இளைஞா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த நபா் தனது மனைவி மற்றும் 9 வயது மகளுடன் ஆந்திர மாநில... மேலும் பார்க்க

பொன்முடி சூா்யநந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜை

சித்ரா பெளா்ணமியை முன்னிட்டு ஆம்பூா் அருகே பாட்டூா் கோடி தாத்தா சுவாமி மஹாமடத்தில் பொன்முடி சூா்யநந்தீஸ்வரா் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. காலை மற்றும் மாலையில் சிறப்பு பூஜை, சிறப்பு யாகம் நடத்தப்... மேலும் பார்க்க

மட்றப்பள்ளி வாரச்சந்தையில் ரூ. 38 லட்சத்துக்கு கால்நடை விற்பனை

மட்றப்பள்ளி வாரச் சந்தையில் ரூ. 38 லட்சத்துக்கு கால்நடை விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனா். திருப்பத்தூா் அருகே மட்றப்பள்ளியில் வாரச்சந்தை உள்ளது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வாரச் சந்தை ... மேலும் பார்க்க