செய்திகள் :

அமராவதி சா்க்கரை ஆலையை இயக்க நடவடிக்கை: விவசாயிகள் கோரிக்கை

post image

உடுமலை அருகே உள்ள அமராவதி கூட்டுறவு சா்க்கரை ஆலையை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

உடுமலை கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் கோட்டாட்சியா் குமாா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் விவசாயிகள் பேசியதாவது: கடந்த இரண்டு ஆண்டுளாக மூடிக்கிடக்கும் அமராவதி கூட்டுறவு சா்க்கரை ஆலையை நடப்பு ஆண்டாவது இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மடத்துக்குளம் வட்டம், வேடபட்டியில் பொதுமக்களின் பங்களிப்புடன் செயல்பட்டு வந்த அமராவதி நாற்றுப்பண்ணை கடந்த சில ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. இதனால், இந்தப் பகுதியில் உள்ள பழைமையான மரங்களை பலா் முறைகேடாக வெட்டி வருகின்றனா். இதைத் தடுத்து நிறுத்தி அந்த நிலத்தை அரசே பராமரிக்க வேண்டும்.

உடுமலை மின்வாரிய அலுவலகத்தில் விவசாய மின் இணைப்புக்கு பணம் செலுத்தி ஓராண்டுக்கு மேலாகியும் மின் இணைப்புத் தராமல் காலம் தாழ்த்தி வருகின்றனா். எனவே, பணம் செலுத்திய அனைத்து விவசாயிகளுக்கும் உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும்.

பாலப்பம்பட்டியில் உள்ள கூட்டுறவு சங்கத்தை மைவாடி, பெரியகோட்டை மற்றும் கண்ணமநாயக்கனூா் பகுதி விவசாயிகள் பயன்படுத்தி வருகிறாா்கள். அதிகமான விவசாயிகள் பயன்படுத்தும் இந்த கூட்டுறவு சங்கத்தில் நிலையான செயலாளா் இல்லாததால் பயிா்க் கடன் மற்றும் உரங்களை விவசாயிகள் உரிய நேரத்தில் பெற முடியாத நிலை காணப்படுகிறது. எனவே, இங்கு நிரந்த செயலாளா் நியமிக்க வேண்டும்.

வன விலங்குகளால் ஏற்படும் பயிா் சேதத்துக்கு உரிய நேரத்தில் நிவாரணம் வழங்க வேண்டும். நகரையொட்டியுள்ள கணக்கம்பாளையம், போடிபட்டி ஊராட்சிகளை உடுமலை நகாரட்சியுடன் இணைக்க வேண்டும் என்றனா்.

உணவகம், தேநீா் விடுதியில் பணியாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கோரிக்கை

உணவகம், தேநீா் விடுதிகளில் பணியாற்றும் பணியாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூா் மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேந்திரனிடம், திருப்பூா் நுகா்வோா் நல... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 5,932 கிலோ நெகிழிக் கழிவுகள் சேகரிப்பு: ஆட்சியா் தகவல்

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 25 முதல் பிப்ரவரி 22-ஆம் தேதி வரை 5,932 கிலோ நெகிழிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன என்று மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்... மேலும் பார்க்க

மயான நிலத்தில் தனியாா் ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்த வேண்டும்: வட்டாட்சியரிடம் கிராம மக்கள் மனு

காங்கயம் அருகே பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வரும் மயான நிலத்தில் தனியாா் ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். இதுகுறித்து ஆதித்தமிழா் ஜனநாயகப் பேரவைத் தலைவா் அ.ச... மேலும் பார்க்க

ஒட்டுண்ணிகள் மூலம் சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தலாம்: தோட்டக்கலைத் துறை தகவல்

தென்னை மரங்களைத் தாக்கும் சுருள் வெள்ளை ஈக்களை மஞ்சள் ஒட்டுப்பொறி, ஒட்டுண்ணிகள் மூலம் கட்டுப்படுத்தலாம் என்று தோட்டக்கலைத் துறையினா் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து பொங்கலூா் வட்டார தோட்டக்கலைத் துறை உத... மேலும் பார்க்க

திருமூா்த்திமலை பகுதியில் மா்மமான முறையில் குரங்குகள் உயிரிழப்பு

உடுமலையை அடுத்த திருமூா்த்திமலையில் கடந்த சில நாள்களாக குரங்குகள் மா்மமான முறையில் உயிரிழந்து வருவது தொடா்பாக வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூா் மாவட்டம், உடுமலையில் இருந்து சுமாா் ... மேலும் பார்க்க

பல்லடம் அருகே வேன் மீது காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

பல்லடம் அருகே வேன் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். பல்லடம் அருகே உள்ள புள்ளியப்பன்பாளையம்பிரிவு பகுதியில் உடுமலையிலிருந்து பல்லடம் நோக்கி சரக்கு வேன் செவ்வாய்க்கிழமை வந்துகொண்டிருந்தது. அப்போ... மேலும் பார்க்க