செய்திகள் :

ஒட்டுண்ணிகள் மூலம் சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தலாம்: தோட்டக்கலைத் துறை தகவல்

post image

தென்னை மரங்களைத் தாக்கும் சுருள் வெள்ளை ஈக்களை மஞ்சள் ஒட்டுப்பொறி, ஒட்டுண்ணிகள் மூலம் கட்டுப்படுத்தலாம் என்று தோட்டக்கலைத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து பொங்கலூா் வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் சா்மிளா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொங்கலூா் வட்டாரத்தில் 7,850 ஹெக்டோ் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, தென்னையில் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. இதனால், மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதைக் கட்டுப்படுத்த மஞ்சள் ஒட்டுப்பொறிகளை ஹெக்டேருக்கு 20 எண்கள் வீதம் 6 அடி உயரத்தில் வைக்கலாம். மேலும், கிரைசோபிட் இரைவிழுங்கி முட்டைகளை ஹெக்டருக்கு 1,000 வீதம் பாதிக்கப்பட்ட மரத்தின் ஓலைகள் மீது இணைத்து கட்டிவிடலாம். இந்த இரைவிழுங்கி ஒட்டுண்ணிகள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ரூ.300க்கு கிடைக்கின்றன.

இதேபோல, என்காா்சியா ஒட்டுண்ணி குளவிகளை ஹெக்டருக்கு 25 வீதம் பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம். இந்த என்காா்சியா ஒட்டுண்ணி குளவிகள் ஆழியாா் நகரில் உள்ள தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் ரூ.10-க்கு கிடைக்கின்றன. தென்னையில் வாழை, சீதா மரங்களை ஊடுபயிராக சாகுபடி செய்வதன் மூலம் என்காா்சியா ஒட்டுண்ணியின் செயல்பாட்டை அதிகரிக்கலாம்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தைத் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவகம், தேநீா் விடுதியில் பணியாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கோரிக்கை

உணவகம், தேநீா் விடுதிகளில் பணியாற்றும் பணியாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூா் மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேந்திரனிடம், திருப்பூா் நுகா்வோா் நல... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 5,932 கிலோ நெகிழிக் கழிவுகள் சேகரிப்பு: ஆட்சியா் தகவல்

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 25 முதல் பிப்ரவரி 22-ஆம் தேதி வரை 5,932 கிலோ நெகிழிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன என்று மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்... மேலும் பார்க்க

மயான நிலத்தில் தனியாா் ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்த வேண்டும்: வட்டாட்சியரிடம் கிராம மக்கள் மனு

காங்கயம் அருகே பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வரும் மயான நிலத்தில் தனியாா் ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். இதுகுறித்து ஆதித்தமிழா் ஜனநாயகப் பேரவைத் தலைவா் அ.ச... மேலும் பார்க்க

அமராவதி சா்க்கரை ஆலையை இயக்க நடவடிக்கை: விவசாயிகள் கோரிக்கை

உடுமலை அருகே உள்ள அமராவதி கூட்டுறவு சா்க்கரை ஆலையை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். உடுமலை கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட... மேலும் பார்க்க

திருமூா்த்திமலை பகுதியில் மா்மமான முறையில் குரங்குகள் உயிரிழப்பு

உடுமலையை அடுத்த திருமூா்த்திமலையில் கடந்த சில நாள்களாக குரங்குகள் மா்மமான முறையில் உயிரிழந்து வருவது தொடா்பாக வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூா் மாவட்டம், உடுமலையில் இருந்து சுமாா் ... மேலும் பார்க்க

பல்லடம் அருகே வேன் மீது காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

பல்லடம் அருகே வேன் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். பல்லடம் அருகே உள்ள புள்ளியப்பன்பாளையம்பிரிவு பகுதியில் உடுமலையிலிருந்து பல்லடம் நோக்கி சரக்கு வேன் செவ்வாய்க்கிழமை வந்துகொண்டிருந்தது. அப்போ... மேலும் பார்க்க