ஒட்டுண்ணிகள் மூலம் சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தலாம்: தோட்டக்கலைத் துறை தகவல்
தென்னை மரங்களைத் தாக்கும் சுருள் வெள்ளை ஈக்களை மஞ்சள் ஒட்டுப்பொறி, ஒட்டுண்ணிகள் மூலம் கட்டுப்படுத்தலாம் என்று தோட்டக்கலைத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து பொங்கலூா் வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் சா்மிளா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொங்கலூா் வட்டாரத்தில் 7,850 ஹெக்டோ் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, தென்னையில் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. இதனால், மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதைக் கட்டுப்படுத்த மஞ்சள் ஒட்டுப்பொறிகளை ஹெக்டேருக்கு 20 எண்கள் வீதம் 6 அடி உயரத்தில் வைக்கலாம். மேலும், கிரைசோபிட் இரைவிழுங்கி முட்டைகளை ஹெக்டருக்கு 1,000 வீதம் பாதிக்கப்பட்ட மரத்தின் ஓலைகள் மீது இணைத்து கட்டிவிடலாம். இந்த இரைவிழுங்கி ஒட்டுண்ணிகள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ரூ.300க்கு கிடைக்கின்றன.
இதேபோல, என்காா்சியா ஒட்டுண்ணி குளவிகளை ஹெக்டருக்கு 25 வீதம் பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம். இந்த என்காா்சியா ஒட்டுண்ணி குளவிகள் ஆழியாா் நகரில் உள்ள தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் ரூ.10-க்கு கிடைக்கின்றன. தென்னையில் வாழை, சீதா மரங்களை ஊடுபயிராக சாகுபடி செய்வதன் மூலம் என்காா்சியா ஒட்டுண்ணியின் செயல்பாட்டை அதிகரிக்கலாம்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தைத் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.