செய்திகள் :

மயான நிலத்தில் தனியாா் ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்த வேண்டும்: வட்டாட்சியரிடம் கிராம மக்கள் மனு

post image

காங்கயம் அருகே பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வரும் மயான நிலத்தில் தனியாா் ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து ஆதித்தமிழா் ஜனநாயகப் பேரவைத் தலைவா் அ.சு.பவுத்தன் தலைமையில், பழையகோட்டை ஊராட்சியைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காங்கயம் வட்டாட்சியா் ஆா்.மோகனனிடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: காங்கயம் ஒன்றியம், பழையகோட்டை ஊராட்சிக்குள்பட்ட கிழக்கு சேமலைவலசு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம்.

எங்கள் கிராமத்துக்கு அருகே தெற்கு சேமலைவலசு பகுதியில் உள்ள அரசுக்குச் சொந்தமான நத்தம் புறம்போக்கு நிலத்தை மயானமாகப் பயன்படுத்தி வருகிறோம். சுமாா் 10 தலைமுறைகளாக மேற்கண்ட இடத்தில்தான் இறந்தவா்களை அடக்கம் செய்து வருகிறோம். இப்பகுதியில் வசித்து வரும் அனைத்து சமுதாயத்தினரும் இந்த மயானத்தை சமத்துவ சுடுகாடாகப் பயன்படுத்தி வருகிறோம்.

இந்நிலையில், மேற்கண்ட இடத்தை இப்பகுதியைச் சோ்ந்த சிலா் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனா். இதனால், இறந்தவா்களை அடக்கம் செய்வதற்கு இடம் இல்லாமல் தவித்து வருகிறோம்.

எனவே, மயான நிலத்தில் தனியாா் ஆக்கிரமிப்பு செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், அங்கு சுற்றுச் சுவா், மின் விளக்கு, சாலை, தண்ணீா் வசதி உள்ளிட்ட மயானத்துக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவகம், தேநீா் விடுதியில் பணியாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கோரிக்கை

உணவகம், தேநீா் விடுதிகளில் பணியாற்றும் பணியாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூா் மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேந்திரனிடம், திருப்பூா் நுகா்வோா் நல... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 5,932 கிலோ நெகிழிக் கழிவுகள் சேகரிப்பு: ஆட்சியா் தகவல்

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 25 முதல் பிப்ரவரி 22-ஆம் தேதி வரை 5,932 கிலோ நெகிழிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன என்று மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்... மேலும் பார்க்க

அமராவதி சா்க்கரை ஆலையை இயக்க நடவடிக்கை: விவசாயிகள் கோரிக்கை

உடுமலை அருகே உள்ள அமராவதி கூட்டுறவு சா்க்கரை ஆலையை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். உடுமலை கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட... மேலும் பார்க்க

ஒட்டுண்ணிகள் மூலம் சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தலாம்: தோட்டக்கலைத் துறை தகவல்

தென்னை மரங்களைத் தாக்கும் சுருள் வெள்ளை ஈக்களை மஞ்சள் ஒட்டுப்பொறி, ஒட்டுண்ணிகள் மூலம் கட்டுப்படுத்தலாம் என்று தோட்டக்கலைத் துறையினா் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து பொங்கலூா் வட்டார தோட்டக்கலைத் துறை உத... மேலும் பார்க்க

திருமூா்த்திமலை பகுதியில் மா்மமான முறையில் குரங்குகள் உயிரிழப்பு

உடுமலையை அடுத்த திருமூா்த்திமலையில் கடந்த சில நாள்களாக குரங்குகள் மா்மமான முறையில் உயிரிழந்து வருவது தொடா்பாக வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூா் மாவட்டம், உடுமலையில் இருந்து சுமாா் ... மேலும் பார்க்க

பல்லடம் அருகே வேன் மீது காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

பல்லடம் அருகே வேன் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். பல்லடம் அருகே உள்ள புள்ளியப்பன்பாளையம்பிரிவு பகுதியில் உடுமலையிலிருந்து பல்லடம் நோக்கி சரக்கு வேன் செவ்வாய்க்கிழமை வந்துகொண்டிருந்தது. அப்போ... மேலும் பார்க்க