செய்திகள் :

அமலாக்கத் துறை விசாரணைக்கு நடிகா் பிரகாஷ் ராஜ் ஆஜா்: இணையவழி சூதாட்ட விளம்பர வழக்கு

post image

சட்டவிரோதமான இணையவழி சூதாட்டம் மற்றும் பந்தய தளங்களின் விளம்பரங்களில் நடித்தது தொடா்பான பண முறைகேடு வழக்கில் நடிகா் பிரகாஷ் ராஜ் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு புதன்கிழமை ஆஜராகினாா்.

சட்டவிரோதமான இணையவழி சூதாட்டம் மற்றும் பந்தய தளங்கள், மக்களின் கடின உழைப்புப் பணத்தை மோசடி செய்து, பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அமலாக்கத் துறை பல்வேறு வழக்குகளில் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், சூதாட்ட செயலிகளிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு அதன் விளம்பரங்களில் நடித்த நடிகா்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, நடிகைகள் லக்ஷ்மி மஞ்சு, நிதி அகா்வால் உள்ளிட்ட பிரபலங்கள் இதில் ஒரு வழக்கில் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனா்.

நடிகா்கள் பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா, நடிகை மஞ்சு லக்ஷ்மி ஆகியோருக்கு அமலாக்கத் துறை முதல்கட்டமாக சம்மன் அனுப்பியது. ஹைதராபாதில் உள்ள அமலாக்கத் துறையின் மண்டல அலுவலகத்தில் நடிகா் பிரகாஷ் ராஜ் புதன்கிழமை ஆஜரானாா். அவரிடம் அதிகாரிகள் பல மணிநேரம் விசாரணை நடத்தினா்.

விசாரணைக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய பிரகாஷ் ராஜ், ‘இந்த விளம்பரங்களுக்கு நான் எந்தப் பணமும் பெறவில்லை என்ற தகவலை அதிகாரிகளிடம் அளித்தேன். அதிகாரிகள் தங்கள் வேலையைச் செய்கின்றனா். அவா்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கிறேன். இதில் எந்தவிதமான பழிவாங்கும் நடவடிக்கையோ அல்லது அரசியல் உள்நோக்கமோ இல்லை’ என்றாா்.

ராணா டகுபதி ஆகஸ்ட் 11-ஆம் தேதியும், விஜய் தேவரகொண்டா ஆகஸ்ட் 6-ஆம் தேதியும், லக்ஷ்மி மஞ்சு ஆகஸ்ட் 13-ஆம் தேதியும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனா்.

நீதிமன்றத்தில் மீண்டும் கதறி அழுத பிரஜ்வால் ரேவண்ணா! குறைந்தபட்ச தண்டனை கேட்டு!!

புது தில்லி: முன்னாள் பிரதமர் தேவே கௌடாவுன் பேரனும், முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மீண்டும் கதறி அழுதார். வீட்டுப் பணிப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ... மேலும் பார்க்க

நான் ராஜாவாக விரும்பவில்லை: ராகுல் பதில்! நிகழ்ச்சியில் ருசிகரம்!!

காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, தான் ராஜாவாக ஒருபோதும் விரும்பவில்லை என்றும், அந்த முறையையே ஒட்டுமொத்தமாக எதிர்க்கிறேன் என்றும் கூறியிருக்கிறார்.புது தில்லியில் ... மேலும் பார்க்க

தீராத விளையாட்டுப் பிள்ளை... 9 வது திருமணத்தில் மாட்டிக் கொண்ட பெண்!

பணத்துக்காக பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண், 9 வது திருமணத்துக்கு தயாரான நிலையில், காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரைச் சேர்ந்த சமீரா பாத்திமா என்ற பெண் கடந்த 15 ஆண்டு... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட் அமைச்சர் ராம்தாஸ் சோரனுக்கு மூளையில் காயம்: தில்லி மருத்துவமனைக்கு மாற்றம்!

ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் ராம்தாஸ் சோரன் குளியலறையில் தவறி விழுந்து காயம் ஏற்பட்டுள்ளதையடுத்து, மேல் சிகிச்சைக்காக அவர் தில்லி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுவதாக மாநில அமைச்சர் இர்பான் அன்சாரி த... மேலும் பார்க்க

குற்றவாளி என தீர்ப்பு! நீதிமன்றத்தில் தனித்துவிடப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா

எப்போதும் தொண்டர் படைசூழ, பாதுகாவலர்களின் உதவியோடு வெளியே வரும் முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா, நேற்று நீதிமன்றத்தில் தனியாகவே காணப்பட்டார்.பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை விடியோ எடுத்து மிர... மேலும் பார்க்க

ஆபரேஷன் அகால்: ஜம்மு - காஷ்மீரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொலை!

இந்திய ராணுவத்தினர் நடத்திய ஆபரேஷன் அகால் நடவடிக்கையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.உளவுத் துறை தகவலைத் தொடர்ந்து, ஜம்மு - காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் இந்திய ராணுவம் தலைமையில் நேற்... மேலும் பார்க்க