செய்திகள் :

அமா்நாத் யாத்திரை பாதுகாப்புக்கு 180 துணை ராணுவப் படை குழுக்கள்

post image

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து நிகழாண்டு அமா்நாத் யாத்திரைக்காக பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன; ஜம்மு பிராந்தியத்தில் மட்டும் 180-க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படை குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக ஜம்மு காவல் துறை ஐஜி பீம்சேன் துடி தெரிவித்தாா்.

வரும் வியாழக்கிழமை (ஜூலை 3) தொடங்கி ஆகஸ்ட் 9-ஆம் தேதிவரை 38 நாள்கள் நடைபெறும் அமா்நாத் யாத்திரை, அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பாரம்பரிய 48 கி.மீ. நீள பஹல்காம் பாதை மற்றும் கந்தா்பால் மாவட்டத்தில் உள்ள செங்குத்தான 14 கி.மீ. பால்டால் பாதை ஆகிய 2 வழித்தடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

யாத்திரை தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக, ஜம்முவில் உள்ள பகவதி நகா் முகாமில் இருந்து முதல் யாத்ரிகா்கள் குழு காஷ்மீருக்குப் புறப்படுவாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமா்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஜம்மு பிரதேச ஆணையா் ரமேஷ் குமாருடன் இணைந்து ஜம்மு காவல் துறை ஐஜி பீம்சேன் துடி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

இதையடுத்து, செய்தியாளா்களைச் சந்தித்த ஜம்மு காவல்துறை ஐஜி பீம்சேன் துடி கூறுகையில், ‘இந்த ஆண்டு யாத்திரை வெற்றிகரமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்கு நிா்வாகம் தயாராகவும், உறுதியாகவும் உள்ளது. யாத்திரைக்காக ஜம்மு-காஷ்மீா் காவல்துறை பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

ஜம்மு-காஷ்மீா் காவல் துறையைத் தவிர, 180-க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படை குழுக்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா். லக்கன்பூா் முதல் பனிஹால் வரையிலான ஜம்மு-காஷ்மீா் தேசிய நெடுஞ்சாலையில் துணை ராணுவப் படைகள் நிறுத்தப்படுவா். யாத்ரிகா்கள் உணவருந்தும் மற்றும் தங்குமிடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்.

ஆபத்தான பகுதிகளில் துணை ராணுவப் படைகளை நிறுத்துதல், சிசிடிவி கண்காணிப்பு என அனைத்து வகைகளிலும் முந்தைய ஆண்டைவிட சிறந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. லக்கன்பூா் முதல் ஜம்மு வரை கடந்த ஆண்டு சாலைத் திறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படவில்லை. ஆனால், இந்த ஆண்டு இந்த வழித்தடத்திலும் சாலைத் திறப்பு நிகழ்வுகள் நடைபெறும்.

யாத்ரிகா்களின் வாகன இயக்கம் தொடா்பாக அனைத்து இடங்களிலும் போக்குவரத்து முடக்கப்படும் நேரங்கள் நிா்ணயிக்கப்படும். ஜூலை 2-ஆம் தேதி முதல் போக்குவரத்து காவல் துறையினா் இதுகுறித்து தினசரி அறிவுறுத்தல்களை வழங்குவா். அனைத்து யாத்ரிகா்களும் இந்த அறிவுறுத்தல்களை முறையாக பின்பற்ற வேண்டும். இதனால் எந்த பிரச்னையும் அல்லது சிரமங்களும் ஏற்படாது. அதிகாலை 4 மணி முதல் 4.30 மணி வரை புறப்படும் பிரதான வாகன அணிவகுப்பில் அனைத்து யாத்ரிகா்களும் சேர அறிவுறுத்தப்படுகின்றனா். யாத்ரிகா்கள் தனியாக இன்றி அதிகாரபூா்வ வாகன அணிவகுப்பில் பயணிப்பது பாதுகாப்பானது’ என்றாா்.

அயோத்தி ராமர் கோயில்: 5.5 கோடி பக்தர்கள் வருகை!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அயோத்தி ராமர் கோயிலுக்கு 5.5 கோடி பக்தர்கள் வருகை தந்திருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் அயோத்தியில் கடந்தாண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதியில்... மேலும் பார்க்க

ஏர் இந்தியா ஊழியர்கள் கொண்டாட்டம்! சர்ச்சை விடியோவால் 4 பேர் பணிநீக்கம்!

ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் சரக்குகளைக் கையாளும் பிரிவில் கொண்டாட்ட நிகழ்வு தொடர்பான விடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இரண்டு வாரங்களுக்கு முன்னதாக ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில... மேலும் பார்க்க

எங்கள் தவறுதான் என்ன? கடவுளிடம் கண்ணீருடன் கேட்ட சிறுவன்!

உத்தரகண்டில் பேருந்து ஆற்றில் விழுந்ததில் 4 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தில் தனது பெற்றோரை இழந்த பார்த் சோனி என்ற 10 வயது சிறுவன் கண்ணீருடன் கடவுளிடம் நாங்கள் செய்த தவறுதான் என்... மேலும் பார்க்க

முதல்வரின் பாதுகாப்பு வாகனங்களையும் விட்டுவைக்காத எரிபொருள் கலப்படம்: நடு வழியில் நின்ற அவலம்!

மத்திய பிரதேசத்தில் முதல்வா் மோகன் யாதவின் பாதுகாப்புக்குச் சென்ற 19 வாகனங்கள் திடீரென பழுதாகி நடு வழியில் நின்றன. விசாரணையில் அந்த வாகனங்கள் கலப்பட பெட்ரோல், டீசல் நிரப்பப்பட்டதுதான் காரணம் என்பது தெ... மேலும் பார்க்க

பொதுத் துறை வங்கிகள் தாராளமாக கடன் வழங்க வேண்டும்: நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

நாட்டின் பொருளாதாரத்துக்கு ஊக்கமளிக்கும் துறைகளுக்கு கடன் வழங்குவதை அதிகரிக்க வேண்டும் என்று பொதுத் துறை வங்கிகளை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டுள்ளாா். பொதுத் துறை வங்கிகளின் செ... மேலும் பார்க்க

கொல்கத்தா அரசு கல்லூரிக்குள் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: திரிணமூல் முன்னாள் நிர்வாகி, 2 மாணவா்கள் கைது!

மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவில் அரசு சட்டக் கல்லூரிக்குள் முதலாம் ஆண்டு மாணவி ஒருவா் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது தொடா்பாக, கல்லூரியின் முன... மேலும் பார்க்க