செய்திகள் :

அமித் ஷா மிகப்பெரிய தோல்வி: காங்கிரஸ் குற்றச்சாட்டு!

post image

மணிப்பூரைப் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து ஒதுக்கி வருவதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

கடந்த 2022 பிப்ரவரியில் மணிப்பூரில் பாஜக மிகப்பெரிய பெரும்பான்மையுடன் அரசு அமைத்ததாகவும், சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளே மதக்கலவரம் முதன்முறையாக வெடித்தது. 2023 மே 3 முதல் மாநிலத்தில் கலவரம் வெடிக்கத் தொடங்கியது. மூன்று மாதங்களுக்குப் பிறகு, மாநிலத்தில் அரசியலமைப்பு இயந்திரங்கள் முற்றிலும் செயலிழந்துவிட்டதாக உச்ச நீதிமன்றம் அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

மாநில சட்டப்பேரவையில் காங்கிரஸ் கொண்டு வரவிருந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொண்ட மோடி அரசு, மணிப்பூர் முதல்வரை ராஜிநாமா செய்யக் கட்டாயப்படுத்தியது, இறுதியாக பிப்ரவரி 13, 2025 அன்று குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது.

மணிப்பூரின் வேதனையும் துன்பமும் தொடர்கிறது. அரசியல் விளையாட்டுகள் விளையாடப்படுகின்றன. பயனுள்ள சமரச செயல்முறை எதுவும் நடைபெறவில்லை.

உள்நாட்டில் இடம்பெயர்ந்த 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொடர்ந்து மிகுந்த மன அழுத்தத்தில் நிவாரண முகாம்களில் வாழ்கின்றனர்.

மிக முக்கியமாக, பிரதமர் மணிப்பூரைத் தொடர்ந்து தவிர்த்து வருகிறார். அவர் மாநிலத்தைச் சேர்ந்த யாரையும் இதுவரை சந்திக்கவில்லை. அவர் உலகம் முழுவதும் பயணம் செய்துள்ளார், ஆனால் பிரச்னைக்குரிய மாநிலத்தைப் பார்வையிட்டு அங்குள்ள மக்களைச் சென்றடைய நேரமோ, ஆர்வமோ காட்டவில்லை என்று அவர் கூறினார்.

மணிப்பூரின் நிர்வாகத்தைப் பிரதமர் அவுட்சோர்ஸ் செய்துள்ள உள்துறை அமைச்சர் ஒரு "பெரிய தோல்வி" என்று நிரூபிக்கப்பட்டுள்ளார் என்று அவர் கூறினார்.

மே 2023 முதல் இம்பாலில் குகி, மொய்தி மக்களுக்கிடையேயான வன்முறையில் 220-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர், ஆயிரக்கணக்கானோர் வீடற்றவர்களாகினர். பலர் காயமடைந்தனர்.

ஆபரேஷன் சிந்தூர்:முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பிறகு முப்படை தலைமை தளபதிகளுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புதன்கிழமை(மே.7) ஆலோசனை நடத்தி வருகிறார்.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்: இந்தியர்கள் மூவர் பலி!

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் இந்தியர்கள் மூவர் பரிதாபமாக பலியாகினர்.ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காமில் அப்பாவி சுற்றுலா மக்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்த... மேலும் பார்க்க

இந்திய ராணுவத்தால் பெருமை கொள்கிறோம்.. ஜெய்ஹிந்த்! - ராகுல்

இந்திய ராணுவத்தால் பெருமை கொள்கிறோம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: ஜம்முவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் எதிரொலியாக ஜம்மு-காஷ்மீரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையளிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்!

இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று காலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா ... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு: மேற்பார்வைக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த அறிவுறுத்தல்

நமது நிருபர்முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள மேற்பார்வைக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியது.முல்லைப் பெரியாறு அணையின் உரி... மேலும் பார்க்க