செய்திகள் :

அமெரிக்காவில் மாயமான இந்திய பெண்; ஆங்கிலம் தெரியாது, திருமணத்துக்காக சென்ற இடத்தில் பரிதாபம்

post image

இந்தியாவைச் சேர்ந்த 24 வயது பெண் அமெரிக்காவில் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நிச்சயிக்கப்பட்ட திருமணத்துக்காக அமெரிக்கா வந்ததாகக் கூறப்படும் இவர், சில நாள்களிலேயே மாயமாகியிருக்கிறார். அவரைத் தேடும் பணியில் அமெரிக்க அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

 கடைசியாக அந்த பெண் ஜூன் 25-ம் தேதி, நியூ ஜெர்சியில் உள்ள லிண்டந்வோல்ட் என்ற இடத்தில் தென்பட்டுள்ளார். சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த உள்ளூர் போலீஸ்காரர்கள், அந்த பெண்ணின் பெயர் சிம்ரன் என்றும் கடந்த புதன் கிழமை, காணாமல் போவதற்கு முன்பு யாருக்காகவோ காத்திருந்ததாகவும் கண்டறிந்துள்ளனர் என்கிறது நியு யார்க் போஸ்ட் தளம்.

New Jersy
New Jersy

சிசிடிவி காட்சிகளின்படி, சிம்ரன் பதட்டமாகவோ அல்லது ஏதேனும் துன்பத்தை எதிர்நோக்கி கவலையாகவோ இல்லை என காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

யார் இந்த சிம்ரன்?

ஜூன் 20 தேதி அமெரிக்கா சென்றடைந்த சிம்ரன், நிச்சயிக்கப்பட்ட திருமணத்துக்காக வந்திருக்கிறார் எனக் கூறப்பட்டது. தற்போது அவர் ஊர் சுற்றிப் பார்ப்பதற்காகக் கூட வந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். சிம்ரன் வைத்திருந்த சர்வதேச ஃபோன் வைஃபை மூலம் மட்டுமே இயங்கக் கூடியது எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும் சிம்ரனுக்கு ஆங்கிலம் தெரியாது என்றும், அவருக்கு அமெரிக்காவில் உறவினர்கள் யாரும் இல்லை என்றும் கண்டறிந்துள்ளனர். அவர் 5 அடி 4 அங்குலம் உயரத்தில் சுமார் 68 கிலோ எடை கொண்டவராக இருப்பார் என்றும் அவர் நெற்றியில் சிறிய தழும்பு இருக்கும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

போலீஸ்

காணாமல் போன அன்று, சாம்பல் நிற ஸ்வெட்பேண்ட், ஒரு வெள்ளை டி-சர்ட், கருப்பு ஃபிளிப்-ஃப்ளாப்ஸ் மற்றும் சிறிய வைர காதணிகள் அணிந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். அவரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

அமெரிக்க காவல்துறையினர் இந்தியாவில் இருக்கும் சிம்ரனின் உறவினர்களை தொடர்புகொள்ள முயற்சித்து வருகின்றனர். இதுவரை யாரையும் கண்டறியவில்லை என்பதால் சிம்ரன் யார் என்ற கேள்விக்கு முழுமையான விடை இல்லாமலே இருக்கிறது.

தடயங்கள், தொடர்புகள் குறைவாக இருப்பதனால் சிம்ரனின் வழக்கில் மர்மம் இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். இதுகுறித்து இந்தியா தரப்பில் எந்த கருத்துகளும் தெரிவிக்கவில்லை.

கடந்த மார்ச் 6-ம் தேதி இதேப்போல சுதிக்ஷா கோணங்கி என்ற மருத்துவ மாணவி அமெரிக்காவில் காணாமல் போனது குறிப்பிடத்தக்கது. சுதிக்ஷா கடைசியாக கடற்கரைக்கு விடுமுறையை கழிக்க சென்றுள்ளார். அவரது பெற்றோர் அவர் கடலில் மூழ்கியிருக்கலாம் எனக் கருதுகின்றனர். அவரது நண்பர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

சென்னை: சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்தாரா போலீஸ் எஸ்.ஐ? - தந்தை பகீர் குற்றச்சாட்டு!

சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, ``நான் மேற்கண்ட முகவரியில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறேன். கட... மேலும் பார்க்க

வரதட்சணை: 'என் புள்ளைக்கு நடந்த மாதிரி யாருக்கும் நடக்கக் கூடாது' - கண்ணீர் விட்டு கதறும் தந்தை

திருப்பூர் அருகே, `கணவர் மற்றும் மாமனார், மாமியாரின் வரதட்சணை கொடுமைத் தாங்க முடியவில்லை' எனக் கூறி திருமணமான இரண்டே மாதங்களில் ரிதன்யா என்ற இளம் பெண் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்ப... மேலும் பார்க்க

Bengaluru: லிவ் இன் உறவில் வாழ்ந்த பெண் கொலை; சாக்கு மூட்டையில் கட்டி, குப்பை லாரியில் போட்ட இளைஞர்

பெங்களூரு மாநகராட்சி குப்பை லாரியில் எடுத்து வரப்பட்ட குப்பையில் சாக்குமூட்டை ஒன்று இருந்தது. அதனை துப்புரவு தொழிலாளர்கள் திறந்து பார்த்தபோது உள்ளே பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் கை, கால்கள் கட... மேலும் பார்க்க

”தாய் உடலை அடக்கம் செய்ய முடியாத வறுமை”- மனநலம் பாதிக்கப்பட்ட மகன்கள் செய்த நெஞ்சை உலுக்கும் செயல்!

நாகப்பட்டினம் அருகே உள்ள வடக்கு பொய்கைநல்லூர் காந்தி மகான் கடற்கரை சாலையில் உள்ள தைல மரகாட்டில் உள்ள குப்பை கொட்டும் இடத்தில் கடந்த 27ம் தேதி சாக்கு மூட்டை ஒன்று கிடந்துள்ளது. அந்த மூட்டையிலிருந்து து... மேலும் பார்க்க

சிவகங்கை: 'என் அண்ணன் முன்னாடி என்னையும் அரைமணிநேரம் அடிச்சாங்க' - உயிரிழந்த இளைஞரின் சகோதரர்

சிவகங்கை அருகே காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞர் மரணமடைந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக... மேலும் பார்க்க

கஞ்சா வேட்டையில், `கைத்துப்பாக்கி விற்பனை' அம்பலம்.. பீகாரைச் சேர்ந்த இருவர் கைது - பின்னணி என்ன?

திருப்பூர் மாநகரப் பகுதி முழுவதும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருப்பது குறித்து தனிப்பிரிவு போலீஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக க... மேலும் பார்க்க