செய்திகள் :

அமெரிக்காவுக்கு அதிக ஸ்மார்ட்போன்களை அனுப்பும் நாடு இந்தியா!

post image

அமெரிக்காவுக்கு அதிக எண்ணிக்கையில் ஸ்மார்ட்போன்களை தயாரித்து அனுப்பும் நாடாக இந்தியா உள்ளதாக மத்திய ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளைத் தொடக்கி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு பேசிய அவர்,

''நாட்டில் மின்னணு பொருள்களின் உற்பத்தி, கடந்த 11 ஆண்டுகளில் 6 மடங்கு அதிகரித்துள்ளது. இதன் மதிப்பு ரூ. 12 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதே காலகட்டத்தில் மின்னணு பொருள்களின் ஏற்றுமதியானது 8 மடங்கு உயர்ந்து, ரூ. 3 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. உலகில் அதிக எண்ணிக்கையில் ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

2025 நிதியாண்டில் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள மொத்த ஸ்மார்ட்போன்களில் 44% இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்டவை. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 13% ஆக இருந்த நிலையில், தற்போது மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது.

சீனாவில் இருந்து அமெரிக்காவுக்குச் செய்யப்பட்டு வரும் இறக்குமதிகளில், பெரும்பாலானவை இந்தியாவில் இருந்து தற்போது செய்யப்பட்டு வருகிறது. 2014ஆம் ஆண்டில் இருந்த உற்பத்தி நிலையங்களை விட இரு மடங்கு அதிகரித்து தற்போது 300 ஸ்மார்ட்போன் உற்பத்தி நிலையங்கள் நாட்டில் உள்ளன.

அரசுத் தரவுகளின்படி, 2014 ஆம் ஆண்டில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களில் 26% உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை. தற்போது அந்த எண்ணிக்கை 99.2% ஆக அதிகரித்துள்ளது.

2014 நிதியாண்டில் ஸ்மார்ட்போன்களுக்கான உற்பத்தி மதிப்பு ரூ. 18,900 கோடியாக இருந்த நிலையில், 2024 நிதியாண்டில் ரூ. 4.22 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது'' எனத் தெரிவித்தார்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கையால், சர்வதேச சந்தையில் சமரசமற்ற வளர்ச்சியை எட்டியுள்ளதாகவும், உலகளாவிய தொழில்நுட்ப மையமாக இந்தியா மாறியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | உத்தரகண்ட் இயற்கை பேரிடர்: 10 ஆண்டுகளில் 3,500 பேர் பலி

India now largest smartphone supplier to US, output up 6x in 11 years: IT Minister

எத்தனால் கலப்பு பெட்ரோல் குறித்து அச்சம் வேண்டாம்- மத்திய அரசு விளக்கம்

எத்தனால் 20 சதவீதம் கலக்கப்பட்ட ‘இ20’ பெட்ரோலைப் பயன்படுத்துவதால் வாகனங்கள் பாதிப்புக்குள்ளாகும் என்று சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என மத்திய அரசு விளக்க... மேலும் பார்க்க

காப்பீடு துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டு அனுமதி வேலைவாய்ப்பை உருவாக்கும்: மத்திய நிதியமைச்சா்

‘காப்பீடு நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை 100 சதவீதமாக உயா்த்துவது, வேலைவாய்ப்பை உருவாக்கும்’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை தெரிவித்தாா். மேலும், ... மேலும் பார்க்க

நாட்டு மக்களின் ‘பாதுகாவலராக’ உச்சநீதிமன்றம்: தலைமை நீதிபதி அமா்வு

நாட்டு மக்களின் பாதுகாவலராக உச்சநீதிமன்றம் உள்ளது என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தலைமையிலான அமா்வு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. தனது கட்சிகாரா்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கும் வழக்குரைஞா்... மேலும் பார்க்க

தண்டனையை நிறைவு செய்த கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்: மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

‘தண்டனைக் காலத்தை நிறைவு செய்த கைதிகளை உடனடியாக சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும்’ என்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. உத்தர பிரதேச மா... மேலும் பார்க்க

‘5 அதிகாரிகளை இடைநீக்கம் செய்யாதது ஏன்?’- மேற்கு வங்க தலைமைச் செயலருக்கு தோ்தல் ஆணையம் சம்மன்

மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியலில் முறைகேட்டில் ஈடுபட்டதாக தங்களால் சுட்டிக் காட்டப்பட்ட 5 அரசு அதிகாரிகள் மீது இன்னும் பணியிடைநீக்க நடவடிக்கை எடுக்காதது குறித்து நேரில் விளக்கமளிக்கும்படி, மாநில ... மேலும் பார்க்க

ஹைதராபாத் நகைக்கடையில் துப்பாக்கியால் சுட்டு கொள்ளை - பட்டப்பகலில் துணிகரம்

தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் திங்கள்கிழமை நகைக்கடைக்குள் புகுந்த முகமூடிக் கொள்ளையா்கள் துப்பாக்கியால் சுட்டு நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவா்கள் துப்பாக்கியால் ச... மேலும் பார்க்க