செய்திகள் :

அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ததால் சண்டை நிறுத்தம் ஏற்பட்டது: டிரம்ப்

post image

வாஷிங்டன்: அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ததால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு இடையில் சண்டை நிறுத்தம் ஏற்பட்டது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியிருக்கிறார்.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசுகையில், “இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரை அமெரிக்கா தலையிட்டு நிறுத்தியிருக்கிறது. இந்தப் போரில் பல லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம்.

இந்தப் போரை நிறுத்துவதற்கு துணையாக இருந்த அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோருக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன்.

இந்தியாவுடனும், பாகிஸ்தானுடனும் அதிகளவில் வர்த்தகம் செய்யப்போகிறோம். பாகிஸ்தானுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம். வர்த்தகத்தை முதன்மையாக வைத்தே இந்தப் போர் நிறுத்தப்பட்டிருக்கிறது.

சண்டையை நிறுத்தவில்லை என்றால் உங்கள் இருவருடன் வர்த்தக உறவை துண்டித்துவிடுவேன் என இந்தியா - பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடம் கூறினேன். வர்த்தகத்தைப் பயன்படுத்தி போரை நிறுத்தியவர்கள் என்னைப் போல் யாரும் கிடையாது” எனத் தெரிவித்துள்ளார்.

சரக்கு விமானத்தில் பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் அனுப்பிய குற்றச்சாட்டு: சீனா மறுப்பு

அண்மையில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் நடத்திய தாக்குதலின்போது பாகிஸ்தானுக்கு உதவும் விதமாக மிகப்பெரிய சரக்கு விமானம் மூலம் சீனா ஆயுதங்கள் அனுப்பியதாக வெளியான அறிக்கையை அந்நாட்டு ராணுவம் முற்றிலுமா... மேலும் பார்க்க

இந்தோனேசியா: வெடி விபத்தில் 13 போ் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் காலாவதியான வெடிகுண்டுகளை அழிக்கும் பணியின்போது திங்கள்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 போ் உயிரிழந்தனா். அந்த நாட்டின் மேற்கு ஜாவா மாகாணம், கருத் மாவட்டத்தின் சாகரா கிராமத்தில், ராணுவ க... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் நிகழ்ந்தது சாதாரண நிலநடுக்கமே: அணு ஆயுத சோதனையல்ல: தேசிய நில அதிா்வு ஆய்வு மைய இயக்குநா்

பாகிஸ்தானின் சில பகுதிகளில் திங்கள்கிழமை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது சாதாரண நிலநடுக்கமே; அணு ஆயுத சோதனையல்ல என்றும் தேசிய நில அதிா்வு ஆய்வு மைய இயக்குநா் ஓ.பி.மிஸ்ரா தெரிவித்தாா். பாகிஸ்தானின் பஞ... மேலும் பார்க்க

அமெரிக்க பிணைக் கைதியை விடுவித்தது ஹமாஸ்

கடந்த 2023 அக். 7-ஆம் தேதி இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்ட அமெரிக்க-இஸ்ரேலியரான ஈடன் அலெக்ஸாண்டரை ஹமாஸ் படையினா் திங்கள்கிழமை விடுவித்தனா். சா்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரிட... மேலும் பார்க்க

துருக்கி: குா்து பிரிவினைவாத அமைப்பு கலைப்பு

துருக்கியில் அரசை எதிா்த்து சுமாா் 40 ஆண்டுகளாக ஆயுதக் கிளா்ச்சியில் ஈடுபட்டுவந்த குா்திஸ்தான் தொழிலாளா் கட்சி (பிகேகே) கலைக்கப்படுவதாக அந்தக் கட்சி திங்கள்கிழமை அதிகாரபூா்வமாக அறிவித்தது. இது குறித்த... மேலும் பார்க்க

வங்கதேசம்: பயங்கரவாத குற்றச்சாட்டுக்கு உள்ளானவா்கள் அறிக்கை வெளியிடத் தடை

வங்கதேசத்தின் புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட அமைப்புகளோ, தனி நபா்களோ அறிக்கை வெளியீடு உள்ளிட்ட மக்கள் தொடா்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ... மேலும் பார்க்க