செய்திகள் :

அமெரிக்கா முதன்முதலாகப் பயன்படுத்திய பங்கர் பஸ்டர்! பெயரிலேயே பயம் காட்டும் குண்டுகள்!

post image

ஈரானில் உள்ள அணு ஆயுத உள்கட்டமைப்புகளைக் குறி வைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருப்பது உலகளவில் மிகப்பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த தாக்குதலில் அமெரிக்கா பயன்படுத்தியிருக்கும் பங்கர் பஸ்டர்தான் இன்றைய பேசுபொருள். பெயரிலிருந்தே இந்த குண்டுகள் பூமியைக் குடைந்துசென்று தாக்கும் என்பது தெளிவாகிறது.

ஈரான் அணு ஆயுத உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் நடவடிக்கைகளுக்கு “ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்” எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான பெண்டகன் அறிவித்திருந்தது.

இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் பத்து நாள்களுக்கும் மேல் நீடித்துவரும் நிலையில், இதில் அமெரிக்காவும் தலையிட்டிருப்பது நிலைமையை தீவிரமடையச் செய்துள்ளது. இரு நாடுகளும் பரஸ்பரம் பலத்த தாக்குதல் நடத்தி வந்த நிலையில், அமெரிக்காவும் நேரடியாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஈரானில் தாக்குதலை தொடங்கியது.

அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வமாக ஜிபியு-57 ஏ/பி என்றழைக்கப்படும் பங்கர் பஸ்டர் குண்டுகள் என்பது உலகிலேயே அணு ஆயுதமற்ற, மிக சக்திவாய்ந்த குண்டுகளாகக் கருதப்படுகின்றன.

“ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்” நடவடிக்கைகளில் முதல்கட்டமாக ஈரானில் ஃபார்டவ், நடன்ஸ், இஸ்பஹான் ஆகிய இடங்களில் உள்ள 3 முக்கிய அணுசக்தி தளவாடங்களில் துல்லியமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் 30 ஆயிரம் பவுண்டு எடைகொண்ட பங்கர் பஸ்டர் குண்டுகளை அமெரிக்கா பயன்படுத்தியிருக்கிறது. ஃபார்டவ் பகுதியில் இந்த பங்கர் பஸ்டர் குண்டுகள் பல வீசப்பட்டதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போர் விமானங்கள்

மிசௌரி விமானப் படைத் ஏவுதளத்தில் இருந்து இந்த குண்டுகளுடன் பறந்த ஏழு பி-2 போர் விமானங்களும் பங்கர் பஸ்டர் குண்டுகளை வீசிவிட்டு பாதுகாப்பாக மீண்டும் ஏவுதளத்தில் தரையிறங்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குண்டுகள் 2,400 கிலோ கிராம் எடைகொண்ட வெடிபொருள்களுடன் பூமியைத் துளைத்துக்கொண்டு சென்று தரைக்குள் புதைந்திருக்கும் இலக்கைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும். இது முதலில், தரையைத் துளைத்தபிறகே வெடித்துச் சிதறும் வல்லமை பெற்றது.

ஈரான், எதிரி நாடுகளிலிருந்து எந்த அபாயமும் ஏற்படக் கூடாது என்பதற்காக,மலையைக் குடைந்து அதற்குள் அணு மையங்களை உருவாக்கி வைத்துள்ளது. இந்த மலை மீதுதான் அமெரிக்கா பங்கர் பஸ்டர்களை வீசியிருக்கிறது. பொதுவாக உலக நாடுகள், தங்களது மிக முக்கிய பாதுகாப்புத் தளவாட அமைப்புகளை பூமிக்கடியிலோ அல்லது மலையைக் குடைந்தோ அமைத்துவிடும். அப்படிப்பட்ட இடங்களை சிதறடிக்கவே, அமெரிக்க பங்கர் பஸ்டர் என்ற பாகுபலி குண்டுகளைத் தயாரித்து வைத்திருந்தது.

முதன் முதலாக ஈரான் மீதுதான், அமெரிக்கா இந்த வகை குண்டுகளை வீசித் தாக்கியிருக்கிறது. இந்த குண்டுகள் ஒரு தரைப்பகுதியில் விழுந்தால் அங்கிருந்து 200 அடி (60 மீட்டர்கள்) ஆழம் வரை குடைந்துசென்று தாக்கும் திறன்பெற்றது பங்கர் பஸ்டர் குண்டுகள். அதுவே கான்கிரீட் தளமாக இருந்தால் பங்கர் பஸ்டர்கள் 60 அடி ஆழம் வரை சென்று தாக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு, செயற்கைக் கோள் புகைப்படங்கள் மூலம், ஈரானின் அணு மையங்கள் கடுமையான சேதத்தை சந்தித்திருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரானுக்கு உதவத் தயார்! அமெரிக்க தாக்குதலுக்கு கடும் கண்டனம்! - ரஷியா

ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தாக்குதலுக்கு ரஷிய அதிபர் புதின் கடும் கண்டனம் தெரிவித்தார். ஈரானின் அணுசக்தி திட்டங்களை முடக்கும் நோக்கில் ஈரானின் ராணுவ, அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் கடந்த ஜூன்... மேலும் பார்க்க

பங்கர் பஸ்டர் வேஸ்ட்.. முன்பே வெளியேற்றப்பட்ட யுரேனியம்: டிரம்ப்புக்கு டஃப் கொடுக்கும் ஈரான்!

அமெரிக்கா, பங்கர் பஸ்டர் குண்டுகளைக் கொண்டு தாக்குதல் நடத்துவதற்கு முன்gபே, ஃபார்டவ் அணுசக்தி மையத்திலிருந்து 400 கிலோ கிராம் யுரேனியத்தை பாதுகாப்பாக வெளியேற்றிவிட்டதாக ஈரான் கூறி வரும் நிலையில் அது ப... மேலும் பார்க்க

ஈரானின் 6 விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்! புதினை சந்திக்கும் ஈரான் அமைச்சர்

ஈரானின் 6 விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டங்களை முடக்கும் நோக்கில் ஈரானின் ராணுவ, அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் கடந்த ஜூன் 13-ஆம் தேதி தாக்குத... மேலும் பார்க்க

இஸ்ரேல் பெரிய தவறு செய்துவிட்டது: ஈரான் தலைவர் கமெனி

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் இஸ்ரேல் பெரிய தவறு செய்துவிட்டது என்று அந்நாட்டின் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில்... மேலும் பார்க்க

சிரியாவில் தேவாலயத்தில் தற்கொலைப்படை தாக்குதல்- 22 பேர் பலி

டமாஸ்கஸில் உள்ள தேவாலயத்தில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 22 பேர் பலியான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் பிரார்த்தனை செய்துகொண... மேலும் பார்க்க

அமெரிக்க தாக்குதல்: ஈரானுக்கு இருக்கும் வழிகள்!

ஈரான் கடந்த பல்லாண்டுகளாக உள்நாட்டிலும், பிராந்தியம் முழுவதும் பல அடுக்கு ராணுவத் தளங்களை கட்டமைத்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதை இவை தடுத்து வந்தன. இந்நிலையில், இஸ்ரேலுடனான ஈரான... மேலும் பார்க்க