செய்திகள் :

அமெரிக்க பூங்காவில் துப்பாக்கிச் சூடு! 7 பேர் படுகாயம்!

post image

அமெரிக்காவின் வாஷிங்டனிலுள்ள பூங்காவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வாஷிங்டனின் தகோமா புறநகர் பகுதியிலுள்ள ஹேரி டோட் பூங்காவில் நேற்று (மே 28) இரவு 8 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அங்கு வந்த மீட்புப் படையினர், உடனடியாக படுகாயமடைந்த 5 பேரை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். மேலும், 2 பேர் தாங்களாகவே மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். அவர்களில் 3 பேரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தத் தாக்குதல் குறித்து அந்நாட்டு காவல் துறையினர், இதனை யார் நடத்தியது? படுகாயமடைந்தவர்கள் குறிவைக்கப்பட்டனரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்ட சமயத்தில், அந்தப் பூங்காவில் 100-க்கும் மேற்பட்டோர் இருந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

முன்னதாக, கடந்த சில நாள்களுக்கு முன்பு பிலடெல்பியா நகரத்திலுள்ள பூங்காவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் படுகாயமடைந்ததுடன், 2 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:பனாமா அதிபருடன் சசி தரூர் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு!

ஜெர்மனியில் வீட்டின் மீது மோதிய சிறிய ரக விமானம்: 2 பேர் பலி

ஜெர்மனியில் வீட்டில் மொட்டை மாடியில் சிறிய ரக விமானம் மோதியதில் 2 பேர் பலியானார்கள். மேற்கு ஜெர்மனியில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டடத்தின் மொட்டை மாடியில் சனிக்கிழமை சிறிய ரக விமானம் மோதி விபத்துக்குள்... மேலும் பார்க்க

தலிபான் அரசுடன் உறவை வலுப்படுத்தும் பாகிஸ்தான்!

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாட்டு அரசுகளும் தங்களுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளன. ஆப்கானிஸ்தானின் இடைக்கால தலிபான் அரசுக்கும், பாகிஸ்தான் அரசுக்கும் இடைய... மேலும் பார்க்க

நைஜீரிய பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 151 ஆக உயர்வு! 3000 பேர் வெளியேற்றம்!

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் மோக்வா நகரத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் பலியாவர்களின் எண்ணிக்கை 151 ஆக உயர்ந்துள்ளது. நைஜர் மாகாணத்திலுள்ள முக்கிய சந்தை நகரமான மோக்வாவில், பெய்த பருவமழையால் ... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகள் சிக்கினர்

பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட 34 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடும் பணியில் அந்நாட்டு அரச... மேலும் பார்க்க

சிரியாவின் கடலோர நகரங்களில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்!

சிரியாவின் டார்டூஸ் மற்றும் லடாகியா ஆகிய கடலோர மாகாணங்களின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. டார்டூஸ் மற்றும் லடாகியா ஆகிய மாகாணங்களின், மக்கள் குடியிருப்புகளின் அருகில் அமைந்துள்ள முன்... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் உடன்பாட்டுக்கு அமெரிக்காதான் காரணம்! 10-வது முறையாக டிரம்ப் பேச்சு!

வர்த்தகப் பேச்சுவார்த்தையின் மூலமாக இந்தியா - பாகிஸ்தான் இடையேயான அணு ஆயுதப் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த மே 7 ஆம் தேதி பாகிஸ... மேலும் பார்க்க