செய்திகள் :

அம்பேத்கர் மற்றும் அவரது அரசியலமைப்பை அவமதிக்கும் பாஜக ஆர்எஸ்எஸ்: ராகுல்

post image

பாஜக, ஆர்எஸ்எஸ் இணைந்து அம்பேத்கரையும் அவர் உருவாக்கிய அரசியலமைப்பையும் அவமதிப்பதாகக் காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

ஜெய் பாபு, ஜெய் பீம், ஜெய் சம்விதான் பேரணியில் ராகுல் காந்தி கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது,

காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் நாடு தழுவிய சாதி கணக்கெடுப்பு நடத்தப்படும். பிரதமர் நரேந்திர மோடி ஒதுபோதும் சாதி கணக்கெடுப்பு நடத்தமாட்டார், ஏனெனில் அதைக் கண்டு அவர் பயப்படுகிறார். மேலும் 50 சதவீத இட ஒதுக்கீட்டை முறியடித்து, மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டிலும் இது தொடர்பாக ஒரு சட்டம் கொண்டுவரப்படும்.

பாஜக தலைமையிலான மத்திய அரசு கோடீஸ்வரர்களுக்காக வேலை செய்வதாகக் குற்றம் சாட்டிய அவர், வேலைவாய்ப்புகள் முடிவுக்கு வந்துவிட்டது. நாட்டின் செல்வம் அனைத்தும் ஒருசில முதலாளிகளிடம் ஒப்படைக்கப்படுவதால், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் ஏழைகள் மீண்டும் அடிமைகளாக ஆக்கப்படுகிறார்கள்.

பாஜகவும், ஆர்எஸ்எஸும் நாட்டில் சுதந்திரத்திற்கு முந்தைய சூழ்நிலையையே விரும்புகின்றன. அங்கு ஏழைக்கு எந்த உரிமைகளும் வழங்கப்படவில்லை, பணக்காரர்களுக்கு மட்டுமே உரிமைகள் வழங்கப்படுவதாக அவர் என்று குற்றம் சாட்டினார்.

அம்பேத்கரையும் அவர் வடிவமைத்த அரசியலமைப்பையும் மாற்ற பாஜக-ஆர்எஸ்எஸ் முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். நமது அரசியலமைப்பு மாற்றப்படும் நாளில் நாட்டில் பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், பழங்குடியினருக்கு எதுவும் மிச்சமிருக்காது என்று ராகுல் பேரணியில் கூறினார்.

சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு செல்ல ரூ. 60 லட்சம் கட்டணம்! திடுக்கிடும் தகவல்!

சட்டவிரோதாமாக அமெரிக்காவுக்கு செல்வதற்காக ரூ. 60 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டதாக அந்நாட்டில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.அமெரிக்கா செல்வதற்காக வாங்கப்பட்ட கடனை எ... மேலும் பார்க்க

விளையாட்டு அமைப்புகளில் நோ்மை, சுதந்திரம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

இந்திய விளையாட்டு நிா்வாக அமைப்புகளில் நோ்மை, தன்னாட்சி, சுதந்திரமான செயல்பாடு ஆகியவற்றை கொண்டுவர கடுமையான நடவடிக்கைகள் தேவை என உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.மேலும், தனிப்பட்ட லாப... மேலும் பார்க்க

தில்லி பேரவை தேர்தல்: அரசியல் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள் வாக்களிப்பு

தில்லி சட்டப்பேரவைக்கு புதன்கிழமை நடைபெற்ற தேர்தலில் குடியரசுத் தலைவர் திரெüபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் கு... மேலும் பார்க்க

குறைந்த செலவிலான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: இந்தியாவுக்கு உதவுவதாக சாம் ஆல்ட்மேன் தகவல்

நமது சிறப்பு நிருபர்குறைந்த செலவிலான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்க இந்தியாவுக்கு உதவ தயாராக உள்ளதாக "ஓபன்ஏஐ' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் தெரிவித்தார்.செயற்கை நுண்ணறி... மேலும் பார்க்க

கேட்-பி தேசிய நுழைவுத் தோ்வு: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

முதுநிலை உயிரி தொழில்நுட்ப படிப்புகளில் சேருவதற்கான கேட்-பி தேசிய நுழைவுத் தோ்வுக்கு மாா்ச் 3 வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது. நாடு முழுவதுமுள்ள உயா்கல்வி நிறுவ... மேலும் பார்க்க

உத்தரகண்ட் பொது சிவில் சட்டம்: 10 நாள்களில் ஒரேயொரு ‘லிவ்-இன்’ உறவு பதிவு

உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்து 10 நாள்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை ஒரேயொரு ‘லின்-இன்’ (திருமணம் செய்யாமல் சோ்ந்து வாழ்தல்) உறவு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்கீழ் ‘லி... மேலும் பார்க்க