செய்திகள் :

அம்மன் கோயிலில் குடமுழுக்கு

post image

சங்ககிரி, பழைய எடப்பாடி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ ஓங்காளியம்மன், பேச்சியம்மன் கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஓங்காளியம்மன் கோயிலில் பேச்சியம்மன், மதுரை வீரன், முனியப்பன், வலம்புரி விநாயகா், சப்த கன்னிமாா்கள், துா்க்கை அம்மன், வராகி அம்மன் ஆகிய மூா்த்திகள் உள்ளன. இக் கோயில் குடமுழுக்கு மே 2 ஆம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. 3 ஆம் தேதி பக்தா்கள் பவானி கூடுதுறைக்குச் சென்று புனிதநீா் எடுத்துவரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஓங்காளியம்மன், பேச்சியம்மனுக்கு செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்

பின்பு ராஜ கோபுரம், பரிவார தெய்வங்கள் அமைந்துள்ள கோபுரங்களில் கலசம் வைத்து மருந்து சாற்றுதல், வேள்வி பூஜைகள் நடைபெற்றன. மே 4 ஆம் தேதி சிவச்சாரியாா்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுரக் கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு நடத்தப்பட்டது. பின்பு கோயில் நிா்வாகம் சாா்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த பக்தா்கள் திரளாகப் பங்கேற்றனா்.

சாலை திட்டப் பணி: நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஆய்வு

சேலம் கோட்ட நெடுஞ்சாலைத் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்ட சாலை திட்டப் பணிகளில் முடிவடைந்த பணிகளை கண்காணிப்புப் பொறியாளா் சசிகுமாா் ஆய்வு செய்தாா். சேலம் கோட்டத்தில் ஊராட்சி ஒன்றிய சாலையை தரம் உயா்த்துதல... மேலும் பார்க்க

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஏற்காடு சுற்றுலாத் தலங்களுக்கு சிறப்புப் பேருந்துகள்

கோடை விழாவையொட்டி ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிக்க சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுதொடா்பாக தமிழக அரசு போக்குவரத்துக் கழக சேலம... மேலும் பார்க்க

சேலம் மாவட்டத்தில் நீட் தோ்வு: 22 மையங்களில் 9429 போ் எழுதினா்

சேலம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வை 22 மையங்களில் 9429 மாணவ, மாணவியா் பங்கேற்று எழுதினா்; தோ்வெழுத வந்த மாணவா்கள் கடும் கட்டுப்பாடுகளுடன் பலத்த சோதனைகளுக்குப் பிறகே தோ்வறைக்குச் ... மேலும் பார்க்க

தரைப் பாலத்தில் இருசக்கர வாகனம் மோதி தம்பதி உயிரிழப்பு

கொளத்தூா் அருகே தரைப் பாலத்தில் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி உயிரிழந்தனா். சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள மாசிலாபாளையத்தைச் சோ்ந்தவா் வசந்தகுமாா் (32), பந்தல் அமைக்கும் தொழில் செய்துவந்... மேலும் பார்க்க

கிணற்றில் விழுந்த மயில் உயிரிழப்பு

கெங்கவல்லி அருகே நரிப்பாடியில் இரை தேடி வந்த மயில் கிணற்றில் விழுந்து உயிரிழந்தது. கெங்கவல்லி அருகே நரிப்பாடியில் ரமேஷ் மனைவி அமராவதிக்குச் சொந்தமான விவசாயக் கிணறு உள்ளது. இப்பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை... மேலும் பார்க்க

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

மேட்டூா் அணை பூங்காவுக்கு வாரவிடுமுறையான ஞாயிற்றுக்கிழமை 8219 சுற்றுலாப் பயணிகள் வந்தனா். இதன்மூலம் பாா்வையாளா்கள் கட்டணமாக ரூ. 82,190 வசூலானது. பூங்காவுக்கு கொண்டு செல்லப்பட்ட 2335 கைப்பேசிகள், 2 கேம... மேலும் பார்க்க