செய்திகள் :

பாகிஸ்தானுக்குச் செல்லும் தண்ணீர் நிறுத்தம்! அணைகளின் மதகுகள் மூடல்!

post image

ஜம்மு - காஷ்மீரில் செனாப் நதிக்கு குறுக்கேவுள்ள பாக்லிஹார் மற்றும் சலால் அணைகளில் இருந்து பாகிஸ்தானுக்கு வெளியேறும் தண்ணீர் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே உள்ள பைசாரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்தியதாக குற்றச்சாட்டை முன்வைத்த இந்திய அரசு, அந்நாட்டுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அதில், முக்கியமாக கடந்த 1960-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து, ஜம்மு - காஷ்மீரில் ரம்பன் மாவட்டத்தில் செனாப் நதிக்கு குறுக்கேவுள்ள பாக்லிஹார் நீர்மின்சார அணையின் அனைத்து மதகுகளும் மூடப்பட்டுள்ளன.

அதேபோல், ரியாசி மாவட்டத்தில் சலால் அணையின் மதகுகளும் மூடப்பட்டது.

மேலும், வடக்கு காஷ்மீரில் ஜீலம் நதிக்கு குறுக்கேவுள்ள கிஷன்கங்கா அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரும் நிறுத்தப்பட்டுள்ளது.

அணைகளின் நீர் வெளியேற்ற கட்டுப்பாடுகள் அனைத்தும் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போராக கருதப்படும்

சிந்து நதிநீா் ஒப்பந்தத்துக்கு எதிராக நதிநீரை திருப்பிவிட இந்தியா மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியும் போா் நடவடிக்கையாகவே கருதப்படும் என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்திருந்தது.

இதனிடையே, சிந்து நதியில் தண்ணீர் வராவிட்டால் இந்தியர்களின் ரத்தம் ஓடும் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) தலைவர் பிலாவல் பூட்டோ ஜா்தாரி கடந்த வாரம் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : 'எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது' - ஹிமான்ஷி நர்வாலுக்கு தேசிய மகளிர் ஆணையம் ஆதரவு

நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம்: தலைமை நீதிபதியிடம் விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு!

உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் இருந்து கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் அமைத்த விசாரணைக் குழு தனது அறிக்கையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் சமர்ப்பித்து... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டம் குறித்து வதந்திகளைப் பரப்புகிறது காங்கிரஸ்: மத்திய அமைச்சர்

வக்ஃப் திருத்தச் சட்டம் 2025 குறித்து காங்கிரஸ் வதந்திகளைப் பரப்பி வருவதாக மத்திய அமைச்சர் பூபேந்திரா யாதவ் குற்றம் சாட்டினார். தில்லி பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், சமூக நீதி, பொருளா... மேலும் பார்க்க

மோடியுடன் பாதுகாப்புத் துறை செயலர் ஆலோசனை!

இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றமான சூழல் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பாதுகாப்புத் துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங் விளக்கம் அளித்துள்ளார்.ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்கா... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டத்துக்கு எதிரான விசாரணை ஒத்திவைப்பு!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஓய்வுபெறவுள்ள நிலையில், புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கவுள்ள பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வில் விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.முஸ்லிம்கள் தானமாகவும், நன்... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஹிந்து அமைப்பு மனு!

மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கேரளத்தைச் சேர்ந்த ஹிந்து அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், வக்ஃப் திருத்தச் சட்டம் இந்தியாவில் முஸ்லிம் சமூ... மேலும் பார்க்க

அரசுக் கட்டடங்களுக்கு பசுஞ்சாணத்தைப் பூச வேண்டும்: யோகி ஆதித்யநாத்

அரசுக் கட்டடங்களுக்கு பசுஞ்சாணத்தை அடிப்படையாகக் கொண்ட இயற்கைப் பெயிண்டைப் பூச வேண்டும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.மேலும், கால்நடை பராமரிப்பு மற்ற... மேலும் பார்க்க