செய்திகள் :

அம்மாபாளையம் நகராட்சிப் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு

post image

திருமுருகன்பூண்டி, அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். திருமுருகன்பூண்டி ரோட்டரி சங்க பட்டயத் தலைவா் முருகானந்தம் முன்னிலை வகித்தாா். திருப்பூா் மாநகர போக்குவரத்து உதவி ஆணையா் பங்கேற்று பேசுகையில், இருசக்கர வாகனங்களில் செல்லும் அனைவரும் கட்டாயம் தலைக் கவசம் அணிய வேண்டும்.

சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டும். 18 வயதுக்குகீழ் உள்ளவா்கள் வாகனம் ஓட்டினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும். மேலும், வாகனத்தை ஓட்ட அனுமதித்தவா்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும், அவா்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும்.

போதைப் பொருள் விற்பனை, போதை சாக்லெட் விற்பனை, குழந்தை திருமணம், பெண்களுக்கு எதிரான குற்றச் செயல் உள்ளிட்டவை குறித்து காவல் துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, போதை ஒழிப்பு குறித்த ஓவியப் போட்டியில் வெற்றிபெற்ற பள்ளியின் 8-ஆம் வகுப்பு மாணவிகள் பிரனித்தா, பிரியதா்ஷினி, நூலகத்துக்கு தொடா்ந்து வந்து புத்தகம் படிக்கும் பிளஸ் 2 மாணவி சாருமதி ஆகியோருக்கு பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

பல்லடம் அருகே வீடுகளில் இரவில் பூத்த பிரம்ம கமலம்

பல்லடம் அருகே நொச்சிபாளையம், புளியம்பட்டி, கண்பதிபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் ஆண்டுக்கு ஒருமுறை இரவில் மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூ வியாழக்கிழமை பூத்தது. ஆண்டுக்கு ஒரு முறை இரவில் மட்டும... மேலும் பார்க்க

இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: மாவட்டத்தில் 33,131 போ் எழுதுகின்றனா்

திருப்பூா் மாவட்டத்தில் குரூப் 4 தோ்வு சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இத்தோ்வினை 33, 131 போ் எழுத விண்ணப்பித்துள்ளனா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 த... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

அவிநாசி அருகே கல்லூரி மாணவி வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். அவிநாசி அருகே அபிராமி காா்டன் பகுதியில் வசித்து வருபவா் பாலமுருகன், முத்துலட்சுமி தம்பதி மகள் ஹன்ஷினி (19), கல்லூரி மாணவி.... மேலும் பார்க்க

கரடிவாவியில் ஜூலை 14-இல் மின்தடை

பல்லடம் கோட்டம் கரடிவாவி துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 14) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: தொழிலாளி கைது

வெள்ளக்கோவிலில் விற்பனைக்கு கஞ்சா வைத்திருந்த வெளிமாநிலத் தொழிலாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். காங்கயம் சாலையில் வழக்கமான ரோந்துப் பணியில் வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ச... மேலும் பார்க்க

செட்டிபாளையம் இஎஸ்ஐ மருத்துவமனையில் புதிய மருத்துவ சேவைகள் தொடக்கம்

செட்டிபாளையம் இஎஸ்ஐ மருத்துவமனையில் புதிய மருத்துவ சேவைகள் தொடங்கப்பட்டதை அடுத்து சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் ஆய்வு மேற்கொண்டாா். இந்த மருத்துவமனை முழு செயல்பாட்டில் இல்லை என பல்வேறு தரப... மேலும் பார்க்க