செய்திகள் :

"அம்மாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக ஆட்சியை மத்தியில் இருந்தவர்கள் காப்பாற்றினர்" - இபிஎஸ்

post image

அதிமுக-விலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று செப்டம்பர் 5-ம் தேதி அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள்கள் கெடு விதித்திருந்தார்.

அந்தக் கடைசி நாளான நேற்று, தமிழக முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சென்னை வடபழனியில் அ.தி.மு.க பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சிலரைப் பெயர் குறிப்பிடாமல் மறைமுகமாகக் கடுமையக்ச் சாடினார்.

அதிமுக பொதுக்கூட்டம் - எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுக்கூட்டம் - எடப்பாடி பழனிசாமி

கூட்டத்தில் தன்னுடைய உரையில் எடப்பாடி பழனிசாமி, "தருமபுரியில் இந்த மாதம் 17, 18 தேதிகளில் சுற்றுப்பயணம் வைத்திருந்தேன்.

வானிலை அறிக்கையில் மழை வருவது உறுதியானதால் அந்தத் தேதியில் அங்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளாமல், இதே மாதம் 28, 29 தேதிகளில் தருமபுரியில் சுற்றுப்பயணம் தொடரும் என்று அறிவித்தேன்.

உடனே, மத்திய உள்துறை அமைச்சரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த போகிறார் என்று செய்தி வெளியாகிறது.

அ.தி.மு.க-வை எவராலும் எதுவும் செய்ய முடியாது. எங்களுக்கு ஆட்சி அதிகாரத்தை விட தன்மானம்தான் முக்கியம்.

சிலபேரை கைக்கூலியாக வைத்துக்கொண்டு ஆட்டம் போடுகின்றனர். கைக்கூலிகள் யாரென்று அடையாளம் கண்டுவிட்டோம். விரைவில் முடிவு கட்டப்படும்.

அ.தி.மு.க தலைமை அலுவலகத்தை அடித்து நொறுக்கியவர்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டுமா?

அ.தி.மு.க ஆட்சியைக் கவிழ்க்க 18 எம்.எல்.ஏ-க்களைக் கடத்திக் கொண்டு போனவரை கட்சியில் சேர்க்க வேண்டுமா? யாரும் என்னை மிரட்டி பார்க்க முடியாது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க ஆட்சியில் இருந்தபோதும் சரி, இப்போதும் சரி, மத்தியில் இருக்கின்றவர்கள் யாரும் எந்த அச்சுறுத்தலும் கொடுக்கவில்லை.

அம்மாவின் மறைவுக்குப் பிறகு சில பேர் கட்சியைக் கபளீகரம் செய்து ஆட்சியைக் கவிழ்க்க பார்த்தார்கள்.

அப்போது காப்பாற்றியவர்கள் மத்தியில் இருந்தவர்கள். அ.தி.மு.க-வுக்கு எவர் துரோகம் செய்தாலும் அவர் விலாசம் இல்லாமல் போய்விடுவார்" என்று காட்டமாகப் பேசினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

"அதிமுக ஆட்சியைக் காப்பாற்றியது பாஜக அல்ல; அதிமுக எம்எல்ஏக்கள்" - இபிஎஸ்-க்கு டிடிவி தினகரன் பதில்

சென்னையில் நேற்று (செப்.16) நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "சில பேரைக் கைக்கூலியாக வைத்துக்கொண்டு ஆட்டம் போடுகின்றனர்.கைக்கூலிகள் யாரென்று அடையாளம் கண்டுவி... மேலும் பார்க்க

பாஜக - அதிமுக கூட்டணி: ”வரும் சட்டமன்றத் தேர்தலில் 5 முனைப்போட்டி இருக்கலாம்” - நயினார் நாகேந்திரன்

நெல்லையில் தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோரை இணைப்பது குறித்து இப... மேலும் பார்க்க

அதிமுக: "தன்மானம்தான் முக்கியம் என்றால் டெல்லி சென்றது ஏன்?" - இபிஎஸ்யை விமர்சித்த டிடிவி தினகரன்

தஞ்சாவூரில் இன்று (செப்டம்பர் 16) அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவரான டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசி வருகிறார். அப்போது, "பழனிசாமி ஆட்சியைக் காப்பாற்றியது பாஜக அல்ல. அதிமுக எம... மேலும் பார்க்க

பாமக: "கூட்டணி குறித்து தலைவர் அன்புமணிதான் முடிவெடுப்பார்" - பொருளாளர் திலகபாமா சொல்வது என்ன?

அன்புமணி ராமதாஸை பா.ம.க தலைவராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்து கடிதம் வழங்கியுள்ளதாக சிவகாசியில் பா.ம.க பொருளாளர் திலகபாமா தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.இதனைத் தொடர்ந்து செய்த... மேலும் பார்க்க

திருச்சி மதிமுக மாநாடு: "என்னை விட்டு விலகியவர்களை நான் விமர்சித்ததில்லை" - வைகோ பேச்சு

ம.தி.மு.க சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு செப்டம்பர் 15-ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், அண்ணாவின் 117-வது பிறந்த நாளான நேற்று ம.தி.மு.க சார்பில் திருச்சி மாவட்டம், சிறு... மேலும் பார்க்க

அன்புக்கரங்கள்: "குழந்தை தொழிலாளர்களாக மாறக் கூடாது என்பதற்காக இத்திட்டம்" - தங்கம் தென்னரசு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் அன்புக் கரங்கள் திட்டம் துவக்க விழா நடைபெற்றது.இதில் அமைச்சர... மேலும் பார்க்க