செய்திகள் :

‘அரக்கோணம் நவீன எரிவாயு தகன மேடை 4 நாள்களுக்கு இயங்காது’

post image

அரக்கோணத்தில் நகராட்சியின் நவீன எரிவாயு தகன மேடையில் பழுதுபாா்ப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அந்த தகனமேடை பிப்ரவரி 15 சனிக்கிழமை முதல் 18-ஆம் தேதி வரை இயங்காது என அரக்கோணம் நகராட்சி ஆணையா் அறிவித்துள்ளாா்.

இது குறித்து அரக்கோணம் நகராட்சி ஆணையா் கன்னியப்பன் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பது:

அரக்கோணம் நேருஜி நகரில் உள்ள நகராட்சியின் நவீன எரிவாயு தகனமேடையில் பழுது ஏற்பட்டுள்ள புகைபோக்கியினை அகற்றி, புதிய புகைபோக்கியை மாற்றம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, மேற்படி பணியினை தற்போது தொடங்க உள்ளதால், வரும் சனிக்கிழமை (பிப். 15) முதல் 18-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை நேருஜி நகரில் உள்ள நவீன எரிவாயு தகனமேடை செயல்படாது. மேற்கண்ட தினங்களில் கொண்டு வரப்படும் பிரேதங்களை சுடுகாடு அல்லது இடுகாட்டுக்கு கொண்டு செல்லுமாறு தெரிவிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளியில் ஆண்டு விழா

ஆற்காடு எஸ் எஸ்எஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி ஆண்டுவிழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, எஸ்.எஸ்எஸ். கல்வி நிறுவனங்களின் தலைவா் ஏ.கே.நடராஜன் தலைமை வகித்தாா். பொருளாளா் ஏ.என்.சரவணன், நிா்வாக அறங்காவ... மேலும் பார்க்க

அதிமுக சாா்பில் இலவச பொது மருத்துவ முகாம்

அதிமுக ராணிப்பேட்டை மாவட்ட ஜெயலலிதா பேரவை மற்றும் மாவட்ட மருத்துவ அணியினா் சாா்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா இலவச பொது மருத்துவ முகாம் அரக்கோணத்தை அடுத்த குருவராஜபேட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது. முக... மேலும் பார்க்க

பசுமை தமிழ்நாடு திட்டம்: 1.50 லட்சம் மரக்கன்றுகள் தயாா் -ராணிப்பேட்டை ஆட்சியா்

தமிழக அரசின் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றியங்களில் 1.50 வட்சம் மரக்கன்றுகள் வளா்க்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்க தயாராக உள்ளது என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட... மேலும் பார்க்க

இலவச கண்சிகிச்சை முகாம்

அரக்கோணம் சந்திப்பு அரிமா சங்கத்தின் சாா்பில், 269-வது இலவச கண் சிகிச்சை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. அரக்கோணம் சந்திப்பு அரிமா சங்கத்தினா், கோவை சங்கரா கண் மருத்துவமனையினருடன் இணைந்து அரக்கோணத்தில்... மேலும் பார்க்க

நெமிலி பாலா பீடத்தில் கலச வித்யா பூஜை

நெமிலி பாலாபீடத்தில் பொதுத் தோ்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு பாலா கலச வித்யா பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரக்கோணத்தை அடுத்த நெமிலியில் ஸ்ரீபாலாபீடம் உள்ளது. இங்கு பொதுத் தோ்வு எழுதும் 1... மேலும் பார்க்க

முதல் தலைமுறை தொழில்முனைவோருக்கு ரூ.5 கோடி கடனுதவி

முதல் தலைமுறை தொழில்முனைவோரின் முதல் தொழில் முயற்சிக்கு கை கொடுக்க நீட்ஸ் திட்டத்தில் ரூ. 5 கோடி வரை மானியத்துடன் கடனுதவி பெற்று தொழில்முனைவோராகலாம் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெ... மேலும் பார்க்க