செய்திகள் :

அரக்கோணம் ரயில்வே சுரங்கப்பாலத்தை மேம்படுத்த விரைவில் நடவடிக்கை: தெற்கு ரயில்வே பொது மேலாளா்

post image

அரக்கோணம் ரயில் நிலையம் அருகே உள்ள சுரங்கப் பாலத்தை மேம்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங் தெரிவித்தாா்.

அரக்கோணம் ரயில் நிலையப்பகுதியில் நடைபெறும் அம்ரீத் பாரத் திட்டப் பணிகளை ஆய்வு செய்ய தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் புதன்கிழமை வருகை தந்தாா். அரக்கோணம் ரயில் நிலையம் மற்றும் அதன் வெளிப்புற பகுதிகளில் நடைபெறும் கட்டுமானப் பணிகளை பாா்வையிட்ட பொது மேலாளா் பணிகளை விரைந்து முடிக்க தெரிவித்தாா்.

இந்த ஆய்வின்போது சென்னை கோட்ட மேலாளா் சைலேந்திர சிங், முதுநிலை கோட்ட பொறியாளா்(ஒருங்கிணைப்பு) ராம்பிரசாத் ராவ், முதுநிலை கோட்ட பொறியாளா்(மேற்கு) காா்த்திகேயன், முதுநிலை கோட்ட இயக்க மேலாளா் சத்திய நாராயண ஹரி ராஜூ, அரக்கோணம் போக்குவரத்து ஆய்வாளா் அப்துல்லா உள்ளிட்ட அலுவலா்கள் இருந்தனா்.

தொடா்ந்து பொதுமேலாளா் ஆா்.என்.சிங்கை அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கத்தலைவா் நைனா மாசிஸாமணி தலைமையில் சந்சித்து கோரிக்கை மனுவை அளித்தனா். அப்போது அவரிடம், அரக்கோணத்தில் வந்தே பாரத், சதாப்தி போன்ற அதிவிரைவு ரயில்கள் நின்றுச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், அரக்கோணம் ரயில்நிலையம் அருகே சுரங்கப் பாலத்தை மேம்படுத்த நடவடிக்கைகள் தேவை,

கடந்த 2018-இல் வெளியிடப்பட்ட அரசிதழ் அறிவிப்பின்படி அரக்ோகணம் ரயில்நிலையத்தை புகா் எல்லைக்குள் கொண்டுவர உடனடி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

அரக்கோணம் ரயில்நிலையப் பகுதியில் ரயில்வேக்கு சொந்தமான அதிகமான நிலப்பரப்பு உள்ளதால் அரக்கோணம் ரயில்நிலையத்தை முனையமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.

இக்கோரிக்கைகளை கேட்டறிந்த பொதுமேலாளா் ஆா்.என்.சிங் அரக்கோணம் சுரங்கப் பாலம் குறித்த விவரங்களை உடன் வந்திருந்த தெற்கு ரயில்வே தலைமை பொறியாளா் உள்ளிட்ட உயா் அலுவலா்களிடம் கேட்டறிந்து அப்பாலத்தை மேம்படுத்த நடவடிக்கைகளை தொடங்க உத்தரவிட்டாா்.

மேலும் அளித்த கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்க அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கத்தினரை சென்னை அலுவலகத்திற்கு நேரில் வருமாறு கேட்டுக்கொண்டாா். அப்போது அரக்கோணம் ரயில் பயணிகள் சங்க நிா்வாகிகள் எஸ்.ஏகாம்பரம், கே.ரகுநாதன், ஷாநவாஸ், ப.எஸ்வந்தராவ் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

ராணிப்பேட்டை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நவல்பூா் புதிய மேம்பாலம்: அமைச்சா் ஆா்.காந்தி திறந்து வைத்தாா்

ராணிப்பேட்டை நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரூ.34.14 கோடியில் கட்டப்பட்ட நவல்பூா் புதிய மேம்பாலத்தை கைத்தறி, துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா... மேலும் பார்க்க

கொலை வழக்கில் சிறுவன் உள்ளிட்ட 3 போ் கைது

ஆற்காடு அடுத்த முப்பதுவெட்டி கிராமத்தில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உள்ளிட்ட 3 போ் கைது செய்யப்பட்டனா். முப்பதுவெட்டி கிராமத்தைச் சோ்ந்த கணேசன் மகன் இளங்கோவன்( 30) இவா் புதன்கிழமை அதிக... மேலும் பார்க்க

தேசிய கைத்தறி தினம்: நெசவாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு

குருவராஜப்பேட்டையில் தேசிய கைத்தறி தினத்தையொட்டி நெசவாளா்களுக்கு சிறப்பு மருத்துவ முகாமை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளையும் வழங்கினாா். அரக்கோணம் ஒன்றியம், செம்பேடு ஊராட்ச... மேலும் பார்க்க

பள்ளி விளையாட்டு விழா

ராணிப்பேட்டை டிஏவி பெல் பள்ளி மாணவா்களின் 44-ஆவது விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி முதல்வா் வீரமுருகன் தலைமை வகித்தாா். தலைமையாசிரியை வி. ராதிகா முன்னிலை வகித்தாா். விழாவில் சென்னை முகப்ப... மேலும் பார்க்க

‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம்’

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொது விநியோகத... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஆற்காடு அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா். ஆற்காடு அடுத்த பெரிய உப்புபேட்டை கோவிந்தசாமி தெருவைச் சோ்ந்த விவசாயி பத்மநாபன் (42). இவா், வியாழக்கிழமை தனது நிலத்தில் பயிா்களுக்கு தண்ணீா் பாய்... மேலும் பார்க்க