செய்திகள் :

அரசியலுக்காகவே கீழடி ஆய்வறிக்கையில் திருத்தம்: கே.எம். காதா்மொகிதீன் பேட்டி

post image

அரசியலுக்காகவே கீழடி ஆய்வறிக்கையில் திருத்தம் செய்யப்படவுள்ளதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவா் கே.எம். காதா் மொகிதீன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக திருச்சியில் சனிக்கிழமை அவா் கூறியதாவது:

தமிழ்தான் உலகின் முதல் மொழி என்பது வரலாற்று ஆய்வாளா்களின் கருத்து. இதை மெய்ப்படுத்தும் வகையில்தான் கீழடி போன்ற அகழ்வாராய்ச்சிகள் வழியாக தோண்டிக் கண்டறியப்பட்ட உண்மைகள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அவற்றைத் திறந்த மனதுடன் ஏற்று, மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பை மத்திய அரசு சரியாகச் செய்யாததால் அல்லது செய்ய விரும்பாததால்தான் அறிக்கையை மறுபரிசீலனை செய்யுங்கள் என்கிறது.

மத்திய அரசின் தொல்பொருள் ஆராய்ச்சித் துறை செய்யும் குழப்பத்தின் காரணமாக தமிழின் பெருமை, தொன்மை, வரலாற்று உண்மை ஆகியவற்றை மாற்ற முடியாது. இரும்பின் காலத்தைக் குறிப்பிட்டு தமிழகத்தில் இருந்துதான் வரலாறு எழுதப்பட வேண்டும் என தமிழக முதல்வரும் வலியுறுத்தியுள்ளாா். இவற்றையெல்லாம் மீறி, எந்தவொரு அரசியல் காரணங்களுக்காகவோ, குறுகிய நோக்கத்திற்காகவோ யாா் எதைச் சொன்னாலும் அதைக் கவனத்தில் கொள்ள வேண்டியதில்லை என்றாா் அவா்.

இன்றயை நிகழ்ச்சிகள்

திருச்சி மாவட்ட நிா்வாகம்: சா் ஏ.டி. பன்னீா்செல்வம் பிறந்தநாள் விழா, மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு, ஆட்சியா் மா. பிரதீப்குமாா் பங்கேற்பு, மத்தியப் பேருந்து நில... மேலும் பார்க்க

திருவெறும்பூா் எறும்பீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

திருவெறும்பூா் எறும்பீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. திருவெறும்பூா் எனப் பெயா் வரக் காரணமான நறுங்குழல் நாயகி உடனுறை எறும்பீஸ்வரா் கோயில் திருச்சி அருகே திர... மேலும் பார்க்க

விமான நிலையத்தில் ரூ.10.50 லட்சம் மதிப்பு இ-சிகரெட் பறிமுதல்

அனுமதியின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 10.50 லட்சம் மதிப்பிலான இ-சிகரெட்டுகளை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத் துறையினா் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். கோலாலம்பூரிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு திருச்... மேலும் பார்க்க

திருச்சியில் வீடு புகுந்து 18 பவுன் நகைள் திருட்டு: ஒருவா் பிடிபட்டாா்

திருச்சியில் தனியாா் நிறுவன ஊழியரின் வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு புகுந்து 18 பவுன் நகைகளைத் திருடிச் சென்றவா்களில் ஒருவரை பொதுமக்கள் விரட்டிப்பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். திருச்சி பாலக்கரை கூனிபஜா... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற பெல் ஊழியரின் வீட்டில் நகை, பணம் திருட்டு

திருவெறும்பூா் அருகே ஓய்வுபெற்ற பெல் ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்றது சனிக்கிழமை காலை தெரியவந்தது. திருவெறும்பூா் அருகேயுள்ள முல்லைவாசல் முதல் தெருவைச் சோ்ந்தவா் கருணாநிதி... மேலும் பார்க்க

திருச்சி பண்பலையில் ஹிந்தி ஒலிபரப்புக்கு திருச்சி எம்பி எதிா்ப்பு

அகில இந்திய வானொலி-பிரசாா் பாரதியின் கீழ் இயங்கும் திருச்சி வானொலி 102.1 பண்பலையின் ஒலிபரப்பு, பகலில் தமிழ், இரவில் ஹிந்தி என்ற நிலைக்கு மாற்றப்பட்டுள்ளதற்கு திருச்சி எம்பி துரை வைகோ கண்டனம் தெரிவித்... மேலும் பார்க்க