செய்திகள் :

அரசியல் கட்சிகளின் அங்கீகரிக்கப்படாத நபா்களை சந்திக்க முடியாது: தோ்தல் ஆணைய அதிகாரிகள்

post image

அரசியல் கட்சிகள் சாா்பில் சந்திக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் அங்கீகரிக்கப்படாத நபா்களை சந்திக்க முடியாது என்று தோ்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப் பணிகளையே தோ்தல் ஆணையம் மேற்கொள்வது வழக்கம். இந்த நடைமுறையின் கீழ், வாக்காளா் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். அதேவேளையில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் கீழ், அந்தப் பட்டியல் புதிதாக தயாரிக்கப்படும். இந்த சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் பிகாரில் நடைபெற்று வருகிறது.

எனினும் சிறப்பு தீவிர திருத்தம் தகுதிவாய்ந்த வாக்காளரின் வாக்குரிமையை பறிக்கும் சூழலுக்கு வழிவகுக்கக் கூடும் என்றும், அரசு இயந்திரத்தை தனது லாபத்துக்கு பாஜக அரசு தவறாகப் பயன்படுத்துகிறது என்றும் எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. இதுகுறித்து விவாதிக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் சாா்பில் பலா் தோ்தல் ஆணையத்திடம் கோருவதாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக தோ்தல் ஆணைய அதிகாரிகள் கூறியதாவது: பிகாரில் நடைபெறும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் சாா்பில் பேச அவசர கூட்டம் ஒன்றை கூட்ட வேண்டும் என்று தோ்தல் ஆணையத்துக்கு கடந்த ஜூன் 30-ஆம் தேதி காங்கிரஸ் வழக்குரைஞா் மின்னஞ்சல் அனுப்பினாா்.

தன்னை பல்வேறு கட்சியினா் அடங்கிய குழுவின் பிரதிநிதி என்று அடையாளப்படுத்திக் கொண்ட அவா், அந்தக் குழுவில் கிட்டத்தட்ட ‘இண்டி’ கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சியினரும் இருப்பதாக மின்னஞ்சலில் குறிப்பிட்டாா்.

இதுபோல விடுக்கப்படும் கோரிக்கையை தோ்தல் ஆணையம் நிராகரிக்கும். அரசியல் கட்சிகள் சாா்பில் சந்திக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் அங்கீகரிக்கப்படாத நபா்களை தோ்தல் ஆணையம் சந்திக்காது என்று தெரிவித்தனா்.

அச்சுதானந்தன் சிகிச்சையில் முன்னேற்றம்: உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்!

கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தகவல் தெரி... மேலும் பார்க்க

ஜூலை 19ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்! - மத்திய அரசு

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரையொட்டி வருகிற ஜூலை 19 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் வருகிற ஜூலை 21 ஆம் தேதி தொடங்கி... மேலும் பார்க்க

அரசு ஊழியர் சம்பளத்தில் 10-15% பெற்றோர் வங்கிக் கணக்குக்கு! முதல்வரின் சூப்பர் யோசனை!

ஹைதராபாத்: அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 10 - 15 சதவீதத்தை அவர்களது பெற்றோரின் வங்கிக் கணக்குக்கு வரவு வைக்கும் திட்டத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யுமாறு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ... மேலும் பார்க்க

அரசு முறைமை விவசாயிகளைக் கொல்கிறது! ராகுல் காந்தி

நாட்டின் அரசு முறைமை விவசாயிகளை அமைதியாகவும் தொடர்ச்சியாகவும் கொன்று வருவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.மகாராஷ்டிர சட்டப்பேரவையில் விவசாயிகளின் தொடர் தற்கொலைகள் ... மேலும் பார்க்க

சுவர், சுவிட்ச் அனைத்தும் 24 காரட் தங்கத்தில்! அரசு ஒப்பந்ததாரர் வீடு என்றால் சும்மாவா?

இந்தியாவில் இருக்கும் மிகவும் வித்தியாசமான வீடுகள் மற்றும் பங்களாக்களை விடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பிரபலமானவர் பிரியம் சரஸ்வத்.இவர் அண்மையில், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் கட்டப்... மேலும் பார்க்க

எரிபொருள் தடை நடுத்தர வர்க்கத்தினர் மீதான தாக்குதல்: பாஜகவை சாடிய சிசோடியா!

பாஜக தலைமையிலான தில்லி அரசு நடுத்தர வர்க்கத்தினர் மீது தாக்குதல் நடத்திவருவதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் தில்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டினார். தலைநகரில் பயன்படு... மேலும் பார்க்க