செய்திகள் :

அரசு முறைமை விவசாயிகளைக் கொல்கிறது! ராகுல் காந்தி

post image

நாட்டின் அரசு முறைமை விவசாயிகளை அமைதியாகவும் தொடர்ச்சியாகவும் கொன்று வருவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் விவசாயிகளின் தொடர் தற்கொலைகள் குறித்து காங்கிரஸ் எழுப்பிய கேள்விக்கு மாநில அரசு அளித்த பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தாண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான மூன்று மாதங்களில் மட்டும் 767 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ’தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ வெளியிட்ட செய்தியைப் பகிர்ந்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை விமர்சித்துள்ளார்.

ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“கற்பனை செய்து பாருங்கள், கடந்த 3 மாதங்களில் மட்டும் மகாராஷ்டிர மாநிலத்தில் 767 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இது வெறும் புள்ளிவிவரம் அல்ல, 767 குடும்பங்களின் மீள முடியாத துயரம். ஆனால், அரசு அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டுள்ளது.

விவசாயிகள் ஒவ்வொரு நாளும் கடனில் மூழ்கி வருகின்றனர். விதைகள், உரங்கள், டீசல் என அனைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், குறைந்தபட்ச ஆதார விலை மட்டும் இல்லை.

கடன் தள்ளுபடி கோரும் போதெல்லாம் நிராகரிக்கப்படுகிறது. ஆனால், கோடீஸ்வரர்களின் கடன்களை எளிமையாக மோடி அரசாங்கள் தள்ளுபடி செய்கிறது. இன்றைய செய்தியில்கூட அனில் அம்பானி ரூ. 48,000 கோடி மோசடி செய்ததாக எஸ்பிஐ அறிவித்துள்ளது.

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவேன் என்று மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால், பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த அரசு முறையை (System) விவசாயிகளை அமைதியாகவும் தொடர்ச்சியாகவும் கொன்று வருகிறது. ஆனால், மோடி தனக்கான விளம்பரப் பணியில் பிஸியாக இருக்கிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leader of the Opposition in the Lok Sabha, Rahul Gandhi, has accused the country's system of silently killing farmers.

இதையும் படிக்க : டெலிவரி ஏஜெண்ட் போல நுழைந்து பாலியல் வன்கொடுமை! செல்ஃபி எடுத்து மிரட்டல்!

மகாராஷ்டிரம்: கரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி! புதிய பாதிப்புகள் உறுதி!

மகாராஷ்டிரத்தில் கரோனாவுக்கு ஒருவர் பலியாகியுள்ள நிலையில், புதியதாக 14 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா பாதிப்புகள் அவ்வப்போது அதிகரித்து வந்த சூ... மேலும் பார்க்க

பான் கார்டு விண்ணப்பிக்கவும் ஆதார் அவசியம்! மத்திய அரசு அறிவிப்பு!

பான் கார்டு விண்ணப்பிக்க வேண்டுமென்றால், ஆதார் எண்ணும் அவசியம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுநாள்வரையில், பான் கார்டு விண்ணப்பிக்க பிறப்பு அல்லது அடையாளச் சான்று மட்டுமே போதுமானதாக இருந்து வந்த... மேலும் பார்க்க

இனி, மும்பையின் உயரமான கட்டடமாக முகேஷ் அம்பானியின் ஆன்டிலியா இருக்காதா?

இந்திய தொழிலதிபர்களில் முன்னணியில் இருக்கும் முகேஷ் அம்பானி - நீதா அம்பானியின் ஆன்டிலியா வீடுதான், இன்று வரை மும்பையின் மிக உயரமான கட்டடம் என்ற பெருமையைக் கொண்டிருந்தது. மேலும் பார்க்க

கேரளத்துக்கு விடைகொடுத்த பிரிட்டன் போர் விமானம்! பாகுபலி விமானம் மூலம் தூக்கிச் செல்லப்பட்டது

பிரிட்டனின் எஃப்35 போா் விமானம் திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்தில் கடந்த மாதம் அவசரமாக தரையிறங்கிய நிலையில், சி-17 குளோப்மாஸ்டர் போக்குவரத்து விமானம் மூலம், அதனைத் தூக்கிச் செல்லும் பணி தொடங்கிய... மேலும் பார்க்க

பாகேஷ்வர் கோயிலின் மேற்கூரை இடிந்து விழுந்தது: ஒருவர் பலி, 4 பேர் காயம்!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பாகேஷ்வர் கோயில் வளாகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். நான்கு பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் இன்று காலை 7.30 மணியள... மேலும் பார்க்க

மெட்டாவில் ரூ.853 கோடி சம்பளத்தில் இந்தியருக்கு வேலை!

ஐஐடி கான்பூரில் பட்டம் பெற்ற இந்தியர் திரபித் பன்சாலுக்கு மெட்டா நிறுவனத்தில் ரூ.850 கோடி சம்பளத்துடன் வேலை கிடைக்கப் பெற்றுள்ளது.மெட்டா நிறுவனத்தின் செய்யறிவுப் பிரிவில் பணிபுரிய இந்திய வம்சாவளியான த... மேலும் பார்க்க