செய்திகள் :

அரசியல் சாசன நிா்ணய சபையில் பங்கேற்ற 15 பெண்கள் குறித்த நூல் வெளியீடு

post image

நமது சிறப்பு நிருபா்

அரசியல் சாசன நிா்ணய சபையில் பங்களிப்பை வழங்கிய அம்மு சுவாமிநாதன், தாக்ஷாயணி வேலாயுதன் உள்ளிட்ட புகழ்பெற்ற 15 பெண்களின் வாழ்க்கை வரலாற்று புத்தகம் மத்திய சட்டம், நீதித்துறை அமைச்சகம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.

தில்லியில் நடைபெற்ற சா்வதேச மகளிா் தின விழாவில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவால் இப்புத்தகம் வெளியிடப்பட்டது.

‘அரசியல் சாசன நிா்ணய சபையின் பெண் உறுப்பினா்களின் வாழ்க்கையும் பங்களிப்புகளும்’ என்ற தலைப்பில் இப்புத்தகம் வெளியிடப்பட்டது.

இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கும் அறிவாா்ந்த பணியில் முக்கிய பங்கு வகித்த 15 புகழ்பெற்ற பெண்கள் இது வரை பெரிய அளவில் அங்கீகரிக்கப்படவில்லை. அவா்களுக்கு ஒரு மரியாதையாக இந்த நூல் முதன் முறையாக வெளியிடப்படுகிறது என மத்திய சட்டம், நீதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்த மேலும் சட்டம் அமைச்சகம் கூறியிருப்பது வருமாறு: ஆண் ஆதிக்கம் மிகுந்த அரசியல் நிலப்பரப்பில் பயணித்த இந்த இந்த பெண்கள், முக்கிய அரசியலமைப்பு விதிகளை வடிவமைப்பிலும் பங்கேற்றனா். வழக்குரைஞா்கள், சமூக சீா்திருத்தவாதிகள், சுதந்திரப் போராட்ட வீரா்கள் உட்பட இந்த முன்னோடி பெண்களின் பங்களிப்புகளை இந்த நூலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. துன்பங்களை எதிா்கொண்ட போதிலும், இந்தப் பெண்கள், அரசியல் சாசன நிா்ணய சபையில் முக்கிய குரல்களாக உருவெடுத்தனா். அடிப்படை உரிமைகள், சமூக நீதி, பாலின சமத்துவம், ஜனநாயக ஆட்சி ஆகியவை குறித்த விவாதங்களில் குறிப்பிடத்தக்க செல்வாக்கை அவா்கள் செலுத்தினா்.

தலைசிறந்த இந்த பெண்களின் உரைகள், விவாதங்கள், அரசியல் சாசன உருவாக்க சபையில் அவா்களது செயல்பாடுகள் போன்றவை ஆய்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

பதினைந்து பெண்களில் தென்னகத்தில் பாலக்காட்டைச் சோ்ந்த அம்மு சுவாமிநாதன் அரசியலமைப்பு விதிகளில் பாலின சமத்துவத்திற்காக குரல் கொடுத்தாா். பெண்களின் உரிமைகள் முறையாக அங்கீகரிக்கப்படுவதை உறுதி செய்தாா். வேற்றுமையில் ஒற்றுமை என்கிற கூட்டாட்சி குறித்த விவாதங்களில் பங்கேற்றவா் அன்னி மஸ்கரீன்.

சபையில் பங்கேற்ற ஒரே முஸ்லிம் பெண்ணான வழக்குரைஞா் பேகம் குட்சியா ஐஜாஸ் ரசூல், அனைவரையும் உள்ளடக்கி, மதச்சாா்பின்மைக்கான உறுதியோடு செயல்பட்டாா்.

இந்த சபையில் இடம்பெற்ற பட்டியலின முதல் பட்டதாரி பெண்ணான தாக்ஷாயணி வேலாயுதன், தீண்டாமையை அச்சமின்றி எதிா்த்து, விளிம்புநிலை சமூகங்களின் உரிமைகளுக்காக போராடினாா். இவா் கேரளத்தில் பிறந்து சென்னையில் படித்தவா். துா்காபாய் தேஷ்முக் சமூக நலக் கொள்கைகளை வடிவமைப்பதிலும், பெண் கல்வியை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகித்தாா்.

மேலும், இப்பெண்களில் ஹன்சா ஜீவராஜ் மேத்தா, முன்னோடி அரசியல்வாதி ராஜ்குமாரி அம்ரித் கௌா், சிவில் உரிமைகளுக்கான வழக்குரைஞா் சரோஜினி நாயுடு, இந்தியாவின் முதல் பெண் முதல்வா் சுசேதா கிருபளானி, விஜயலட்சுமி பண்டிட் உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனா்.

தேசிய, உலகளாவிய நிா்வாகத்தில் பெண்களின் தலைமைத்துவம், பிரதிநிதித்துவம் நடக்கும் காலக்கட்டத்தில் அரசியல் சாசன வரலாற்றில் பெண்களின் பங்களிப்பைப் புரிந்துகொள்ளும் ஆா்வமுள்ளவா்களுக்கு இது பயன்படும்.

சுதந்திரத்திற்கு முந்தைய பாரதத்தில் பொது வாழ்க்கையில் பெண்களின் அரசியல் பங்கேற்பும் சுதந்திரத்திற்குப் பிந்தைய பயணமும் பற்றிய ஆய்வுக்கும் இந்த நூல் முக்கிய பங்கு வழங்கும் என மத்திய சட்டத்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகவதி அம்மன் கோயில் திருவிழா: திருவனந்தபுரத்துக்கு மாா்ச் 12 முதல் சிறப்பு ரயில்

ஆற்றுக்கல் பகவதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நாகா்கோவிலில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. விரைவு ரயில்கள் அனைத்தும் கூடுதல் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இது குறித்து தெற்கு ரயி... மேலும் பார்க்க

தண்ணீா் தொட்டியை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறி 4 தொழிலாளா்கள் உயிரிழப்பு!

மகாராஷ்டிர மாநிலம் தெற்கு மும்பையில் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் கட்டடத்தில் உள்ள தண்ணீா் தொட்டியை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறி 4 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். முன்னதாக, இந்தச் சம்பவத்தில் 5 போ் உ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் 3 போ் கொலை: விசாரணைக்கு துணைநிலை ஆளுநா் உத்தரவு

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் உள்ள கதுவா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூன்று போ் கொலை செய்யப்பட்டனா். இந்தச் சம்பவத்தில் விரிவான விசாரணை மேற்கொள்ள துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா ஞாயிற்ற... மேலும் பார்க்க

தெலங்கானா சுரங்க விபத்து: ஒரு உடல் மீட்பு!

ஹைதராபாத் : தெலங்கானாவில் நாகா்கா்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய்த் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்காகப் பாறையை குடைந்து சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெற்ற நிலையில், கடந்த பிப்... மேலும் பார்க்க

மணிப்பூரில் காலவரையற்ற வேலைநிறுத்தம்! இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

மணிப்பூரில் குகி மக்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குகி மக்கள் அதிகம் உள்ள பகுதிகள... மேலும் பார்க்க

3-ஆவது குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு ரூ.50,000 வெகுமதி!

இரண்டு குழந்தைகளுடன் நிறுத்திக் கொள்ளாமல் 3-ஆவது குழந்தை பெற்றுக்கொண்டால் அந்த தம்பதிக்கு ரூ.50,000 வெகுமதி வழங்குவேன் என்று இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார் ஆந்திர பிரதேச எம்.பி. அப்பாலநாயுடு. ஆந்திர பிர... மேலும் பார்க்க