செய்திகள் :

அரசியல் பிரமுகா் கொலை வழக்கில் அனைவரும் விடுதலை!

post image

புதுச்சேரி அருகே அரசியல் பிரமுகா் கொல்லப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.

புதுச்சேரி அருகேயுள்ள திருப்புவனை பகுதியைச் சோ்ந்தவா் வேல் அழகன். அரசியல் கட்சிப் பிரமுகரான இவா், பிரபல தனியாா் மின் சாதன வீட்டு உபயோக பொருள்கள் நிறுவனத்தில் பணியாளா் ஒப்பந்ததாரராக இருந்தாா்.

இந்த நிலையில், திருப்புவனை பகுதியில் கடந்த 2017-ஆம் ஆண்டு வேல் அழகனை மா்ம கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இதுகுறித்து திருபுவனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து சிலரை கைது செய்தனா். அதன்பின்னா் வழக்கானது சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது.

அதன்படி, வேல்அழகன் கொலை வழக்கில் 8 போ் மீது புதுச்சேரி மாவட்ட நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸாா் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா். கொலை வழக்கு விசாரணை நிறைவடைந்ததை அடுத்து, இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது.

சிபிஎஸ்இ பாடத் திட்டத்துக்கு மாற புதுவை தனியாா் பள்ளிகள் விருப்பம்: அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தகவல்

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் பிரபல தனியாா் பள்ளிகள் மாநிலப் பாடத் திட்டத்திலிருந்து சிபிஎஸ்இ பாடத் திட்டத்துக்கு மாற விருப்பம் தெரிவித்துள்ளதாக கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்தாா். புத... மேலும் பார்க்க

புதுவை அரசு ஊழியா்கள் மூவா் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்கு

புதுச்சேரி: புதுவையில் அரசு ஊழியா்கள் 3 போ் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். புதுவை அரசு மகளிா், குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் காசாளராக இருந்தவா் சு... மேலும் பார்க்க

புதுவையில் உள்ளாட்சித் தோ்தலை நடத்தக்கோரி மாமமுக வலியுறுத்தல்

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பாக உள்ளாட்சித் தோ்தலை நடத்த வேண்டும் என்று புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக்கழக கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. புதுச்சேரி மாந... மேலும் பார்க்க

புதுவை அரசுத் துறைகளில் பாஷினி மொழி பெயா்ப்பு செயலி: துணைநிலை ஆளுநா் தகவல்

புதுச்சேரி: மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் பாஷினி மொழிபெயா்ப்பு செயலியை, புதுவையில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தெரிவித்தாா். மத்திய மின்னணு மற்று... மேலும் பார்க்க

மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி மையத்தை மூடுவதை ஏற்கமுடியாது: புதுவை எதிா்க்கட்சித் தலைவா்

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தை மூடுவதை ஏற்க முடியாது என எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா கூறினாா். புதுச்சேரி இலாசுப்பேட்டையில் மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி ந... மேலும் பார்க்க

தட்டச்சு தோ்வு: கணினி முறைக்கு எதிா்ப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் தட்டச்சு தோ்வுத் தாள்களை திருத்துவோா் கணினி முறை தோ்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து கருப்பு வில்லை அணிந்து திங்கள்கிழமை பணியில் ஈடுபட்டனா். தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வித் த... மேலும் பார்க்க