செய்திகள் :

‘நீங்களே ஆசிரியராகப் பணியாற்றியவர்தான்’: குடியரசுத் தலைவருக்கு ராகுல் காந்தி கடிதம்!

post image

ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் தீர்வுக் காண குடியரசுத் தலைவருக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினால் மேற்கு வங்கத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் முறையான தீர்வுக் காண வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் அனைவருக்கும் கல்வி திட்டத்தில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டதில் முறைக்கேடு இருப்பதாகக் கூறி கொல்கத்தா உயர் நீதிமன்றம் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் கல்விப் பணியாளர்களை பணிநீக்கம் செய்து தீர்ப்பளித்தது.

இந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்ட நிலையில் கடந்த ஏப்.3 அன்று கொல்கத்தா நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதனால், அம்மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் வேலை பறிபோகும் அபாயமுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தை குடியரசுத் தலைவரின் பார்வைக்கு கொண்டு செல்லுமாறு ஷிக்‌ஷாக் ஷிக்‌ஷா அதிகார் மன்சாவின் பிரதிநிதி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் முறையிட்டதாக குறிப்பிட்டு இந்தக் கடிதத்தை அவர் எழுதியுள்ளார்.

குடியரசுத் தலைவருக்கு ராகுல் காந்தி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி கொல்கத்தா நீதிமன்றம் அந்த தேர்வாணையை முழுவதுமாக ரத்து செய்தது. மேலும், இந்தத் தீர்ப்பை கடந்த ஏப்.3 அன்று உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. இதனால், தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் கல்விப் பணியாளர்கள் அனைவரும் நம்பிக்கை இழந்து வருகின்றனர்.

இந்த இரண்டு தீர்ப்புகளும் சில ஆசிரியர்கள் முறைகேடு செய்தும் சில ஆசிரியர்கள் முறைகேடு செய்யாமலும் பணியில் சேர்ந்துள்ளதை உறுதிச் செய்திருந்தாலும் இருதரப்பினரும் தங்களது வேலையைத் தற்போது இழந்துள்ளனர். ஆசிரியர்கள் தேர்வுப் பணியில் நடைபெற்ற குற்றம் கண்டிக்கப்பட்டு அதில் ஈடுபட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். ஆனால், முறைகேடுகளில் ஈடுபடாத ஆசிரியர்களும் தண்டனை அனுபவிப்பது நியாமன்று.

மேலும், முறையாகத் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களில் பெரும்பாலானோர் சுமார் 10 ஆண்டுகளாக பணியாற்றி வரும் நிலையில் அவர்கள் அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட்டால் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு போதுமான ஆசிரியர்கள் இல்லாத சூழல் உருவாகக் கூடும். அந்த ஆசிரியர்களின் மன உறுதியும் ஊக்கமும் அழிக்கப்படுவதுடன் போதிய வருமானம் இன்றி அவர்களின் குடும்பங்களும் அவதிக்குள்ளாவார்கள்.

முன்னதாக, நீங்களே ஆசிரியராகப் பணியாற்றியவர்தான்; எனவே, இந்த விவகாரத்தில் ஆசிரியர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் மாணவர்களுக்கு ஏற்படப்போகும் மிகப் பெரியளவிலான பாதிப்புகளை நீங்கள் நன்கு உணர்வீர்கள் என நான் நம்புகிறேன். எனவே, நீங்கள் இதில் தலையிட்டு முறையாகத் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் தங்களது பணியைத் தொடர அரசு அனுமதிக்க நீங்கள் வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதாக ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க:வக்ஃப் திருத்த மசோதாவுக்கு எதிரான வழக்கு ஏப். 15-ல் விசாரணை?

நேபாளத்தில் இந்தியர்கள் சென்ற விமானம் அவசரமாகத் தரையிறக்கம்!

நேபாளத்தில் 12 இந்தியர்கள் சென்ற தனியார் விமானம் அவசரமாக காத்மாண்டின் பன்னாட்டு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.நேபாளத்தில் உள்நாட்டில் பயணிக்க இயக்கப்படும் சீதா ஏர்லைன்ஸ் எனும் தனியார் நிறுவன... மேலும் பார்க்க

ஹரியாணாவில் அம்பேத்கர் சிலை உடைப்பு! 2 பேர் கைது!

ஹரியாணா மாநிலத்தில் அம்பேத்கர் சிலையை உடைத்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஹிஸார் மாவட்டத்திலுள்ள நாங்தலா கிராமத்திலுள்ள ஓரு பூங்காவில் அம்பேத்கர் சிலை ஒன்று நிறுவப்பட்டிருந்தது. இந்நிலையில், அம்பேத்... மேலும் பார்க்க

பாங்காக் சென்றதை மறைக்க கடவுச்சீட்டின் பக்கங்களைக் கிழித்த நபர் கைது!

மகாராஷ்டிரத்தின் மும்பை விமான நிலையத்தில் தனது கடவுச்சீட்டின் பக்கங்களைக் கிழித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். புணே மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் பாலேராவ் (வயது 51) என்ற நபர், கடந்த ஏப்.14 ஆம் தேதி மும்... மேலும் பார்க்க

இபிஎஸ் பெயருடன் வந்த மின்னஞ்சல் மூலம் கேரள அரசு அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கேரள மாநில பாலக்காடு மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பாலக்காடு மாவட்டத்தின் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலமாக இன்று (ஏப்.16) காலை வெடி... மேலும் பார்க்க

ஒரே நாளில் யேமனின் 50-க்கும் அதிகமான இடங்களின் மீது அமெரிக்கா தாக்குதல்!

யேமனின் ஹவுதி கிளர்ச்சிப்படையின் முக்கிய இடங்களின் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. யேமன் நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளிலுள்ள பல்வேறு மாகாணங்களில் ஹவுதி கிளர்ச்சிப்படையினரின்... மேலும் பார்க்க

ரஷியாவில் தலிபான்கள் மீதானத் தடை நீக்கம்?

ரஷியாவில் தலிபான்கள் மீதானத் தடையானது விரைவில் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டை ஆளும் தலிபான்கள் மீதானத் தடை நீக்கப்பட்டு அந்நாட்டுடனான ராஜதந்திர உறவுகளை மேம்படுத்தும் முயற... மேலும் பார்க்க