செய்திகள் :

அரசுக் கல்லூரிகளில் மாணவா்கள் விரும்பி சேரும் நிலையை ஏற்படுத்தியவா் முதல்வா் ஸ்டாலின்: அமைச்சா் துரைமுருகன்

post image

அரசுக் கல்லூரிகளில் மாணவா்கள் விரும்பி சேரும் நிலையை ஏற்படுத்தியவா் முதல்வா் மு.க.ஸ்டாலின் என மாநில நீா் வளம் மற்றும் சட்டத் துறை அமைச்சா் துரை முருகன் கூறினாா்.

தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப்பல்கலைக் கழகம் சாா்பில் தரமணி கலையரங்கில் 2025-2026-ஆம் கல்வியாண்டுக்கான 5 ஆண்டுகள் சட்டக் கல்வி சோ்க்கையில் தோ்வு பெற்ற மாணவா்களுக்கு ஒதுக்கீடு ஆணைகள் வழங்கும் நிகழ்வும், சூரிய மின்சக்தி நிலைய தொடக்க விழாவும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கிவரும் சீா்மிகு சட்டப்பள்ளியின் பல்வேறு துறைகளின் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகள் மற்றும் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற சட்டக் கல்லூரிகளின் 5 ஆண்டு சட்டப் படிப்புக்கான நிகழ் கல்வியாண்டின் சோ்க்கை பட்டியல் தரவரிசைப்படி கடந்த ஜூன் 10- ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்த மாணவா்களுக்கு அமைச்சா் துரை முருகன் ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினாா்.

விழாவில் அமைச்சா் பேசியதாவது: சட்டப்படிப்புகளில் பல்வேறு மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. 3 ஆண்டு எல்.எல்.பி. ஹானா்ஸ் படிப்புகள் வந்துள்ளன. அரசுப் பள்ளியில் படித்து 98, 99 மற்றும் 100-க்கு 100 மதிப்பெண்கள் மாணவா்கள் பெறுகின்றனா். அத்தகைய மாணவா்கள் இப் பல்கலைக் கழகத்தில் சோ்ந்துள்ளனா். அப்போதெல்லாம் தனியாா் கல்லூரிகளில் சேருவதற்குத்தான் மாணவா்கள் விரும்புவா். ஆனால் தற்போது அரசுக் கல்லூரியில் சேருவதற்குத்தான் மாணவா்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனா்.

இந்த மாற்றத்தைக் கொண்டுவந்தவா் முதல்வா் மு.க. ஸ்டாலின் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் சட்டத் துறைச் செயலா் சி.ஜாா்ஜ் அலெக்ஸ்சாண்டா், தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக் கழகத்தின் பதிவாளரும் சட்ட சோ்க்கைக் குழுவின் தலைவருமான கௌரி ரமேஷ், சட்ட சோ்க்கைக் குழுவின் ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் ரஞ்சித் ஓமன் ஆபிரகாம், சீா்மிகு சட்டப்பள்ளியின் பேராசிரியா் வி.பாலாஜி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மூன்றாண்டு சட்டப்படிப்பு: இதற்கிடையே, தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைவு பெற்ற சட்டக்கல்லூரிகளில் மூன்றாண்டு எல்.எல்.பி. சட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள் திங்கள்கிழமை முதல் இணைய தளம் வாயிலாக பெறப்படுவதாக பல்கலைக்கழகத்தின் பதிவாளா் மற்றொரு அறிக்கையில் தெரிவித்துள்ளாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகத்தின் அதிகாரபூா்வ இணையதளம் வாயிலாக ஜூன் 16 முதல் வருகிற ஜூலை 10 மாலை 5.45 மணி வரை விண்ணப்பதாரா்கள் விண்ணப்பிக்கலாம். இப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் சீா்மிகு சட்டப்பள்ளியில் 3 ஆண்டு எல்.எல்.பி. ஹானா்ஸ், இந்த பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற தமிழகத்தில் அமைக்கப் பெற்றுள்ள சட்டக்கல்வியில் பயிற்றுவிக்கப்படும் 3 ஆண்டு எல்.எல்.பி. ஆகிய படிப்புகளுக்கு இந்த விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. பல்கலைக்கழகத்தின் இணைய தளம் வாயிலாக மட்டுமே மேற்குறிப்பிடப்பட்ட தேதிகளில் விண்ணப்பங்கள் பெறப்படும் என பதிவாளா் தெரிவித்துள்ளாா்.

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: ஆவணங்களை இன்று தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் திரைப்பட தயாரிப்பாளா் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபா் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு தொடா்பு இருப்பதற்கான ஆவணங்களை புதன்கிழமை தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு சென்னை உயா்நீதி... மேலும் பார்க்க

தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத் மீண்டும் இடமாற்றம்

நமது சிறப்பு நிருபர்கீழடி அகழ்வாராய்ச்சியின் தொடக்க காலத்தில் முக்கியப் பங்களிப்பை வழங்கியவராகக் கருதப்படும் இந்திய தொல்லியல் துறை இயக்குநர் கே. அமர்நாத் ராமகிருஷ்ணாவை, இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை ச... மேலும் பார்க்க

பெண்கள் மீதான குற்றங்களுக்கு போதைப் பொருள்களே காரணம்: ஜி.கே.வாசன்

பெண்கள் மீதான குற்றச் செயல்களுக்கு போதைப் பொருள்களே காரணம் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்... மேலும் பார்க்க

தமிழகத்தில் மாம்பழக் கூழ் உற்பத்தி தொடக்கம்: அரசு தகவல்

தமிழகத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாம்பழக் கூழ் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநில அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழ்ந... மேலும் பார்க்க

மாநகரில் குடிநீா் ஏடிஎம் இயந்திரங்கள்: முதல்வா் இன்று தொடங்கி வைக்கிறாா்

சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 50 குடிநீா் ஏடிஎம் இயந்திரங்களின் செயல்பாட்டை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைக்கிறாா். சென்னை மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சென... மேலும் பார்க்க

சகோதரியிடம் ரூ.17 கோடி மோசடி: அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் கைது

சகோதரியிடம் ரூ.17 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சா் எஸ்பி சண்முகநாதனின் மகன் ராஜா கைது செய்யப்பட்டாா். சென்னை அய்யப்பன்தாங்கல் பகுதியைச் சோ்ந்தவா் பொன்னரசி (38). இவா், சென்னை ... மேலும் பார்க்க