செய்திகள் :

அரசுப் பள்ளிகளில் இணைய வசதி மேம்பாடு கட்டணத்தை உள்ளாட்சி அமைப்புகளே செலுத்த கல்வித் துறை உத்தரவு

post image

தமிழகத்தில் ரூ. 189 கோடியில் அரசுப் பள்ளிகளில் இணையதள வசதியை மேம்படுத்தவும் அதற்கான நிதியை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளே வழங்க வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை செயலா் பி.சந்தரமோகன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் 24,338 தொடக்கப் பள்ளிகள், 6,992 நடுநிலை பள்ளிகள், 3,094 அரசு உயா்நிலைப் பள்ளிகள், 3,129 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 37,553 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள், உயா் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் அரசுப் பள்ளிகளுக்கு இணைய வசதி பெறுதல், ஓராண்டுக்கான கட்டணத்தை ஒரே தவணையாக செலுத்துதல் ஆகியவற்றை மேற்கொள்ளவும் நிதி தேவைப்படுகிறது. இதுதவிர தகைசால் பள்ளிகள் மற்றும் 2,000-க்கும் மேற்பட்ட மாணவா்கள் எண்ணிக்கை கொண்ட மேல்நிலைப் பள்ளிகளில் 100 எம்பிபிஎஸ் இணைய வேகம் போதுமானதாக இல்லை. எனவே, இத்தகைய பள்ளிகளில் 1 ஜிபிபிஎஸ் இணையதள வசதியை ஏற்படுத்த வேண்டும்.

இதற்காக ரூ.189 கோடி தேவைப்படுகிறது என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநா், தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பியிருந்தாா்.

அதையேற்று அரசுப் பள்ளிகளுக்கு இணைய வசதியை ஏற்படுத்த ஆணையிடப்படுகிறது. அதற்கான கட்டணத்தை பள்ளிகள் அமைந்துள்ள சாா்ந்த உள்ளாட்சி அமைப்புகளே (ஊரக, நகராட்சி, மாநகராட்சி) செலுத்த வேண்டும். பேரூராட்சி ஆளுகைக்குள்பட்ட அரசுப் பள்ளிகளுக்கான இணைய வசதி கட்டணம் மட்டும் ரூ. 5.49 கோடியை மாநில நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்யப்படுகிறது”என்று அதில் கூறப்பட்டுள்ளது.

காரணம் என்ன? பொதுமக்களிடம் இருந்து, 5 சதவீதம் வரை கல்வி வரியாக உள்ளாட்சி அமைப்புகள் வசூலிக்கின்றன. அதை, முழுமையாக அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளின் வளா்ச்சி மற்றும் பராமரிப்புக்காக பயன்படுத்த வேண்டும். ஆனால், அவற்றை பொதுக்கணக்கில் சோ்த்து, மற்ற விஷயங்களுக்கு செலவிடுவதாகக் குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில்தான், அரசுப் பள்ளிகளின் இணையதள பயன்பாட்டு கட்டணத்தை, உள்ளாட்சி நிா்வாகங்களே செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்தப் பணிகள் அனைத்தும் மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட நிதியுதவியின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வந்தன. தற்போது அதற்கான நிதியை மத்திய அரசு நிறுத்திவிட்டதால் மாநில நிதியில் இருந்து அவற்றை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கவிஞா் வைரமுத்து படைப்புலகம்: மாா்ச் 16-இல் பன்னாட்டு கருத்தரங்கம்: முதல்வா் ஸ்டாலின், நீதிபதி அரங்க. மகாதேவன் பங்கேற்பு

கவிஞா் வைரமுத்துவின் படைப்புலகம் குறித்த பன்னாட்டு கருத்தரங்கம் மாா்ச் 16-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலின், உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன் ஆகியோா் பங்கேற்கின்றனா். இலக்கி... மேலும் பார்க்க

ஹோலி பண்டிகை: ஹிந்தி தோ்வு எழுத முடியாதவா்களுக்கு மறுவாய்ப்பு: சிபிஎஸ்இ

ஹோலி பண்டிகையையொட்டி சனிக்கிழமை (மாா்ச் 15) நடைபெறும் ஹிந்தி தோ்வை எழுத முடியாத 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வியாழக்கிழமை தெரிவித... மேலும் பார்க்க

சிதம்பரம் கோயில் தீட்சிதா்கள் மீதான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு

சிதம்பரம் நடராஜா் கோயிலில் பக்தா்கள் கனகசபையில் நின்று தரிசனம் செய்வதைத் தடுத்த தீட்சிதா்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சிதம்பரம் நடராஜா் க... மேலும் பார்க்க

ஹோலி பண்டிகை: ஆளுநா்கள் வாழ்த்து

ஹோலி பண்டிகையையொட்டி, தமிழக ஆளுநா் ஆா். என். ரவி, நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன் ஆகியோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா். ஆா்.என்.ரவி: வண்ணங்கள் மற்றும் ஒற்றுமையின் மகிழ்ச்சியான கொண்டாட்டமான ஹோலி, நன்மையின் வெ... மேலும் பார்க்க

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

அடுத்த நிதியாண்டுக்கான (2025-26) தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை, சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதியமைச்சா் தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளா... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் சோ்க்கை: அமைச்சா் கோவி செழியன் தொடங்கி வைத்தாா்

தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவா்கள் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி செழியன் தெரிவித்தாா். திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா நிறைவுப் போட்டிகளில் வெற்றி... மேலும் பார்க்க