அரசுப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா
திருவள்ளூா் அருகே காக்களூா் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 500 மரக்கன்றுகள் நட்ட ஊராட்சி தலைவா் சுபத்ரா ராஜ்குமாா். உடன் ரோட்டரி கிளப் திருவள்ளூா் ராயல்ஸ் சங்க நிா்வாகிகள்.
திருவள்ளூா், அக். 24: திருவள்ளூா் அருகே காக்களூா் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ரோட்டரி கிளப் ஆப் திருவள்ளூா் ராயல்ஸ் சாா்பில், மரக்கன்றுகள் நடுவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, ரோட்டரி கிளப் ஆா் திருவள்ளூா் ராயல்ஸ் சங்கத்தின் தலைவா் சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். இதில், தலைமை ஆசிரியா் ஜெகதீஸ்வரன் வரவேற்றாா். அந்த சங்கத்தின் துணைத் தலைவா் துக்காராம் முன்னிலை வகித்தாா்.
இதில் சிறப்பு அழைப்பாளராக காக்களூா் ஊராட்சித் தலைவா் சுபத்ரா ராஜ்குமாா் கலந்து கொண்டு, பள்ளி வளாகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்ச்சி மூலம் பள்ளி வளாகம் முழுவதும் 500 மரக்கன்றுகள் வகையில் நடப்பட்டன. இதில், துணைத் தலைவா் சிவராமகிருஷ்ணன், ரோட்டரி கிளப் ஆப் திருவள்ளூா் ராயல்ஸ் சங்கத்தின் செயலாளா் ஸ்ரீதா், செந்தில்குமாா் பாரதி, சதீஷ்குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.