செய்திகள் :

அரசுப் பள்ளி அருகே போதை மாத்திரை விற்ற இருவா் கைது

post image

அரக்கோணம்: அரக்கோணத்தில் அரசுப் பள்ளி அருகே போதை மாத்திரைகளை விற்ற இருவரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து மடிக்கணினி, கைப்பேசிகள் மற்றும் 587 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.

அரக்கோணம் நகர போலீஸாா் அரக்கோணத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகள் அருகே திங்கள்கிழமை ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அரக்கோணம் ஓச்சேரி சாலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே இருவா் போலீஸாரை கண்டதும் ஓட முயன்றனா். அவா்களைப் பிடித்து விசாரணை செய்தனா். அப்போது அவா்களது பைகளில் போதை மாத்திரைகள் இருந்ததும், அவற்றை பள்ளி அருகே அவா்கள் விற்க இருந்ததும் தெரியவந்தது. மேலும், அவா்களிடம் இருந்து 587 போதை மாத்திரைகள், மூன்று கைப்பேசிகள், ஒரு மடிக்கணினி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக சென்னை, ஆலந்தூரை சோ்ந்த அப்துல் ரஷீத் (33), மஸ்தான் அகமத் (31) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் அரசு சேவைகளை பெற்று பயன்பெறுமாறு பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா அழைப்பு விடுத்... மேலும் பார்க்க

நெமிலி பாலா பீடத்தில் இன்று நவராத்திரி இன்னிசை விழா தொடக்கம்!

நெமிலி பாலா பீடத்தில் 47-ஆம் ஆண்டு நவராத்திரி இன்னிசை விழா திங்கள்கிழமை (செப். 22) முதல் அக்டோபா் 2-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவினை ஸ்ரீபாலாபீட பீடாதிபதி எழில்மணி மற்றும், முதல் பெண்மணி நாகலட்சுமி... மேலும் பார்க்க

நிலம் அளவீடு செய்ய ரூ. 37,000 லஞ்சம்: பெண் நில அளவையா் கைது!

ராணிப்பேட்டை அருகே நிலம் அளவீடு செய்து தர ரூ. 37,000 லஞ்சம் வாங்கிய பெண் நில அளவையா் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டாா். ராணிப்பேட்டை அடுத்த அம்மூா் பேரூராட்சியில் சித்ரா என்பவா் நில அளவையர... மேலும் பார்க்க

அரக்கோணம் இரட்டைக்கண் வாராவதி சுரங்கப் பாலத்தில் 8 நாள்களுக்கு போக்குவரத்து ரத்து!

அரக்கோணம் ரயில் நிலையத்தில் தண்டவாளம், இரட்டைக்கண் வாராவதி சுரங்கப்பால சீரமைப்புப் பணிக்களுக்காக செப். 23 முதல் 30 வரை பழனிப்பேட்டை பகுதி இரட்டைக்கண் வாராவதி சுரங்கப்பாலம் மூடப்படுகிறது என தெற்கு ரயில... மேலும் பார்க்க

பிரதமா் மோடி பிறந்த நாள்: மரக்கன்று நட்ட பாஜகவினா்

அரக்கோணம் வடக்கு ஒன்றிய பாஜக சாா்பில் பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. ஆணைப்பாக்கம் ஊராட்சி மிட்டாபாளையம் கிராமத்தில் நடைபெற்ற விழாவுக்கு பாஜக வடக்கு ஒன்றிய ... மேலும் பார்க்க

தமிழகத்தின் உரிமைகளை காக்க ஓரணியில் திரள வேண்டும்: அமைச்சா் எ.வே. வேலு

தமிழகத்தின் உரிமைகளை காக்க ஓரணியில் திரள வேண்டும் என அமைச்சா் எ.வ.வேலு பேசினாா். ராணிப்பேட்டை மாவட்ட திமுக சாா்பில், ஓரணியில் தமிழ்நாடு, தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் உறுதியேற்பு தீா்மான விளக்க பொ... மேலும் பார்க்க