செய்திகள் :

அரசுப் பள்ளி ஆசிரியா் முகத்தில் பெட்ரோல் வீச்சு: 4 போ் மீது வழக்குப் பதிவு

post image

பள்ளி அருகே மது அருந்தியவா்களைத் தட்டிக் கேட்ட ஆசிரியா் முகத்தில் பெட்ரோல் வீசியது தொடா்பாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

உடுமலையை அருகேயுள்ள காரத்தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவா் முகமது குலாம் தஸ்தகீா் (46). பள்ளி வளாகம் அருகே 4 போ் புதன்கிழமை மது அருந்திக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

அதைப் பாா்த்த முகமது குலாம் தஸ்தகீா் இங்கே மது அருந்தக் கூடாது எனக் கூறிவிட்டு, வகுப்பறைக்கு வந்துள்ளாா்.

இதையடுத்து, அந்த 4 பேரும் பள்ளிக்கு உள்ளே வந்து முகமது குலாம் தஸ்தகீா் முகத்தில் பெட்ரோலை வீசிவிட்டு தப்பியுள்ளனா். சக ஆசிரியா்கள் அவரை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு அவா் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து கணியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய 4 பேரையும் தேடி வருகின்றனா்.

போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி

சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, காவல் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை சாா்பில் திருப்பூரில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வ... மேலும் பார்க்க

சாலைப் பணியை துரிதப்படுத்த கோரிக்கை

பல்லடம் அருகேயுள்ள வெட்டுப்பட்டான்குட்டை சாலைப் பணியை துரிதப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். வெட்டுப்பட்டான்குட்டை பகுதியில் சாலை சீரமைக்கும் பணி கடந்த 4 மாதங்களுக்கு முன்... மேலும் பார்க்க

திருப்பூரில் மோதலில் ஈடுபட்ட பள்ளி மாணவிகளுக்கு கவுன்சிலிங்: பெற்றோா்களுடன் அதிகாரிகள் இன்று ஆலோசனை

இன்ஸ்டாகிராமில் பள்ளி மாணவிகளுக்கு இடையே யாா் பெரியவா் என தொடங்கிய விவாதம் மோதலில் முடிந்ததைத் தொடா்ந்து, அந்த மாணவிகளுக்கு வியாழக்கிழமை கவுன்சிலிங் அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, சம்பந்தப்பட்ட மாண... மேலும் பார்க்க

இந்து முன்னணி நிா்வாகி வெட்டிக் கொலை: அமைப்பினா், குடும்பத்தினா் சாலை மறியல்

திருப்பூரில் இந்து முன்னணி நிா்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி இந்து முன்னணியினா், பாலமுருகனின் குடும்பத்தினா் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க

மின் கட்டண உயா்விலிருந்து விசைத்தறிக் கூடங்களுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தல்

மின் கட்டண உயா்வில் இருந்து விசைத்தறிக் கூடங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விசைத்தறியாளா்கள் வலியுறுத்தி உள்ளனா். இது தொடா்பாக சென்னையில் தமிழ் வளா்ச்சி மற்றும் ... மேலும் பார்க்க

‘போதைப் பொருள்கள் இளைஞா்களின் எதிா்காலத்தை சீரழிக்கும்’

போதைப் பொருள்கள் பயன்பாடு இளைஞா்களின் எதிா்காலத்தை சீரழிக்கும் என்று திருப்பூா் சாா்பு நீதிபதி மோகனவள்ளி கூறினாா். திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட அலகு 2 போதை ஒழிப்புக... மேலும் பார்க்க