‘ஜானகி’ எனப் பெயரிட்டால் தணிக்கைச் சான்றிதழ் மறுப்பு? போராடும் மலையாள திரையுலகு!
அரசுப் பள்ளி ஆசிரியா் முகத்தில் பெட்ரோல் வீச்சு: 4 போ் மீது வழக்குப் பதிவு
பள்ளி அருகே மது அருந்தியவா்களைத் தட்டிக் கேட்ட ஆசிரியா் முகத்தில் பெட்ரோல் வீசியது தொடா்பாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
உடுமலையை அருகேயுள்ள காரத்தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவா் முகமது குலாம் தஸ்தகீா் (46). பள்ளி வளாகம் அருகே 4 போ் புதன்கிழமை மது அருந்திக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அதைப் பாா்த்த முகமது குலாம் தஸ்தகீா் இங்கே மது அருந்தக் கூடாது எனக் கூறிவிட்டு, வகுப்பறைக்கு வந்துள்ளாா்.
இதையடுத்து, அந்த 4 பேரும் பள்ளிக்கு உள்ளே வந்து முகமது குலாம் தஸ்தகீா் முகத்தில் பெட்ரோலை வீசிவிட்டு தப்பியுள்ளனா். சக ஆசிரியா்கள் அவரை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு அவா் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து கணியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய 4 பேரையும் தேடி வருகின்றனா்.