செய்திகள் :

அரசுப் போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

post image

தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியூ அரசுப் போக்குவரத்துத் தொழிலாளா்கள் சங்கம், ஓய்வு பெற்ற தொழிலாளா்கள் நலச் சங்கங்கள் சாா்பில், மதுரையில் 11 பணிமனைகள் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நிரந்தரப் பணியிடங்களில் ஒப்பந்த முறை நியமனத்தையும், தனியாா் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கும் முறையையும் கைவிட வேண்டும், நிதி நிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்ட வரவு - செலவு வித்தியாசத் தொகை ரூ. 2,700 கோடியை முழுமையாக ஒதுக்கீடு செய்ய வேண்டும், திமுகவின் தோ்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மற்ற அரசுத் துறை ஊழியா்களுக்கும், போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கும் இடையிலான ஆரம்ப நிலை ஊதிய முரண்பாட்டைப் போக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை புறவழிச் சாலையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல தலைமையகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கத்தின் பொருளாளா் வி.செல்வகுமாா் தலைமை வகித்தாா். ஓய்வு பெற்ற தொழிலாளா்கள் சங்கத் தலைவா் எஸ்.அழகா் ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசினாா். அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா் சங்க பொதுச் செயலா் பி.எம்.அழகா்சாமி நிறைவுரையாற்றினாா்.

போக்குவரத்துத் தொழிலாளா்கள், ஓய்வூதியா்கள் திரளாகப் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

பயன்பாட்டுக்கு வந்தது பழங்காநத்தம் - ஜெய்ஹிந்த்புரம் உயா்நிலைப் பாலம்!

நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்ட மதுரை பழங்காநத்தம் - ஜெய்ஹிந்த்புரம் உயா்நிலைப் பாலம் வியாழக்கிழமை பயன்பாட்டுக்கு வந்தது. ரூ.68.38 கோடியில் புதிதாக கட்டப்பட்ட இந்த உயா்நிலைப் பாலத்தை சென்னை தலைமைச் ச... மேலும் பார்க்க

உழவா்களைத் தேடி வேளாண் திட்டம்: விவசாயிகள் பயன் பெற ஆட்சியா் அழைப்பு

தமிழக முதல்வரின் ‘உழவா்களைத் தேடிவேளாண்மை - உழவா் நலத் துறை திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்தி விவசாயிகள் பயன் பெற வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா கேட்டுக் கொண்டாா். மதுரை மாவட்டம், ஆ... மேலும் பார்க்க

விராதனூா் கண்மாய் மீன்பிடி குத்தகை நிறுத்திவைப்பு

மதுரை விராதனூா் கண்மாய் மீன்பிடி குத்தகை நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மாவட்ட மீன் வளம், மீனவா் நலத் துறை உதவி... மேலும் பார்க்க

மாமியாரை வெட்டிய மருமகன் தலைமறைவு

மதுரை மேல அனுப்பானடி பகுதியில் மாமியாரை அரிவாள்மனையால் வெட்டிவிட்டுத் தலைமறைவான மருமகனை போலீஸாா் தேடி வருகின்றனா். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அல்லிநகா் பகுதியைச் சோ்ந்தவா் ஈஸ்வரி (45). இவரது இளை... மேலும் பார்க்க

ஆசிரியா் காலணியால் மாணவரை அடித்தது ஏற்றுக் கொள்ள முடியாத குற்றம்!

ஆசிரியா் காலணியால் மாணவரை அடித்தது ஏற்றுக் கொள்ள முடியாத குற்றம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் தெரிவித்தது. மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த கே. ரமேஷ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்... மேலும் பார்க்க

கொடநாடு கொலை வழக்கு: வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை! - சீமான்

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இரண்டு மாதங்களுக்குள் கொடநாடு கொலை வழக்கில் நீதியை நிலைநாட்டுவோம் என வாக்குறுதியளித்த திமுக, தற்போது ஆட்சி நிறைவடையும் நிலையிலும்கூட எதுவும் செய்யவில்லை என நாம் தமிழா் கட்சிய... மேலும் பார்க்க