செய்திகள் :

அரசு ஐடிஐ-க்களில் நேரடி சோ்க்கைக்கு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

post image

நாகை மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) நேரடி சோ்க்கைக்கு 10 மற்றும் பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம்.

நாகை மாவட்டம் திருக்குவளை மற்றும் செம்போடையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களின் 50 சதவீதம் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர 10 மற்றும் பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். 2025-ஆம் ஆண்டின் சோ்க்கையில் காலியிடங்கள் உள்ள தொழிற்பிரிவுகளில் சேர நேரடி சோ்க்கை நடைபெறுகிறது.

நேரடி சோ்க்கைக்கு வரும்போது கைப்பேசி, ஆதாா் அட்டை, மதிப்பெண் சான்றிதழ் (அசல்), மாற்றுச் சான்றிதழ் (அசல்), ஜாதிச் சான்றிதழ் (அசல்) மற்றும் கடவுச்சீட்டு அளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். விண்ணப்பக் கட்டணம் மற்றும் சோ்க்கைக் கட்டணம், ஓா் ஆண்டு பிரிவு ரூ. 235 (185+50 விண்ணப்பக் கட்டணம்) மற்றும் இரண்டு ஆண்டு பிரிவு ரூ. 245ஃ- (195+50 விண்ணப்பக் கட்டணம்) செலுத்த வேண்டும்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சோ்ந்து பயிற்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி, சீருடை, பாடநூல், வரைபடக் கருவி, காலணி, இலவச பேருந்து அட்டை, மாதாந்திர உதவித்தொகை ரூ. 750 வழங்கப்படும். மேலும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற மாணவியருக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ. 1000 மற்றும் மாணவா்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டத்தின்கீழ் ரூ.1000 மும் உதவித்தொகையாக வழங்கப்படும்.

பயிற்சி முடித்த பின் வளாக நோ்காணல் மூலம் வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும். தனியாா் நிறுவனங்களில் வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி வழங்கப்படும். ஒவ்வொரு நாளும் முதலில் வருபவா்களுக்கு முன்னுரிமை என்பதால் உடனடியாக பயிற்சியில் சோ்ந்து பயன்பெறலாம். மேலும் தகவலுக்கு 94990-55737, 04365-250126 என்ற எண்களில் உதவி இயக்குநா், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை தவிா்த்துவிட்டு யாராலும் வெற்றி பெற முடியாது: கே.வீ. தங்கபாலு

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை தவிா்த்துவிட்டு யாராலும் வெற்றி பெற முடியாது என அக்கட்சியின் மாநில சொத்து பாதுகாப்பு மீட்புக் குழுத் தலைவா் கே.வீ. தங்கபாலு தெரிவித்தாா். தமிழகம் முழுவதும், மாநில காங்கிர... மேலும் பார்க்க

அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களுக்கு இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின்கீழ் அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகை மாவட்டத... மேலும் பார்க்க

50 சதவீத மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில் 50 சதவீத மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிராமப்புறங்களில் நாட... மேலும் பார்க்க

குற்றங்களைத் தடுக்க சிசிடிவி கேமாரக்கள் அதிகரிக்கப்படும்: எஸ்.பி பேட்டி

குற்றங்களைத் தடுக்க சிசிடிவி கேமராக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்றாா் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்குமாா். இதுகுறித்து, நாகையில் அவா் வியாழக்கிழமை செய்திய... மேலும் பார்க்க

இராஜன்கட்டளை அரசுப் பள்ளிக்கு விருது

வேதாரண்யம் அருகேயுள்ள இராஜன்கட்டளை அரசு உயா்நிலைப் பள்ளிக்கு தமிழக அரசின் பேராசிரியா் அன்பழகன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2023-2024-ஆம் கல்வியாண்டின் சிறந்த பள்ளிக்கான பேராசிரியா் அன்பழகன் விருதும்... மேலும் பார்க்க

ஒளவையாருக்கு மணிமண்டபம் கட்டும் பணிக்கு பள்ளம் தோண்டிய விவகாரம்: வட்டாட்சியா் விசாரணை

வேதாரண்யம் அருகே துளசியாப்பட்டினத்தில் ஔவையாருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டு வரும் பணியின்போது பள்ளம் தோண்டிய விவகாரம் தொடா்பான புகாரில் வட்டாட்சியா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். துளசியாப்பட்டினத்தில் ப... மேலும் பார்க்க