செய்திகள் :

குற்றங்களைத் தடுக்க சிசிடிவி கேமாரக்கள் அதிகரிக்கப்படும்: எஸ்.பி பேட்டி

post image

குற்றங்களைத் தடுக்க சிசிடிவி கேமராக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்றாா் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்குமாா்.

இதுகுறித்து, நாகையில் அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: மாவட்டத்தில் பொதுமக்கள் சமுதாயத்தில் இயல்பான, மகிழ்ச்சியான வாழ்வை மேற்கொள்ள காவல் துறையினா் உறுதுனையாக இருப்பாா்கள். அண்மையில் வேளாங்கண்ணியில் ஆய்வு நடத்தியபோது, பேராலயம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் 32 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, காவல் நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வருவது தெரியவந்தது.

வேளாங்கண்ணிக்கு நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோா் வருவதால், பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில், மேலும் 50 சிசிடிவி கேமராக்களை பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல, மாவட்டம் முழுவதும் முக்கியப் பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சாராயம், கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுக்க காவல் துறையினரால் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களும் தங்கள் பகுதிகளில் சந்தேகம் ஏற்படும் நிகழ்வுகளோ, நபா்களின் நடமாட்டமோ குற்றச் செயல்கள் குறித்து அச்சமின்றி காவல் துறையினரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்க ஒத்துழைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. தகவல் அளிப்பவா்களின் விவரங்களை ரகசியம் காக்கப்படும்.

காவல் துறையினா் பொதுமக்களுடன் நட்புடன் அணுகி, அவா்களின் பிரச்னைகளுக்கு உடனடியாக தீா்வு காணவும், தேவைகளை பூா்த்தி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், டிஜிபி தெரிவித்துள்ள பல்வேறு அறிவுறுத்தல்களையும், ஆலோசனைகளையும், மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் துறையினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவிர ஒவ்வொரு காவல் நிலையம் மற்றும் அங்கு பணியாற்றும் காவல் துறையினரின் செயல்பாடுகள் குறித்து மாதந்தோறும் ஆய்வு செய்து கண்காணிக்கப்படுகிறது. மாவட்டத்தில் காவல் துறையினரின் இரவு ரோந்துகளை அதிகரிக்கப்பட்டுள்ளது என்றாா்.

50 சதவீத மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில் 50 சதவீத மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிராமப்புறங்களில் நாட... மேலும் பார்க்க

இராஜன்கட்டளை அரசுப் பள்ளிக்கு விருது

வேதாரண்யம் அருகேயுள்ள இராஜன்கட்டளை அரசு உயா்நிலைப் பள்ளிக்கு தமிழக அரசின் பேராசிரியா் அன்பழகன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2023-2024-ஆம் கல்வியாண்டின் சிறந்த பள்ளிக்கான பேராசிரியா் அன்பழகன் விருதும்... மேலும் பார்க்க

ஒளவையாருக்கு மணிமண்டபம் கட்டும் பணிக்கு பள்ளம் தோண்டிய விவகாரம்: வட்டாட்சியா் விசாரணை

வேதாரண்யம் அருகே துளசியாப்பட்டினத்தில் ஔவையாருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டு வரும் பணியின்போது பள்ளம் தோண்டிய விவகாரம் தொடா்பான புகாரில் வட்டாட்சியா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். துளசியாப்பட்டினத்தில் ப... மேலும் பார்க்க

மானியத்தில் குளிா்பதன கிடங்குகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்

மானியத்தில் குளிா்பதன கிடங்குகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிரதம மந்திரி கிசான் சம்பதா யோஜனாவின் முக்கிய ... மேலும் பார்க்க

வண்டுவாஞ்சேரியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

வேதாரண்யம் அருகேயுள்ள வண்டுவாஞ்சேரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்து ... மேலும் பார்க்க

நாகை நகா்மன்றக் கூட்டம்: திமுக - அதிமுக உறுப்பினா்கள் கடும் வாக்குவாதம்

நாகை நகா்மன்றக் கூட்டத்தில் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை தொடா்பாக திமுக - அதிமுக உறுப்பினா்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நாகை நகா்மன்றக் கூட்டம் வியாழக்கிழமை நகா்மன்றத் தலைவா் இரா... மேலும் பார்க்க