50 சதவீத மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம்
நாகை மாவட்டத்தில் 50 சதவீத மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிராமப்புறங்களில் நாட்டுக்கோழி வளா்ப்பதில் திறன் கொண்ட பயனாளிகளுக்கு சிறிய அளவிலான (250 கோழிகள்) நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க 50 சதவீத மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் தோ்ந்தெடுக்கப்படும் பயனாளிகளுக்கு 250 எண்ணிக்கையிலான 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள் 50 சதவீதம் மானிய விலையில் வழங்கப்படும்.
பண்ணை அமைக்க தேவையான கோழிக்கொட்டகை கட்டுமான செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு, 4 மாதங்களுக்கு தேவையான தீவனச் செலவு என மொத்தச் செலவில் (ரூ.3,31, 250) 50 சதவீதம் (ரூ.1,65, 625) மானியமாக மாநில அரசால் வழங்கப்படும். எஞ்சிய 50 சதவீத தொகையை தனது சொந்த ஆதாரங்கள் மூலம் திரட்டிக்கொள்ள வேண்டும்.
இத்திட்டத்தில் பயனாளிகளிடம் கோழிக்கொட்டகை அமைக்க மின் இணைப்புடன் கூடிய 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். மேலும் இப்பகுதி மனித குடியிருப்புகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் பயனாளிகளிடமிருந்து ஆதாா் அட்டை நகல், பண்ணை அமையவிருக்கும் இடத்திற்கான சிட்டா-அடங்கல் நகல் 50 சதவீத தொகை அளிப்பதற்கான ஆதார ஆவணங்கள் (வங்கி இருப்பு விவரம், வங்கிக் கடன் ஒப்புதல் விவரம்) 3 ஆண்டுகளுக்கு பண்ணையை பராமரிப்பதற்கான உறுதிமொழி, 2022 முதல் 2025 ஆம் ஆண்டு வரை நாட்டுக்கோழி வளா்ப்பு திட்டத்தின் கீழ் பயனடையவில்லை என சான்றிதழ் பெறப்பட வேண்டும்.
பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோா், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். நாகை மாவட்டத்தில் குறைந்தபட்சம் 10 பயனாளிகள் தோ்ந்தெடுக்கப்படுவா். இதில் 30 சதவீதம் தாழ்த்தப்பட்டவா்களுக்கு வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோா் அருகிலுள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி ஜூலை 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.