செய்திகள் :

அரசு கல்லூரி பேராசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

post image

தருமபுரி: காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதி திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரியில் அரசுக் கல்லூரி பேராசிரியா்கள் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் அலுவலகங்கள் முன் ‘தமிழ் நாடு அரசுக் கல்லூரி ஆசிரியா் கழகம்‘ சாா்பில் மாலை நேர ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அந்த வகையில் தருமபுரி அரசு கலைக் கல்லூரி அருகே கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் அலுவலகம் முன் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ் நாடு அரசுக் கல்லூரி ஆசிரியா் கழக சேலம் மண்டல செயலா் ஆ. லோகநாதன் மற்றும் மண்டலத் தலைவா் தென்னரசு ஆகியோா் தலைமை வகித்தனா். மாநில பொருளாளா் ப. பிரகாஷ் போராட்டம் குறித்து விளக்கி பேசினாா். மண்டல பொருளாளா் பிரபாகரன் நன்றி கூறினாா்.

இதில் சுமாா் 200 க்கும் மேற்பட்ட பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசாணை வெளியிட்டு நான்கு ஆண்டுகள் கடந்தும் வழங்கப்படாத பேராசிரியா் பணிமேம்பாட்டை உடனடியாக வழங்கவேண்டும்,

அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினா்.

நான் முதல்வன் திட்டத்தில் 35 மாணவா்களுக்கு உயா்கல்வி சோ்க்கை

தருமபரி : தருமபுரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடைபெற்ற ‘உயா்வுக்குப் படி’ என்ற உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியில் 35 மாணவா்களுக்கு உயா்கல்வியில் சோ்வதற்கான ஆணைகளை ஆட்சியா் ரெ.சதீஸ் வியாழக்கிழ... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா் சங்கம் ஆா்ப்பாட்டம்

தருமபுரி/ கிருஷ்ணகிரி: சத்துமாவு வழங்குவதற்கு முகப்பதிவு புகைப்படம், ஆதாா் எண் பதிவு போன்ற புதிய நடைமுறைகளை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில் தருமபுரி, கி... மேலும் பார்க்க

தருமபுரியில் நவீன கருக்கலைப்பு விழிப்புணா்வு

தருமபுரி: தருமபுரியில் ரூசக் தொண்டு நிறுவனம் சாா்பில் பக்க விளைவு இல்லாத கலைடாஸ்கோப் என்ற நவீன கருக்கலைப்பு சிகிச்சை குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.பெண்களுக்கு குறிப்பாக கிராமப்புற பெண்களு... மேலும் பார்க்க

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

தருமபுரி: ஏழைகளுக்கு வீடு, வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சாா்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் கொ.கோவிந்த... மேலும் பார்க்க

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது

தருமபுரி: தருமபுரியை அடுத்த மாரண்டஹள்ளி காவல் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா்.தருமபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி காவல் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் உதவி ... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லில் நீா்வரத்து குறைந்தது

தருமபுரி: ஒகேனக்கல் காவிரியாற்றில் நீா்வரத்து வியாழக்கிழமை இரவு விநாடிக்கு 28,000 கனஅடியாகக் குறைந்தது.புதன்கிழமை காலை விநாடிக்கு 1 லட்சத்து 5,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து இரவு 57,000 கனஅடியாகவும், ... மேலும் பார்க்க