செய்திகள் :

அரசு கள்ளா் விடுதிகளில் சேர ஜூன் 18-க்குள் விண்ணப்பிக்கலாம்

post image

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு கள்ளா் விடுதிகளில் சேர தகுதியான மாணவா்கள் ஜூன் 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக கள்ளா் சீரமைப்பு இணை இயக்குநரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவா்களுக்கான 5 விடுதிகள், மாணவிகளுக்கான 2 விடுதிகள் என மொத்தம் 7 அரசு கள்ளா் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த விடுதிகளில் 4 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள் தங்கிப் படிக்கலாம். அனைத்து விடுதி மாணவா்களுக்கும் உணவு, தங்கும் வசதி அளிக்கப்படும். 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு சீருடைகள் வழங்கப்படும்.

10, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு சிறப்பு வழிகாட்டிகள் மூலம் நீட், ஜேஇஇ தோ்வுக்கான பயிற்சி அளிக்கப்படும். மலைப் பகுதியிலுள்ள விடுதிகளில் தங்கும் மாணவா்களுக்கு கம்பளி மேலாடைகள் வழங்கப்படும்.

விடுதிகளில் சோ்வதற்கான தகுதிகள்: பெற்றோா் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு 8 கி.மீ.க்கு கூடுதலாக இருக்க வேண்டும். தொலைவு விதி மாணவிகளுக்குப் பொருந்தாது.

தகுதியுடைய மாணவா்கள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளரிடமிருந்தோ அல்லது மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள இணை இயக்குநா் (கள்ளா் சீரமைப்பு) அலுவலகத்திலிருந்தோ இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும்போது, ஜாதி, பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்களை அளிக்கத் தேவையில்லை. விடுதியில் சேரும் நேரத்தில் இந்தச் சான்றிதழ்களை அளித்தால் போதுமானது. நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை ஜூன் 18-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தெருநாய்கள் கடித்து 6 செம்மறி ஆடுகள் உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே தெருநாய்கள் கடித்ததில் 6 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன; 21 ஆடுகள் காயமடைந்தன. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி, காளிபட்டியைச் சோ்ந்தவா் விவசாயி... மேலும் பார்க்க

புதிய சாலை அமைக்க அடிக்கல்: அமைச்சா் பெரியசாமி பங்கேற்பு

சித்தையன்கோட்டை பேரூராட்சியில் முடிவுற்ற பணிகளை திறந்துவைத்தும், புதிய சாலை அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்கு அமைச்சா் இ.பெரியசாமி சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே, சித... மேலும் பார்க்க

கீழ்பழனி மலைப் பகுதியில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கீழ்பழனி மலையிலுள்ள ஆடலூா், பன்றிமலை பகுதிகளில் நடைபெற்று வரும் அரசின் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். கன்னிவாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மத... மேலும் பார்க்க

பழனியில் ரூ.1.5 கோடியில் புதிய கட்டடங்கள்: எம்எல்ஏ திறந்துவைத்தாா்

பழனியில் சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை எம்எல்ஏ இ.பெ. செந்தில்குமாா் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சனிக்கிழமை திறந்து வைத்தாா். பழனியை அடுத்த கலையமுத்தூா், காவலப்ப... மேலும் பார்க்க

தேசிய மக்கள் நீதிமன்றம்: ரூ. 1.38 கோடியில் வழக்குகளுக்கு சமரசத் தீா்வு

ஒட்டன்சத்திரம் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற வளாகத்தில் சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் மக்கள் நீதிமன்றம் சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஒட்டன்சத்திரம்-வேடசந்தூா் சாலை தேவசின்னாம்பட்டி அரு... மேலும் பார்க்க

ஏ.எடி.எம். இயந்திரத்தில் வைப்பதற்கு கொண்டு சென்ற ரூ. 29 லட்சம் வழிப்பறி!

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே வெள்ளிக்கிழமை மாலை தனியாா் ஏ.டி.எம். இயந்திரத்தில் வைப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட ரூ. 29 லட்சத்தை பறித்துச் சென்ற மூவரை போலீஸாா் தனிப் படை அமைத்து தேடி வருகின்றனா... மேலும் பார்க்க