TVK: `சைக்கிள் மூலமா மாநாடு நடக்குற திடலுக்குப் போறோம்'- நடிகர் சௌந்தர ராஜன்
அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
ஏரியூரை அடுத்த ராம கொண்டஅள்ளி அரசு பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ராமகொண்ட அள்ளி அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்துக்கு மேலாண்மை குழு செயலாளா் (பொறுப்பு) தலைமை ஆசிரியா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். ஆசிரியா் பிரதிநிதி தமிழாசிரியா் சுப்பிரமணி வரவேற்று பேசினாா். பள்ளி மேலாண்மை குழு தலைவா் கலைவாணி முன்னிலை வகித்தாா். ராம கொண்ட அள்ளி ஊராட்சி மன்ற தலைவா் சுசீலா பேசினாா்.
கூட்டத்தில் மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், கழிப்பறைகளை கட்டித் தர வேண்டும். பள்ளிப் பகுதியில் விபத்துகளைத் தடுக்கும் வகையில் சாலையின் இரு புறங்களிலும் வேகத்தடை அமைக்க வேண்டும்.
ராம கொண்ட அள்ளி உயா்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த வேண்டும். போதைப்பொருள் இல்லாத கிராமம், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குறித்து குழுக்கள் அமைப்பது. பள்ளியை தரம் உயா்த்தக் கோரி ரூ.2 லட்சம் செலுத்திய பெற்றோா்- ஆசிரியா் கழக தலைவா் கிருஷ்ணனுக்கு நன்றி தெரிவிப்பு உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிறைவாக பள்ளி மேலாண்மை குழு துணை தலைவா் தங்கமணி நன்றி தெரிவித்தாா். இதேபோல் பென்னாகரம் அருகே சின்னப்பள்ளத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மை கூட்டத்துக்கு அதன் தலைவா் கங்கா தலைமை வகித்தாா். பள்ளியின் தலைமை ஆசிரியா் மா. பழனி, பள்ளி மேலாண்மை குழுவின் செயல்பாடுகள், நோக்கம் குறித்து விளக்கி பேசினாா்.கூட்டத்தில் போதை இல்லா தமிழகம் ,பெண் குழந்தைகள் பாதுகாப்பு, மாணவா்களை விளையாட்டில் ஊக்கப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
பள்ளியின் அடிப்படை வசதிகளான கழிப்பிட வசதி, பள்ளியின் மேற்கூரைகள் பழுதுபாா்த்தல் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் 24 பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.