செய்திகள் :

அரசு மருத்துவமனைகளில் கட்டண சிகிச்சைப் பிரிவு ஏன்? - மா. சுப்பிரமணியன் விளக்கம்

post image

அனைத்துப் பிரிவினருக்கும் மருத்துவ வசதியை வழங்க வேண்டும் என்பதற்காகத்தான் அரசு மருத்துவமனைகளில் கட்டண சிகிச்சைப் பிரிவு தொடங்கப்படுவதாக மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்

புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அளித்த பேட்டி:

அனைத்துத் தரப்பினருக்கும் மருத்துவ வசதி வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் கட்டண சிகிச்சைப் பிரிவு தொடங்கப்படுகிறது. மருந்து மாத்திரைகள் அனைவருக்கும் ஒன்றுதான்.

பொதுவார்டில் இருக்க விரும்பாதவர்களுக்கு, அவர்களின் தனியுரிமை வசதிக்காக கட்டணம் பெறப்பட்டு அறை வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் கடந்த 4 ஆண்டுகளில் 29,771 மருத்துவப் பணியாளர்கள் டிஎன்பிஎஸ்ஸி, எம்ஆர்பி, என்எச்எம் மற்றும் மாவட்ட மருத்துவச் சங்கம் ஆகியவற்றின் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

43,155 மருத்துவப் பணியாளர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அடுத்த 2026ஆம் ஆண்டில் ஏற்படப்போகும் காலிப்பணியிடங்களுக்கும் சேர்த்தே 2,642 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களைப் பொருத்தவரை இப்போது மருத்துவர்கள் எண்ணிக்கை கூடுதலாகத்தான் இருக்கின்றனர்.

பணி நியமன ஆணைகளைப் பெற்றும் 3 மாதங்களுக்குள் பணியில் சேராதவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் வராதபட்சத்தில் எம்ஆர்பி தேர்வில் அவர்களுக்கு அடுத்த இடத்தில் வந்தோருக்கு பணி ஆணைகள் வழங்கப்படும்.

கரோனாவைப் பொருத்தவரை தமிழ்நாட்டில் சேகரிக்கப்பட்ட 19 மாதிரிகளின் படி வீரியம் குறைந்த ஒமைக்ரான் வகையைச் சேர்ந்தது. எனவே அச்சப்பட வேண்டியதில்லை.

இணை நோய்கள் இருப்போர், நோய் எதிர்ப்பாற்றல் குறைந்தோர், கருவுற்ற பெண்கள், முதியோர் மட்டும் முகக்கவசம் அணியலாம். கட்டாயமல்ல.

இதுவரை நாடு முழுவதுமே கரோனா தொற்றால் இறப்பு இல்லை. பல மடங்கு வேகமாகப் பரவும் கேரளத்திலும் கரோனா இறப்புகள் இல்லை.

தமிழ்நாட்டில் மருத்துவக் கட்டமைப்புகள் அதிகரிப்பு மற்றும் மருத்துவப் பணியாளர்களின் சேவையால் அரசு மருத்துமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3 மடங்கு உயர்ந்துள்ளது என்றார் மா. சுப்பிரமணியன்.

எம்.பி. ஆனார் கமல்! 6 பேர் போட்டியின்றி தேர்வானதாக அறிவிப்பு!

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் உள்பட 6 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். போதிய எம்எல்ஏ-க்கள் ஆதரவுடன் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த க... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 15 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடக்கு ஆந்திர - தெற்கு ஒடிசா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி... மேலும் பார்க்க

தென்காசி முதியோர் இல்லத்தில் 3 பேர் பலி! உணவு ஒவ்வாமை காரணமா?

தென்காசியில் தனியார் முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமையால் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சுந்தரபாண்டியபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் முதியோர்... மேலும் பார்க்க

கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில்,வடக்கு ஆந்திர - தெற்கு ஓரிசா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற... மேலும் பார்க்க

மதுரை எய்ம்ஸ் என்ன விண்வெளி நிலையமா? மு.க. ஸ்டாலின் கேள்வி

சேலம்: 10 ஆண்டுகளுக்கும் மேலாகக் கட்ட, மதுரை எய்ம்ஸ் என்ன விண்வெளி மையமா என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார்.சேலம் வந்திருக்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று காலை, ம... மேலும் பார்க்க

தமிழகத்தில் அடுத்த வாரம் எங்கெல்லாம் கனமழை பெய்யும்?

தமிழகத்தில் அடுத்த வாரம் கனமழை பெய்யும் மாவட்டங்களை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில், வடக்கு ஆந்திர - தெற்கு ஓரிசா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சு... மேலும் பார்க்க