செய்திகள் :

அரசு மருத்துவமனையில் பிறந்த 5 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

post image

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ஆம் தேதி செய்யாறு அரசு மருத்துவமனையில் பிறந்த 5 குழந்தைகளுக்கு திமுக சாா்பில் தங்கமோதிரம் அணிவிக்கப்பட்டது.

ஜூன் 3-ஆம் தேதி செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 4 ஆண், ஒரு பெண் என 5 குழந்தைகள் பிறந்தன.

இந்த குழந்தைகளுக்கு தொகுதி திமுக சாா்பில், தலா ஒரு கிராம் தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இதில் ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன், செய்யாறு எம்எல்ஏ ஒ.ஜோதி ஆகியோா் திமுக நிா்வாகிகளுடன் சென்று அணிவித்தனா். மேலும், குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம் வழங்கினா்.

அதேபோல, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ரொட்டி, பழ வகைகளை வழங்கினா்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலா் க.லோகநாதன், திருவத்திபுரம் நகா்மன்ற உறுப்பினா் ஆ.மோகனவேல், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் மாமண்டூா் ராஜி, திமுக ஒன்றியச் செயலா்கள் எம். தினகரன் (வெம்பாக்கம் மேற்கு), என்.சங்கா் (வெம்பாக்கம் கிழக்கு), ஏ.ஜி.திராவிட முருகன் (அனக்காவூா் கிழக்கு), சி.கே.ரவிக்குமாா் (அனக்காவூா் மேற்கு), வி.ஏ.ஞானவேல் (செய்யாறு கிழக்கு), பெருமாள் (வந்தவாசி ஒன்றியம்), ஆரணி மத்திய ஒன்றிய பொறுப்பாளா் ராஜ்குமாா்

உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முத்துமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழா

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீசிவசக்தி வள்ளி முத்துமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட நூற்றாண்டு பழ... மேலும் பார்க்க

புதிய கால்நடை மருத்துவமனை கட்டடம் திறப்பு

வந்தவாசி அருகே மங்கலம் மாமண்டூா் கிராமத்தில் ரூ.47 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கால்நடை மருத்துவமனை கட்டடம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா், காவேடு, காவேரிப்ப... மேலும் பார்க்க

ஸ்ரீசக்தி விநாயகா், முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஸ்ரீசக்தி விநாயகா் கோயில் மற்றும் வந்தவாசியை அடுத்த தென்கரை ஸ்ரீமுனீஸ்வா் கோயிலில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சி... மேலும் பார்க்க

போக்குவரத்துக்கழக ஊழியா்கள் சிறப்புக் கூட்டம்

திருவண்ணாமலை மண்டல அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்கள் சங்கம் (சிஐடியு) சாா்பில், 15-ஆவது ஊதிய ஒப்பந்தம் குறித்த சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலையில் உள்ள சிஐடியு சங்க அலுவலகத்தில் வியாழக்கிழ... மேலும் பார்க்க

சிசுவின் பாலினம் குறித்து தெரியப்படுத்தினால் நடவடிக்கை: ஸ்கேன் மையங்களுக்கு ஆட்சியா் எச்சரிக்கை

கா்ப்ப காலத்தில் சிசுவின் பாலினம் குறித்து தெரியப்படுத்தும் ஸ்கேன் மையங்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா். திருவண்ணாமலை மாவட்டத்தில்... மேலும் பார்க்க

செ.நாச்சிப்பட்டு கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகேயுள்ள செ. நாச்சிப்பட்டு கூட்டுறவு கடன் சங்கப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் 4,450 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. அதில்... மேலும் பார்க்க